104- உழவு
1031-சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
மனிதன் உயிர்வாழ உணவே தலை,அதை உருவாக்க ஏர் முக்கியம்.சுழலும் உலகம் ஏரைச் சுற்றியே சுழலும்.இது தேவை
1032-உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தொழுவாரை எல்லாம் பொறுத்து.
எத்தொழில் புரிபவர்க்கும் பசி போக்கிடும் உலகத்தின்
அச்சாணித் தொழிலாக விளங்குவது உழவு தொழிலே.இது தேவை.
1033-உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
உழுதுண்டு வாழ்பவரே உயர்ந்தவர்,மற்றவரெல்லாம் அவர்களைத்
தொழுதுண்டு பின் செல்பவர்.இது உண்மை.
1034-பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பவர்
அலகுடை நீழ லவர்.
பல அரசுகளின் நிழல்களையும் தன் குடை நிழலின் கீழ்
கொண்டுவரும் ஆற்றல் கொண்டவர்கள் உழவர்கள்.இது தேவை.
1035-இரவார் இரப்பார்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
தன்கையை நம்பி இருப்பவர்,பிச்சை எடுக்க மாட்டார்,பிச்சை எடுப்பவர்க்கு மறுக்காமல்
வழங்குவார்,அவரே
உழவர்.இது உண்மை.
1036-உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும்
நிலை.
எல்லா பற்றையும் விட்டுவிட்ட துறவிகள் தாங்கள் வாழ
உயவரின் கையை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டும்.இது தேவை.
1037-தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்வரை உழுது பயிட்டாலே
ஒரு பிடி எருவிடாமலே பயிர் செழித்து வளரும்.இது தேவை.
1038-ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினு1ம் நன்றதன் காப்பு.
ஏர்பூட்டி உழுவதை விட எருவிடுதல் நல்லது,களை மற்றும்
நீர் பாய்ச்சுவதும் நல்லது ,அதைவிட நல்லது பயிரை பாதுகாப்பது.இது
தேவை.
1039-செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும் .
கட்டிய மனைவியை கவனிக்க வில்லை எனில் அவள் அவனை விட்டு
விலகி விடுவாள்,அது போல
தான் நட்ட பயிரையும் நாள் தோறும் கவனிக்கவில்லை எனில் அவை அவனைவிட்டு
போய்விடும்.இது தேவை.
1040-இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
நிலமெனும் மனையாளை வைத்துக்கொண்டு என்னிடம் ஏதுமில்லை
என சொல்லி சோம்பலாய் இருப்பவனைப் பார்த்து மனையாள் அவனை கேலியாக சிரிப்பாள்.இது தேவை.
‘உழவு’ அதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment