49-காலமறிதல்
481-பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
காக்கை தன்னைவிட பலமுள்ள கோட்டானை பகலில் வென்றுவிடும்,அதுபோல ஒரு அரசன் தன்
பகைவரை வெல்லும் நேரம் வரை காத்திருக்க வேண்டும்.இது தேவை
482-பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
காலந்தவறாமல் தன் கடமை ஆற்றுவது என்பது ஒருவருக்கு, இடமாறிச் செல்லும் செல்வத்தை
இழுத்து கட்டும் கயிறு போன்றதாகும்.இது தேவை.
483-அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
காலம் அறிந்து செயல்பட்டால் முடியாதது என ஒன்று இல்லை .இது தேவை.
484-ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
நேரம் இடம் கருதி செயலாற்றினால் உலகமே ஒருவன் கைக்குள் வந்துவிடும்.இது தேவை.
485-காலம் கருதி இருப்பவர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
உலகத்தையே தன் வசப்படுத்த எண்ணுபவர் ,அதற்கான காலத்தை
எண்ணிக்(காத்துக்) கொண்டிருப்பர்.இது தேவை .
486-ஊக்க முடையான் ஒடுக்கும் பொருதகர்
தாக்கத்திற்குப் பேருந்
தகைத்து.
விடா முயற்சி உடையவன் ,தன் எதிரியை தாக்க ஆட்டுக்கடா காலை பின் வாங்கி
காத்திருக்கும் செயலைப் போன்றதாகும்.இது தேவை .
487-பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
எதிரி தாக்கிய உடனே ,அறிவுடைய ஒருவர் உடனே திருப்பி தாக்க மாட்டார்,எதிரியை வெல்லும்
காலம்,
இடம் பார்த்து காத்திருப்பர்.இது தேவை.
488-செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காந் தலை
பகைவரைக் கண்டால் பதுங்கிச் செல்,அழிவுக்காலம் வரும்போது அவர் தலை கீழே
விழும்.இது தேவை.
489-எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
காலம் கனியும் வரை காத்திருந்து செயற்கரிய செயலை செய்து முடிக்க
வேண்டும்.இது தேவை.
490-கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
கொக்கு, தகுதியான தன் உணவிற்கு ஓடையில் காத்திருப்பது போல், ஒருவர் தன் காரியம் கைக்கூட
காத்திருக்க வேண்டும்.இது தேவை.
‘காலமறிதல்’அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை .
No comments:
Post a Comment