67-வினைத்திட்பம்
661-வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றய எல்லாம் பிற.
மன உறுதி இல்லாதவன் செயலிலும் உறுதி இருக்காது.இது தேவை.
662-ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்
இடையூறு வராமல் தடுப்பதும் பின் மீறி வந்தாலும் மனம் தளராமல் இருப்பதே
அறிவுடையோர் செயலாகும்.இது தேவை
663
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை;இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
ஒரு செயலை செய்து முடிக்கும் முன் அதனைப்பற்றி வெளிப்படுத்தாமல் இருப்பதே
நல்லது,அச்செயலின்
தன்மை வெளிப்படுத்தினால் நிறைவேற முடியாமல் போகும்.இது தேவை.
664-சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
மனிதனுக்கு அழகு, சொன்ன சொல்லை காப்பது,சொன்னதை நிறைவேற்றுவது என்பது
பலருக்கும் கடினமானதே!இது தேவை.
665-வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
செயற்கரிய செயல்களை செய்து மாண்டவர் ,அந்த மண்ணின் வேந்தன் கண்
படுமானால் மாண்டோரை (மாண்புடையோரை )ஊர்கூட்டி சிறப்பெய்துவர்.இது தேவை.
666-எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
ஒருவரின் எண்ணங்கள் வலிமை பெற்றதாயின்,அவர் எண்ணங்கள் நிறைவேறுவது
உறுதி. இது தேவை .
667-உருவுகண்டு எள்ளாமை வேண்டும் ;உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து.
ஒருவருடைய உருவம் பார்த்து எள்ளி நகையாடவேண்டாம்,உருவத்தில் சிரிய பொருளான
அச்சாணிதான் ஒரு தேர் ஒடுவதற்கு காரணமாகும்.சிறு துரும்பும் பல் குத்த உதவும்
என்பதுதான் இதன் பொருள்.இது தேவை.
668-கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
மன உறுதி நிலைப்பாட்டுடன் துவங்கிய பணிகளை இரவு பகல் பாராமல் செய்து
முடிக்க வேண்டும்.இது தேவை.
669-துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் விணை.
இன்பம் பயக்குமேயானால் ,அந்த செயலினால் வரக்கூடிய துன்பத்தை தாங்கிக்கொண்டு
துணிவுடன் முடிக்க வேண்டும்.இது தேவை.
670-எனைத்திட்ப மெய்திய கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.
எவ்வளவு உடல் பலம் பொருந்தியவராக இருப்பினும் தான் மேற்கொண்ட செயலில்
உறுதி இல்லை எனில் உலகம் அவரை விரும்பாது.இது தேவை .
‘வினைத்திட்பம்’ அதிகாரத்தின்
பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
************************************************
************************************************
வேதங்களிலும் சுய சிந்தனைக்கு வழியுண்டு,இதோ அந்த பாடல்-வேத
ப்ராமாண்யம் கஸ்ய மிது
‘கர்த்ரு வாதஹா ஸ்நானே
தர்மேச்சா ஜாதிவாத அவலேபஹ
சந்தா பாரம்பஹா பாபஹானா
யசிஇதீ
ஸத்வஸ்த் பிரக்ஞாநாம்
சஞ்சலிங்கானி ஜாம்யே’
இது,தர்மபாலர் எழுதிய பிராமண வார்த்திகம்,இதன் பொருள்,
1-எதற்கெடுத்தாலும்
வேதம் சொல்வதை நம்புவது
2-ஒருவன் நம்மை படைத்தான்,என அவனையே நம்பிக்கொண்டிருப்பது,
3- குழுவாக ஆற்றில்
குளிப்பது,
4-ஒருவன் தலையில் பிறந்தான்,தொடையில் பிறந்தான் என ஜாதி பார்ப்பது
.5-உடலை
வருத்தினால் கடவுள் அருளுவார் என தனக்குத்தானே உடலில் காயப்படுத்திக்கொள்வது,
இப்படி செய்பவன் மனிதனே அல்ல ஜடம்.இப்படி இந்த ஸ்லோகத்தை ஒரு அர்ச்சகரிடம் தந்து,
‘அர்ச்சனை செய்து தாருங்கள்’ என்றால் ‘ஓ பேஷாக’என்பார்,அவருக்கே அதன் பொருள்
புரியாது!-அக்னிஹோத்ரம் சிரி ராமானுஜ தாத்தாச்சாரி.
!******************************
No comments:
Post a Comment