76-பொருள் செயல்வகை
751-பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
பொருளாக மதிக்க தகாதவர்களையும் பொருளாக மதிக்கச் செய்யும் தகுதி பணம் படைத்தவர்களுக்கே
உண்டு.இது உண்மை
752-இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
பணம் இல்லாரை எல்லாரும் இகழ்வர்,பணம் படைத்தவரை பலரும் புகழ்வர். இது தேவை.
753-பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
பணம் எனும் பொய்யா விளக்கு கையில் உண்டென்றால்,என்னாட்டின் பகை எனும்
இருளையும் போக்கும். இது தேவை.
754-அறன்ஈனும் இன்பம் ஈனும் திறன்றிந்து
தீதின்றி வந்த பொருள்.
திறனறிந்து தீதின்றி(தீய வழி இன்றி) வந்த பொருள் அறநெறி கொடுக்கும்,இன்பத்தையும்
கொடுக்கும்.இது தேவை.
755-அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
கருணையுடனும்,அன்போடும் வராத பணம்,தீதென்று விட்டு விட வேண்டும்.இது தேவை.
756-உருபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன்
பொருள்.
வாரிசற்ற பொருளும்,சுங்கத் தீர்வையும் ,பகைவரை வென்று அவர் கட்டும்
கப்பம் இவை மட்டுமே அரசருக்கு உரியது.இது தேவை
757-அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செலவச் செவிலியால் உண்டு.
அன்பெனும் அன்னை ஈன்றெடுக்கும் அருள் என்மெ குழந்தையை பணம் எனும்
செவிலித்தாயால் வளரக்கூடியதாகும்.இது தேவை.
758-குன்றேறியானைப்போர்கண்டற்றால்தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
தன்கையில் பொருள் கொண்டு ஒரு செயலை செய்பவன்,குன்றின் மீதேறி யானைப் போர்
காண்பதற்கு ஒப்பாகும்.இது தேவை.
759-செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
எதையும் சாதிக்கும் எண்ணம் கொண்டவர்கள்,பணத்தை சேமிக்க வேண்டும்,பகைவரின் திமிரை
அடக்கும் ஆயுதம் பணத்துக்கே உண்டு.இது தேவை .
760-ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
நல்ல வழியில் அதிக பொருள் சேமித்தவர்க்கு அறமும், இன்பமும் ஒருசேரப் பெறுவர்.இது
தேவை
‘பொருள் செயல்வகை’ அதிகாரத்தின் பத்து
குறட்களும் பயனுள்ளவை.
*******************************************
பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், சொல்லக்கூடாத வார்த்தைகள் இதோ,
1-நல்லவேளை (நல்வாய்பு) 2-அதிர்ஷ்ட்டவசமாய் (நல்வாய்ப்பு),
3-தெய்வாதீனம் (வாய்ப்பாய்),
வரப்பிரசாதம் (பரிசு),
4-கொடுத்து
வைத்தது,5-பிரம்மாண்டம்
(மாபெரும்), 6-தலைவிதி (சூழ் நிலையால்),7-அமரர் (உயிர் நீத்தார்) ,8-பகீரத முயற்சி (மாபெரும்
முயற்சி),
9-கதி மோட்சம் (தீர்வு அல்லது நிம்மதி),10-வேதவாக்கு (சான்றோர் வாக்கு),11-ராசி,12-சனியனே,13-ராட்சச,14-பேய் மழை .
அடைப்புக்குரிக்குள் இடப்பட்ட சொற்களை பயன்படுத்தலாம்,அல்லது சொல்லாமலே
விடப்படலாம்
டிசம்பர்1-15,2016 உண்மை இதழில் வெளியிடப்பட்ட , ‘சொல்லக்கூடாதவை’
மேலும் சில வார்த்தைகளை இந்த கூடாதவைகளில் சேர்க்கலாம், கண் திருஷ்ட்டி,
கண்ணு
பட்டுறப்போகுது,தோஷம்,தோஷ பரிகார நீக்கம், சூன்யம், வினை வைத்துவிட்டார்கள், தலையெழுத்து, தலைவிதி போன்றவை
**************************************
No comments:
Post a Comment