40-கல்வி
391-கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக.
ஐயங்கள் தீர கற்க வேண்டும்,படித்தவனுக்கு அழகு, படித்தபடி வாழ்க்கையில் ஒழுக
வேண்டும்.இது தேவை.
392-எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
ஒரு மனிதனுக்கு எண்ணும் எழுத்தும்,அதாவது கணக்கு பாடமும்,படிக்க தெரிந்த அறிவும்
இரண்டு கண்களைப் போன்றதாகும்.இது தேவை .
393-கண்ணுடைய ரென்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
கல்லாதவர்களுக்கு உள்ள இரண்டு கண்களிருந்தும் அவைகள் முகத்தில் அமைந்துள்ள
புண்களாகும்,அதே நேரத்தில் கற்றவர்களுக்கு கண்களில்லா விட்டாலும் அவர்கள் அகக்கண்களைப்
பெற்றவர்களுக்கு ஒப்பாவர்.இது தேவை.
394-உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
மகிழ்ச்சியுடன் பழகுவதும் ,பிரிந்திட நேரும் போதும் பிரிகிறோமே என வருந்துவதும் கற்றோரின்
சிறப்பாகும்.இது தேவை .
395-உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்ல தவர்.
செல்வந்தர் முன் வறியவர்கள் பணிந்து நிற்பது போல்,கற்றவர்முன் கற்றவரே பணிந்து
நிற்பதே கற்றோரின் சிறப்பு.இது தேவை.
396-தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
மணலைத்தோண்ட தோண்ட நீர் ஊற்று பெருகும், அதுபோல கற்றோர் படிக்க
படிக்க தன் அறிவு பெருகிக்கொண்டே இருக்கும்.இது தேவை.
397-யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
ஊரில் யாரிடமும் எதற்கும் போய் நிற்காமல் சிறப்பாக வாழும்போது ,ஒருவன் சாகும் வரை
கல்லாமல் வாழ்வது ஏனோ?இது தேவை.
398-ஒருமைக் கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாம் புடைத்து.
ஒருவன் தான் கற்ற கல்வியானது,தன் வாரிசுகளுக்கும் கல்வியறிவு தொடரும்.இது தான்
உண்மை.
எழு பிறப்பும் தொடரும் என்பதாக பொருள் கொண்டால் மெய்ப்பித்தல்
தத்துவத்திற்கு முரணாக அமையும்.எனவே ஒருவன் கற்ற கல்வி தலைமுறை தலை முறைக்கும்
தொடரும்,
தன் வாரிசுகளால் போற்றப்படும் என்பதே உண்மை.இது தேவை.
399-தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
தாம் கற்றதை உலகினர் இன்புறுவதைக்
கண்டு மேலும் மேலும் கற்பதை விரும்புவர் கற்றோர் .இது தேவை.
400-கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
ஒருவருக்கு பெற்ற செல்வங்களுள்
கல்வியே சிறந்த செல்வம்,மற்ற எதுவும் சிறந்த செல்வம் இல்லை.இது தேவை.
‘கல்வி’ அதிகாரத்தின் பத்து குறட்களும் கல்வியறிவு
பெறுவதின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கின்றன, எனவே இவையனைத்தும் மாணவர்கள்
கற்க தகுதியானவை.
************************************************
யாகம்,வேள்வி ,ஹோமம்,அஷ்ட்ட பந்தனம்,கும்பபஷேகம்-இதெல்லாம் என்ன?
யாகம்,வேள்வி ,ஹோமம்,அஷ்ட்ட பந்தனம்,கும்பபஷேகம்-இதெல்லாம் என்ன?
சுய சிந்தனையற்ற வெய்யிலாளிகளின் உழைப்பை சுரண்ட அய்யோக்கியர்கள்
காட்டும் வேடிக்கைதானே?
உணவுப்பொருளை உற்பத்தி செய்ய திராணி யற்றவர்களுக்கு இந்த யாகம்,வேள்வி ....செய்ய
என்ன யோக்கியதை உள்ளது?
இதற்கு தமிழ் புலவர்கள் மெனக் கெடுகின்றனர்!
உழைப்பாளிகளை திசை திருப்பியவர்களே தமிழ் புலவர்கள் தான்,ஆம் புராணங்களை பாடிய,புலவர்கள் தான்!
அதில் புனிதம் உள்ளன என இன்றும் நம்பி காவடி எடுக்கும் தமிழர் சீரழிவுக்கு
காரணமே புலவர்கள் தான்!
*************************************
No comments:
Post a Comment