93-கள்ளுண்ணாமை
921-உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
மதுவிற்கு அடிமையான அரசனைப் பார்த்து பகைவரும்
அஞ்சமாட்டார், தமக்கும்
சிறப்பேதும் இல்லாமல்போகும். இது தேவை.
922-உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
சான்றோரின் நட்பு விரும்புபவர்கள்
கள்ளுண்ணமாட்டார்கள். இது தேவை.
923-ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
தன் மகனின் குற்றங்களை மன்னிக்க கூடிய தாய் கூட
கள்ளருந்தும் மகனை விரும்பாள்,அவ்வாறு
இருக்க சான்றோர் எவ்வாறு சகித்துக்கொள்வர்.அது தேவை
924-நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத்
தார்க்கு.
பெண்ணுக்குரிய
நாணமெனும் நற்பண்பு போன்ற குணம் ஒரு குடிகாரன் முன் நிற்காமல் புறமுதுகிட்டு ஓடும்.இது தேவை.
925-கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
கையில் உள்ள பொருளை கொடுத்து மெய்மறக்கும் கள்ளை
வாங்குவது போன்ற மூடத்தனம் வேறு ஏதுமில்லை.இது தேவை .
926-துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
இறந்து கிடப்பவரும்,கள்ளுண்பவரும் எப்பொழுதும் ஒரே நிலை எய்துபவரே.இது தேவை.
927-உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றி கண்சாய் பவர்.
ஊருக்கு தெரியாமல் கள் அருந்தினாலும் ,கண்கள் சிவந்து கண் மூடுவதை ஊரார்
பார்த்து எள்ளி நகைப்பர்.இது தேவை.
928-களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்.
குடித்துவிட்டு ஒருவன், ‘நான்
மது உண்டதே இல்லை’என கூறும்
பொய் ,அவன் மது
உண்ட உண்மையை (வெளிப்படுத்திவிடுவான்) உளறிவிடுவான். இது தேவை.
929-களித்தானை காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ
அற்று.
குடித்துவிட்டு இருப்பவனை திருத்த முயற்சிப்பதும்,நீரில் மூழ்கி விட்டவனை தீப்பந்தம்
கொண்டு தேட முயற்சிப்பதும் ஒரே
பயனைத்தரும்.இது தேவை.
930-கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
ஒரு குடிகாரன் குடிக்காமல் இருக்கும் போது ,அவன் எதிரே குடித்துவிட்டு உளரும்
கேட்டினைப் பார்த்தாவது அந்த குடிகாரன் திருந்தினா என்ன?.இது தேவை.
‘கள்ளுண்ணாமை’ அதிகாரத்தின் பத்துக் குறட்களும் பயனுள்ளவை.
No comments:
Post a Comment