86-இகல்
851-இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
மனவேறுபாடு(இகல்) என்பது, மற்ற உயிர்களோடு பழக முடியாமல்
போகும் ஒரு நோய். இது தேவை.
852-பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
பிரிவை உண்ண்டாக்க கருதி ஒருவன் கெடுதல் செய்வானானால்,அவனுக்கு ஏற்படும் துன்பத்தை
நினைத்து நாம் இகழாமல் இருந்தால் போதும்.இது தேவை.
853-இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும்.
இகல் எனப்படும் துன்பநோயை ஒருவன் நீக்கினாலே, அவனுக்கு புகழ் எனப்படும்
அழிவின்மையை கொடுக்கும்.இது தேவை.
854-இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
இகல் எனும் மன வேறுபாடு இல்லாத ஒருவனுக்கு இன்பத்துள்
இன்பம் பயக்கும்.இது தேவை .
855-இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே
மிகல்ஊக்கும் தன்மை யவர்.
மனவேறுபாடுக்கு எதிராக நிற்கும் வல்லவரை வெல்லும் ஆற்றல் உள்ளவர் யாரோ?இது தேவை.
856-இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
பிறருடன் மன வேறுபாடு கொண்டு இனிமையாக வாழலாம் என்பவன்
வாழ்க்கை சிலகாலமே வாழமுடியும் ,குறுகிய
காலத்தில் அழிவான்.இது தேவை.
857-மிகல்மேவல் மெய்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
மனவேறுபாடு எனும் தீய சிந்தனை உடையவர்,வெற்றி பெறும் வழியை உணரமாட்டார்.இது
தேவை.
858-இகலிற் எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு
மனவேறுபாடை வரவேற்காமல் இருப்பவனுக்கு செல்வம் சேரும்,இல்லையேல் கேடு சூழும்.
859-இகல் காணாணன் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
ஆக்கம் (நல்லது நடக்கும் போது)வரும்போது ஒருவன் மன
விகாரம் அடையமாட்டான்,தனக்குத்தானே
விகாரம் கொள்பவனுக்கு காரணமே தேவை இல்லை.இது தேவை.
860-இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
இகலினால்(மன வேறுபாட்டால்) ஒருவனுக்கு துன்பம் வரும்.நல்லிணக்க
நட்பால் ஒருவனுக்கு நன்மை எனும் செருக்கு உண்டாகும்.இது தேவை
‘இகல்’ அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment