60-ஊக்கம் உடைமை
591-உடையர் எனப்படுவ தூக்கமஃதில்லார்
உடைய துடையரோ மற்று.
முயற்சியடையவர் எல்லாம் எதையும் எளிதில் அடைந்துவிடுவர்,ஊக்கமற்றவருக்கு
எதையும் அடையும் உரிமையற்றவர்.இது தேவை.
592-உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
உள்ளத்தில் ஊக்கம் கொண்டவர்கள் தவிர வேறு எதையும் நிலையானவை என கூற
முடியாது.இதுதேவை
593-ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்.
ஆக்கத்தை(செல்வம்) இழந்தாலும் ஊக்கத்தை இழக்க கூடாது.இது தேவை.
594-ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
தொடர் ஊக்கமுடையார் இடம், ஆக்கம்(செல்வம்) போய்ச்சேரும்.இது தேவை.
595-வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.
தண்ணீரின் அளவே தாமரை நிற்கும்,அதுபோல ஒருவன் வாழ்வில் அவன் கொண்டுள்ள
ஊக்கத்தின் அளவு கொண்டே அவன் உயர்வடைவான்.இது
தேவை.
596-உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
உயர்வான எண்ணங்கள் ஒருவனை உயர்த்தும், உயர்வடையா விட்டாலும் ஊக்கம்
நீர்த்து போக கூடாது.இது தேவை .
597-சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
போர்க்களத்து யானைகள் அம்புகளால் துளைக்கப்பட்டாலும், நிலைகுலையாமல்
நிற்கும், அதுபோல
ஊக்கமுடையவர்கள் அழிவே வந்தாலும் தளர மாட்டார்கள்.இது தேவை .
598-உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
பிறருக்கு கொடுக்கும் குணமில்லாதவர் வள்ளல் எனும் பேரை பெற இயலாது.இது தேவை.
599-பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
பருத்த யானையிடம் உள்ள கூர்மையான தந்தம் இருந்தும் தன்னை தாக்க வரும்
புலியைக் கண்டு அஞ்சும்,உருவத்தைவிட ஊக்கமே வலியது என்பது இதன் பொருள்.இது தேவை .
600-உரமொருவற் குள்ள வெறுக்கையைஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு.
மன உறுதியும் ஊக்கமும் இல்லாதவர்கள் மரங்களுக்கு ஒப்பாவர்.இது தேவை .
‘ஊக்கம் உடைமை’ அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment