65- சொல்வன்மை
641-நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத் துள்ளதூஉம் அன்று.
நாவன்மைக்கு ஈடு எதுவும் இல்லை,செல்வத்துள் சிறந்தது சொல்வன்மை.இது தேவை.
642-ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட்
சோர்வு.
குறையற்ற பேச்சுக்களையே பேச வேண்டும்,ஆக்கமும் கேடும் சொல்லால்
ஏற்படும்,சொல்லில் கவனம் வேண்டும்.இது தேவை.
643-கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் .
கேட்பவர்கள் மனதை கவரும்படியும்,கேட்காதவர்களும் தேடிவந்து கேட்ககூடியாதாக
சொல் அமையவேண்டும்.இது தேவை.
644-திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங் கில்.
பேச்சில் தெளிவு வேண்டும்,அந்த சொல் வன்மையில் அறமும்,உண்மையும் இருக்க
வேண்டும்.இது தேவை.
645-சொல்லுக சொல்லைப்பிறிதோர்சொல்அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
சொல்லும் சொலை பிரிதொரு சொல்லின் பொருளை வெல்லாது என உணர்ந்த பிறகே சொல்ல வந்த
சொல்லை சொல்ல வேண்டும்.இது தேவை.
646-வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
பிறர் விரும்பி கேட்டு உணரும்படி கருத்துக்களை சொல்வதும் ,பிறர் கூறும் பயனுள்ள சொல்லை ஏற்றுக்கொள்வதும் அறிவுடையார்
செயலாகும்.இது தேவை .
647-சொலல்வல்லவன் சோர்விலன் அஞ்சா னவனை
இகல்வெல்லல் யார்க்கும்
அரிது.
சொல்லாற்றல் உள்ளவன். சோர்விலாதவன், அச்சமில்லாதவன் போன்றோனை எதிர்த்து யாராலும் வெல்ல முடியாது.இது
தேவை.
648-விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
சொல்லாற்றல் வல்லமைபடைத்தவர் இட்ட பணியை செய்ய உலகமே முன்னிற்கும்.இது தேவை
649-பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
துணர விரிந்துரையா தார்.
சொல்ல வந்ததை தெளிவில்லாமல் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இயலாதவர்கள்.இது தேவை
650-இணரூழ்த்து நாறா மலரணையர் கற்ற
துணர விரிந்துரையா தார்.
பல நூல்களை கற்றும் அத்தனையும் பிறருக்கு உணர்த்த முடியாதவர் வாசமற்ற
கொத்தான மலரைப்போன்றவர்.இது தேவை.
‘சொல்வன்மை’ அதிகாரத்தின் பத்துக்குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment