Sunday, March 18, 2018

32-இன்னா செய்யாமை



                   32- இன்னா செய்யாமை

311-சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
   செய்யாமை மாசற்றார் கோள்.

எத்தகைய சிறப்பு வாய்ந்த செல்வத்தை ஒருவர்  பெற்றிருந்தாலும்,பிறருக்கு கேடு செய்யாமலிருப்பதே குற்றமற்றவர்களின் குணமாகும்.இது தேவை.

312-கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
   செய்யாமை மாசற்றார் கோள்..

கோவப்பட்டு ஒருவன் ஏசும்போது,அந்த வார்த்தைகளை தாங்கிக் கொள்வதுதான் சிறந்த மனிதரின் கொள்கையாகும்.இது தேவை
    
313-செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
   உய்யா விழுமந் தரும்.

யாருக்கும் கெடுதல் செய்யாதவரை ஒருவர் அவரை பகைத்துக் கொண்டு கெடுதல் செய்துவிட்டால் ,அவருக்கு மீளா துயர் தரும்.இது தேவை.

314-இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
   நன்னயஞ் செய்து விடல்.

நமக்கு தீங்கு செய்வோரை நல்லது செய்து அவர் வெட்கப்படுபடி செய்வதே அவரை தண்டிக்கும் செயலாகும்.இது தேவை.

315-அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
   தந்நோய்போற் போற்றாக் கடை.

பிறருக்கு வரும் நோய் கண்டு ,தனக்கு வந்தது போல் பாவித்து உதவாதவர் ,அவருக்கு அறிவிருந்தும் பயனில்லை.இது தேவை.

316-இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
   வேண்டும் பிறன்கட் செயல்.

தனக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுபவித்தவர் அதைப்போன்ற துன்பத்தை பிறருக்கு செய்யாமலிருக்க வேண்டும்.இது தேவை.

317-எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
   மாணாசெய் யாமை தலை.

எந்த அளவிலும் ,முப்பொழுதும் எவரையும் இழிவு படுத்தாமல் இருப்பதே சிறந்தது.இது தேவை.

318-தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
     மன்னுயிர்க் கின்னா செயல்.

பிறர் தனக்கு தரும் துன்பத்தை உணர்ந்தவன் ,அதே துன்பத்தை பிறருக்கு தரக்கூடாது.இது தேவை.

319-பிறர்க்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா
   பிற்பகல் தாமே வரும்..

வாழ்க்கையின் முற்பகுதியில் ஒருவர் ,இன்னொருவருக்கு தீங்கு விளைவித்தால்,அதே அளவு தீங்கு அவருக்கு வாழ்க்கையின் பிற்பகுதியில் நேரும்.இது தேவை.


320-நோயல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
   நோயின்மை வேண்டு பவர் .

தீங்கற்ற வாழ்வு வேண்டும் என்பவர் யாருக்கும் தீங்கு இழைத்தல் கூடாது.இது தேவை.

இன்னா செய்யாமைஅதிகாரத்தின் பத்து குறட்களும் மனித குலம் கற்க தகுதி வாய்ந்தவை.
                
                      ************************************** 
அகம் பிரம்மம்    இது சங்கரர் சொன்னது.மனம்தான் பெரியது,அவ்வளவே!விக்கரக வழிபாடுகளால் மோட்சம் பெற முடியாது,அப்படியானல் ஆலயம் தோறும் நடந்து சென்று தமிழ் புலவகள் ஸ்த்தல புராணங்கள் பாடினார்களே,யாரை ஏமாற்ற ?
பக்தர்கள் யார்? புலவர்கள் யார்?

பரமாத்மனே யேர் ரக்தஹ
விரக்தோ அபரமாத்மநீ

பக்தன் என்பவன் கடவுளைத்தவிர யார் மீதும்(பெண்,புத்தர மோகம் இல்லா)பற்று இல்லாதவன். பிராமணன் அல்லாதவன் சந்நியாசியாக்கூடாது-இது மநு வகுத்த விதி.     

No comments: