54-பொச்சாவாமை
531-இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
மகிழ்ச்சியினால் தக்க தருணத்தில் நினைவு கொள்ள வேண்டியதை மறந்துவிட்டால் ,அது சினத்தினால்
ஏற்படும் விளைவை விட தீமையானது.இது தேவை.
532-பொச்சார்பு கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
வறுமை அறிவை அழிக்கும்,மறதி புகழை அழித்துவிடும்.உண்மைதான் .இது தேவை.
533-பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு.
மறதி கொண்டவர்களுக்கு புகழ் சேராது.எந்நூல் படித்தவர்க்கும் இதே நிலைதான்.
534-அச்சமுடையார்க் கரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு
நன்கு.
கோட்டையில் வாழ்ந்தாலும் பயம் கொண்டவர்களால் எந்தப்பயனும் இல்லை,அதுபோல உயர்நிலை
மனிதர்களுக்கு மறதியினால் எந்த பயனும் இல்லை.இது தேவை.
535-முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
முன் யோசனையோடு தன்னை காக்க தவறியவன், பிழையை எண்ணி பின்னாளில் வருந்த
நேரிடும். இது தேவை.
536-இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்.
மறதி இல்லா மனிதன் என ஒருவர் பெயர் எடுத்தாலே அதைவிட அவருக்கு நன்மை
தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.இது தேவை.
537-அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.
மறதி இல்லாமல் அக்கறையுடன்
செயல்பட்டாலே அரிதான காரியம் என்பது ஏதுமில்லை.இது தேவை.
538-புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்தார்க் கெழுமையும் இல்.
மெச்சத் தக்க காரியங்களை செய்யாமல் புறக்கணிப்பவர்களுக்கு வாழ்வில் உயர்வே
இல்லை.இது தேவை.
539-இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்தூறும்
போழ்து.
மகிழ்ச்சியினாலும்,கர்வத்தினாலும் கடமைகளை செய்யத் தவறியவர்கள் அழிந்து
போனதை நினைத்துப் பார்த்து திருந்திக்கொள்ள வேண்டும்.இது தேவை.
540-உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளிய துள்ளப் பெறின்.
நினைப்பது நடக்கும்,சொல்வது நடக்காது.மனம்போல் வாழ்க்கை அமையும்.இது தேவை .
‘பொச்சாவாமை’ அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment