42- கேள்வி
411-செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாம் தலை.
செவிவழியாகப் பெறும் செய்திகளே அறிவுப்பூர்வமான சிறந்த செல்வமாகும்.இது தேவை.
412-செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
செவி செய்திகளை கேட்கும் நிலையில்லாதபோது ,வயிறு உணவிற்காக பசிக்க ஆரம்பிக்கும்.இது தேவை.
413-செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர்
நிலத்து.
குறைந்த உணவருந்தும் சான்றோர்க்கு ஒப்பாவர்,செவி வழி கேள்வி ஞானம்
உடையவர்.இது தேவை.
414-கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாந் துணை.
கற்றவரிடம் செய்திகளை கேட்டு தெரிந்து கொள்வதென்பது,நடை தளர்ந்தவனுக்கு
பயன்படும் ஊன்று கோலைப் போன்றதாகும்.இது தேவை .
415-இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
ஒழுக்க முடையவரின் அறிவுரையானது,வழுக்கு நிலத்தில் நடப்பவனுக்கு உதவும்
ஊன்று கோலைப் போன்றதாகும். இது தேவை.
416-எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
நல்லவற்றை கேட்க கேட்க ஒருவரை ஆன்றோராக்கும்.இது தேவை.
417-பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
தவறான செய்திகளை கேட்டாலும் நன்கு நுணுகி ஆய்வறியும் திறன் கொண்டவர்கள் அறிவற்ற முறையில் பேச
மாட்டார்கள்.இது தேவை .
418-கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
நல்லோர் உரையை கேட்கமாட்டாத காதுகள் இருந்தும் அவை செவிட்டுக் காதுகளாகவே
கருதப்படும்.இது தேவை.
419-நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது.
நுண்ணிய கேள்வியறிவில்லாதவர்கள் அடக்கமாகவும், அமைதியன குணம் படைத்தவர்களாகவும் இருக்க இயலாது.இது தேவை.
420-செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினு மென்.
சுவையான (இசை?) சொற்களை கேட்காமல்,வாயிக்கு சுவை தேடுவது உயிருடன் இருக்கும் மிருகங்களுக்கு
ஒப்பாவர்.இது தேவை .
No comments:
Post a Comment