52-தெரிந்து வினையாடல்
511-நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
நன்மை தீமைகளை ஆராய்ந்து நற்செயலில் நாட்டம் கொண்டவர்கள் எப்பணியினை
செய்யவும் தகுதி பெற்றவர்கள்.இது தேவை.
512-வாரிப் பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை.
வளம் பெருக்க ,இடையூறுகளை நீக்க வல்லவனே
செயலாற்றும் திறனுடையவன். இது தேவை .
513-அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
அன்பு,அறிவு,தெளிவு,ஆசையின்மை ஆகிய நான்கு குணங்களையும் பெற்ற பண்பாளரை தேர்வு செய்வதே
நலம்.இது தேவை.
514-எனைவகையான்தேறியக் கண்ணும்வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
எத்தனை வழிமுறைகளை பின்பற்றி ஒருவரை தேர்ந்து எடுத்தாலும்,அவர் செயல்படும் போது பலர்
மாறுபடுவர்.இது தேவை.
515-அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதன்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.
ஆற்றல் உள்ளவரை அறியாமல் ,வேறொருவரை சிறந்தவர் என கருதி அவரிடம் பொறுப்பு
ஒப்படைக்க கூடாது.இது தேவை.
516-செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்.
ஒரு செயல் செய்யக்கூடியவனை நாடி அவன் செயலாற்றும் செயலின் தன்மையை
உணர்ந்து அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.இது தேவை.
517-இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்
ததனை அவன்கண் விடல்.
ஒரு காரியத்தை முடிக்கும் திறமை யாரிடம் உள்ளதோ அவரிடம் ஆய்ந்தறிந்து அதை
ஒப்படைக்க வேண்டும்.இது தேவை.
518-வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்த பிறகே அவனை அந்த
செயலில் ஈடுபடுத்த வேண்டும்.இது தேவை.
519-வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.
வெற்றிகரமாக செயலை முடிக்கும்
திறமை உடையவனின் உறவை தவறாக நினைப்பவரின் செல்வம்
அவரை விட்டு அகலும்.இது தேவை.
520-நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடமை கோடா துலகு.
உழைப்பவர்களை அந்நாட்டு மன்னன் உற்சாகப்படுத்த வேண்டும்.உழைப்போர் நிலையை
ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்ந்து ஆவன செய்ய வேண்டும்.இது தேவை.
‘தெரிந்து வினையாடல்’ அதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயன் உள்ளவை.
No comments:
Post a Comment