7- மக்கட் பேறு
61-பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
அறிவார்ந்த மக்கள் பெறுவதில் இருக்கும் புகழ் வேறெதிலும் இல்லை-இது தேவை
62-எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிப்பிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
ஒருவர் பண்புடைய மக்களைப் பெற்றால் எழுபிறப்பும் தீயவை தீண்டாது-இது உருப்பொருள்
தத்துவத்திற்கு மாறானாது.இந்த குறள் தேவையற்றது.
63-தம்பொருள் எண்பதம் மக்கள் அவர்பொருள்
தத்தம் வினையான் வரும்
ஒருவருக்கு தாம் பெற்ற மக்களே அவர்களுக்கு செல்வம்,ஆனால் அவர் பெற்ற மக்களின்
செல்வம் அவரவர் செயல்களால் வரக்கூடியது.இது உண்மை
64-அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
தம் குழந்தைகளின் கரங்கள் பட்டு தெரித்த கூழ் அல்லது மிச்சப்பட்ட உணவை
அமுதம்போல் பருகுவர்.இது உண்மை
65-மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
குழந்தைகள், தமது மெய்தீண்டினால் அதுவே உடலுக்கு இன்பம் தரக்கூடியது,அதே குழந்தைகள்
சொல்லும் சொல் காதுகளுக்கு இன்பம் தரக்கூடியவை.இது உண்மை.
66-குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
இசைக்ருவிகள் மீட்டலால் வரும் ஓசை காதுகளுக்கு இன்பம் தரக்கூடியது.அதைவிட
இன்பம் தரக்கூடியவை தம் மக்களின் மழலைச் சொல் .இது உண்மை.
67-தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
தம் மக்களை அறிஞர் அவையில் ஒரு அறிவுசார் மக்களாக உலாவரச் செய்வது ஒரு
தந்தையின் கடமையாகும்-இது தேவை.
68-தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
பெற்றவர்களைக்காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால் ,அது பெற்றோருக்கு
மட்டுமல்ல உலகில் வாழும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.இது தேவை
69-ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
தன் பெற்ற பிள்ளையை ஊரார் பாராட்டும் போது,பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியை
விட அதிகம் மகிழ்ச்சியடைவாள் தாய்.இது உண்மை.
70-மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்
மகனால் தந்தைக்கு பெருமை எது என்றால் ஊரார், இவனைப் பிள்ளையாக பெற்றது
இவன் தந்தை பெற்ற பேறு என புகழப்படும் போதுதான்.இது உண்மை.
இந்த ‘மக்கட்பேறு’ அதிகாரத்தில் 62-ம் குறள் கற்க தகுதியற்றது
No comments:
Post a Comment