Tuesday, March 27, 2018

41-கல்லாமை


                       41- கல்லாமை

401-அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
   நூலின்றிக் கோட்டி கொளல்.

அறிவாற்றல் இல்லாதவன் அவையில் பேச நினைப்பது,எல்லைக்கோடுகள் வரையாமல் சொக்கட்டான் அட நினைப்பது போல.இது தேவை.

402-கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
   இல்லாதான் பெண்காமுற் றற்று.

படிப்பறிவில்லாதவனின்  சொல் கேட்க விருப்பம் கொள்வது  என்பது, முலையில்லா பெண் மீது காதல் கொள்வது போன்றதாகும்.இது தேவை.

403-கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
   சொல்லா திருக்கப் பெறின்.

கற்றவர்கள் முன் எதுவும் பேசாமல் கற்றுக் கொண்டால், கல்வி கற்காதவர்கள் கூட நல்லவரே.இது தேவை.

404-கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
   கொள்ளார் அறிவுடை யார்.

படிப்பறிவு அற்றவன் அறிவாளி போல் பேசினால் கூட,கல்வியில் சிறந்தோன் என அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.இது தேவை.

405-கல்லா ஒருவன் தகைமை தலைப்ப
   சொல்லாடச் சோர்வு படும்.

படித்தவர்களைப்போல் நடிக்கும் வேடதாரிகள்,கற்று அறிந்த மேதைகளிடம் பேசும்போது வேடம் கலைந்துவிடும்.இது தேவை.
                          
406-உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
   களரனையர் கல்லா தவர்.

கல்லாதவன் களர் நிலத்திற்கு ஒப்பாவான்,அவன் நடை பிணத்தைப் போன்றவன்.இது தேவை.

407-நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
   மண்மான் புனைப்பாவை யற்று.

கல்வியறிவற்றவர்களின் அழகான தோற்றம் என்பது,கண்ணை கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவர். இது தேவை.

408-நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
     கல்லார்கண் பட்ட  திரு.

கல்லாதவன் இடம் உள்ள செல்வம் ,நல்லவர்களை வாட்டும் வறுமையை விட அதிக துன்பத்தை தரும்.இது தேவை.

409-மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
   கற்றா ரனைத்திலர் பாடு.

சிறந்த கல்வி கற்றாலே உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனும் வேற்றுமையை போக்கிவிடும்.இது தேவை .
                          
410-விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
   கற்றாரோ டேனை யவர்.

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேற்றுமையே உள்ளது போல் கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்கும் உள்ள வேற்றுமை ஆகும்.இது தேவை .

கல்லாமை அதிகாரத்தின் பத்து குறட்களும் படித்த மாந்தர்களுக்கும் படிக்கதவர்களுக்கும் உள்ள வேற்றுமையை வரையறுத்துக் கூறுகிறது.இவை யனைத்தும் மாணவர்கள் கற்க தகுதி வாய்ந்தவை.
கல்லாதவர்களுக்கும்,கற்றறரிவு கொண்டவர்களுக்கும் உள்ள வேற்றுமையை, கல்லாமை அதிகாரத்தின் பத்துக் குறட்களும் சிறப்பாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. 
                 ******************************************************
இன்றய மின்னணு நாட்களில், படிக்காதவன் பின்பற்றும் சம்பரதாயம் சடங்குகளில் அறிவியல் தன்மை இருக்கும் என படித்த பொறியியல் பட்டதாரிகளும்,மருத்துவ பட்டம் பெற்றவர்களும், அறிவியல் பட்டம் பெற்ற ஆசிரியர்களும் விரதம் இருந்து உடலை வருத்தி,உள்ளத்தை வருத்தி மன வியாதிக்கு ஆளாகி ஆண்டு தோறும்,மாதங்கள் தோறும்,வாரங்கள் தோறும்,தினமும்(சோமவார விரதம்,மக்களவார விரதம்,குருவாரவிரதம்,வெள்ளிக்கிழமை விரதம்,சனி பிரதோஷம்,இது தவிர மாதந்தோறும் வரும் நட்சத்திர விரதங்களான சதுர்த்தி,பஞ்சமி,சஷ்ட்டி,பூசம்,பிரதோஷம் நாட்களில் விரதம் இருந்து உடல் பலத்தை இழந்து சீரழிகின்றனர்.

சக்கரை வியாதியும் மன அழுத்த ரத்தக் கொதிப்பும் வந்து தீரா வியாதிகளால் அவதிப்படும்போது கூட தங்களை மாற்றிக்கொள்ள விரும்பாத சுய அறிவற்ற மக்கள், ஆரோக்கியமான வாழ்விற்கு அர்த்தமற்ற சடங்குகளை ஒழித்தாலே போதும் என உணரும் காலம் எப்போ?
                          *********************

No comments: