75-அரண்
741-ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
படை யெடுப்பவர்க்கும் கோட்டை பயன்படும்,தன்னை பாதுகாத்துக் கொள்ளவும்
கோட்டை பயன் படும்.இது தேவை.
742-மணிநீரும் மண்ணும் மலையும்
அணிநிழற்
காடும் உடைய தரண்.
மணிபோல தெளிந்த நீரும், பரந்த நிலம்,உயர்ந்த மலை,அடர்ந்த காடு இவைகளே ஒரு
நாட்டுக்கு அரண்களாகும்.இது தேவை.
743-உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
உயரம்,அகலம்,உறுதி,வலிமை இவை நான்கும் ஒருங்கே அமைந்திருப்பதே அரணுக்குரிய சிறப்பாகும்.இது தேவை.
744-சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
காக்க வேண்டிய இடம் சிறு பரப்பு கொண்டதாகவும்,கோட்டையின் சுற்று சுவர்
பெரியதாகவும் உள்ளது,பகைவரை அச்சுருத்தும் அரணாகும்.இது தேவை.
745-கொளற்கரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
பல நாள் முற்றுகையிட்டு போரிட்டாலும்,உள்ளே இருக்கும் மக்களுக்கு
உரிய உணவும் அளித்து போரிட வாய்ப்புள்ளதே அரண்.இது தேவை.
746-எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
எல்லா பொருளும் தன்னகத்தே கொண்டு,உள்ளே உள்ள வீரர்களுக்கு உணவு படைத்து
எதிரியிடம் போர் புரியவல்லதே அரண்.இது தேவை.
747-முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
முற்றுகையிட்டோ அல்லது முற்றுகை இடாமலோ அல்லது வஞ்சனையாலோ பகைவரால் கைபற்ற
முடியாததே அரண்.இது தேவை .
748-முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
கோட்டைக்குள் இருப்போர் தாம் இருக்கும் இடத்தை விட்டுவிடாமல்
முற்றுகையிட்ட பகைவரிடம் போர் புரிய வல்லதே அரண்.இது தேவை.
749-முனைமுகத்து மாற்றார் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
போர் தொடங்கிய உடனே முற்றுகையிட்ட பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் போர்
புரியவல்லது அரண்.இது தேவை.
750-எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
என்னதான் மாட்சிமை பொருந்திய அரணாக இருந்தாலும் அரணுள் இருக்கும் படை
வீரர்களால் திறம்பட போர் புரிய வல்லவர்கள் இல்லையெனில் எல்லாமே வீண்.இது தேவை.
‘அரண்’ அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
***********************************************
பேசும் மொழியால் இனமா? இரத்த வழியால் இனமா?
என் மொழி இயல்
ஆய்வுப்படி(காண்க-அறம்காத்த வர்மாக்கள்)
இந்தியா முழுவதும் பரவியுள்ள இனங்கள் இரண்டே வகைதான்,1- தமிழினம்,2-
ஆரியம்.
மொழி மாற்றம்,இனக் கலப்பு நிகழ்ந்து இன்றய நிலையான சாதிய அமைப்புகளை நாம் காண்கின்றோம்
என்பதே!
அதாவது இந்திய முழுவதும் பல மொழி பேசும் 5 தொழில் குணம் கொண்ட இனங்களே வாழ்கின்றன,1-பஞ்சமர்,2- சூத்ரா,3-வைசியா,4-சத்ரியா,5-ஆரியா.அவ்வளவே.!
இந்திய அரசியலமைப்பில் சாதிகளற்ற சமுதாயம் அமைக்கப்படவேண்டும் என்பது
அரசின் நோக்கம்,ஆனால் இது சாத்யப்பட இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும்!
**************************************
No comments:
Post a Comment