100-பண்புடைமை
991-எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
யாருமே தன்னை எளிதில் அணுகும்படி நிலையில் வாழ்ந்தால்,பண்புடைமையை அடையலாம்.இது தேவை.
992-அன்புடைமை ஆன்ற குடிபிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
அன்பாக இருத்தலும்,நல்ல குடி பிறத்தலையும் தீர்மானிப்பது நற்பண்புகள் தான்.இது தேவை.
993-உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
உறுப்புகள் உடலில் இருப்பதால் மக்கள் என்று
சொல்லிவிடமுடியாது.நற்பண்புகள் ஒப்பிட்டுப் ஒத்து இருப்பவர்களே மக்கள்
எனப்படுவர்.இது தேவை.
994-நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
நற்பண்புகள் கொண்ட பிறருக்கு பயன்படும் பண்பாளர்களை
உலகம் பாராட்டும்.இது தேவை .
995-நகையுள்ளும் இன்னா திழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
நற்பண்பு கொண்டவர்கள் விளையாட்டாக கூட பகைவர்களை
புண்படும்படி பேசமாட்டார்கள்.இது தேவை.
996-பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
பண்புள்ளவர்களை பற்றியிருப்பதால் உலகம் இன்னும்
அழியாமல் உள்ளது.இது தேவை .
997-அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.
அரம் போல் கூர்மையான
அறிவுடையவர்களாக இருப்பினும் பண்பில்லாதவர்களை
மரம்போல் கருதப்படுவர்.இது தேவை.
998-நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆறுதல் கடை.
நட்புக்கு ஏற்றவராக இல்லாவிட்டாலும் நற் பண்பு கொண்டோர் அவர்களிடத்தில் பொறுமையுடன் நடக்கா
விட்டால் அது இழிவான செயலாகும்.இது தேவை.
999-நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.
நண்பர்களுடன் பழகி மகிழ்ச்சியாக இருக்கத்
தெரியாதவர்களுக்கு உலகம் பகலில் கூட இருட்டாக இருக்கும்.இது தேவை.
1000-பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
நல்ல பால் அழுக்கு கலத்தில் ஊற்றி வைத்தால்
கெட்டுவிடும் ,அதுபோல்
பண்பற்றவனிடம் உள்ள செல்வம் பயனற்று போகும்.இது தேவை .
‘பண்புடைமை’அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை .
No comments:
Post a Comment