61- மடி இன்மை
601-குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
என்னதான் பெருமை மிக்க குடியில் பிறந்தாலும் சோம்பல் குடி கொண்டால் அது
அழிந்து விடும்.இது தேவை.
602-மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
குடிப்பெருமை உயரவேண்டுமானால்,சோம்பலை ஒழித்து ஊக்கத்துடன் உழைக்க
வேண்டும்.இது தேவை .
603-மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.
சோம்பல் குடிகொண்ட ஒருவனது குடும்பம்,அவனுக்கு முன்பே அழிந்து
விடும்.இது தேவை.
604-குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
சோம்பல் பெருகிவிட்ட ஒருவனது வாழ்வில் குற்றம் பெருகி குடும்பம் அழியும்
.இது தேவை .
605-நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
நாளை பார்க்கலாம்,மறதி,சோம்பல்,ஆழ்ந்த தூக்கம் இவை நான்கும்,கெடுகின்ற ஒருவர் பயணிக்கும் படகுகளாகும்.இது தேவை.
606-படியுடையார் கற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் சோம்பல் கொண்டிருந்தால் பெருமை கொள்வது
அரிது,இது
தேவை
607-இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
முயற்சி யற்றவர்கள், சோம்பல் உள்ளவர்கள் இழி நிலைக்கு ஆளாவார்கள்.இது தேவை.
608-மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்
கடிமை புகுத்தி விடும்.
பெருமை மிக்க குடியில் பிறந்தாலும் அவரிடம் சோம்பல் குடி கொண்டால் அதுவே
பகைவரிடத்தில் அடிமையாக்கிவிடும்.இது தேவை.
609-குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
தன்னிடம் உள்ள சோம்பல் நீங்கினால், குலப்பெருமையும்,ஆண்மையும் தானே வந்து
சேரும்.இது தேவை .
610-மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
சோர்விலா மன்னன் சென்ற விடமெல்லாம் வெற்றியே.இது தேவை.
‘மடியின்மை’ அதிகாரத்தின் பத்து குறட்களும் பயனுள்ளவை .
No comments:
Post a Comment