Monday, April 30, 2018

99-சான்றாண்மை


                          99-சான்றாண்மை

981-கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
   சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

செய்யத்தக்க கடமை இவை என மேற்கொள்பவருக்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை.இது தேவை

982-குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
   எந்நலத் துள்ளதூஉ மன்று.

பிறர் நலம் நாடும் நற்குணங்களே சான்றோருக்கு அழகு,
இது தேவை.

983-அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
   டைந்துசால் பூன்றிய தூண்.

அன்பு,நாணம்,உலக ஒழுக்கம்,இரக்கம்,வாய்மை இவை ஐந்தும் சான்றாண்மையை தாங்கும் தூண்கள்.இது தேவை.

984-கொல்ல நலத்தது நோன்மை பிறர்தீமை
   சொல்லா நலத்தது சால்பு.

கொல்லாமை என்பது சிறந்த நோன்பு,பிறர் செய்த தீமைகளை வெளியில் சொல்லாத குணம் சிறந்த சான்றோர் பண்பு.இது தேவை.

985-ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை.

பணிந்து போதலே ஆற்றல் மிக்க போக்கு,அது பகைமையை மாற்றுகின்ற படையாக சான்றோர்க்கு அமையும்.இது தேவை.
                               
986-சால்பிற்கு கட்டளை யாதெனின் தோல்வி
   துலையல்லார் கண்ணும் கொளல்.

பொன்னின் அளவறியும் உரைகல் போல் எது வெனில் தனக்கு ஒப்பில்லா தாழ்ந்தோரிடத்தும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் பண்பாகும்.இது தேவை.

987-இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
   என்ன பயத்தோ சால்பு.

தனக்கு தீமை செய்தார்க்கும் இனியவை செய்யாத சான்றோர்க்கு சான்றாண்மை எனும் பண்பு இருந்து என்ன பயன்?இது தேவை

988-இன்மை ஒருவர்க் கிளிவன்று சால்பென்னும்
   திண்மையுண் டாகப் பெரின்.

ஒருவருக்கு சான்றாண்மை எனும் திண்மை இருக்குமானால் வறுமை என்பது இழிவானதல்ல.இது தேவை.

989-ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
   காழி யெனப்படு வார்.

கடமை தவறா சான்றோர் ஊழிக்காலத்தில் கடல் புரண்டாலும் தம்நிலை மாறா கடலைப்போல் திகழ்வர்.இது தேவை.

990-சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநில்தான்
   தாங்காது மன்னோ பொறை.

சான்றோரின் நற்பண்பு குறையுமானால் இவ்வுலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது.இது தேவை.
சான்றாண்மைஅதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.

No comments: