81-பழைமை
801-பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
பழமை எனப்படுவது என்ன வென்றால்,நண்பர்கள் பழைய நினைவுகளை
மறக்காமல் இருப்பது தான்.இது தேவை.
802-நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்.
நண்பர்கள் உரிமையுடன் பாடுபடுவதே நட்புக்கு
உறுப்பாகும்.அதை எண்ணி பாராட்டுவது சான்றோர்கள்
கடமையாகும்.இது தேவை.
803-பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை.
பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களுக்கு உடன்
படாமல் போயிருந்தால்,அதுவரை
பழகிய நட்பு வீணாப்போகும்.இது தேவை.
804-விழைதகையான் வேண்டி இருப்பார் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மை
கேளாமலே ஒரு காரியம் செய்தால் நண்பராய் இருப்பவர் அதை ஏற்றுக்கொள்ளவே செய்வார்.இது
தேவை.
805-பேதமை ஒன்றோ பெருங்கிழைமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
வருந்தக்கூடிய செயலை நண்பர் செய்துவிட்டால் .அது அறியாமையினாலோ அல்லது உரிமையினாலோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.இது தேவை.
806-எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார்
தொடர்பு.
நீண்ட காலமாக பழகியவர்கள் தமக்கு கேடு செய்தால் கூட
நட்பை பாதுகாக்கும் பொருட்டு அமைதி காப்பர்.இது தேவை.
807-அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
அன்பின் அடிப்படையில் நட்பு கொண்டிருந்தால்,தமக்கு எதிரா நண்பர்
அழிவுகாரியத்தை செய்தால் கூட அதற்காக நட்பை முறித்துக்கொள்ள மாட்டார்.இது தேவை .
808-கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார்
செயின்.
பிறர் கூறியும் நண்பரை குறை காணதவரிடத்தில், நண்பர் தொடர்ந்து தவறாக நடந்து
கொண்டால், அவருடன்
நட்பு கொள்வதே வீண். இது தேவை.
809-கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
உரிமையுடன் பழகிய நண்பரை கைவிடாமலிருந்தால் இருந்தால்
அவரை உலகம் போற்றும்.இது தேவை.
810-விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
பழைமையான நண்பர்கள் தவறு செய்தாலும் அவர்களிடத்தில்
அன்பு பாராட்டுபவர்களை பகைவர்களும் பாராட்டுவார்.இது தேவை.
‘பழைமை’ அதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment