Saturday, April 21, 2012

1-திருமுகத்தின் மறுமுகம்- தமிழகத்தில் பிறமொழிக்காரர்களின் மறுமுகம்


                       
                           பொருளடக்கம்                                    

1- தமிழகத்தில் பிற மொழிக்காரர்களின்  மறுமுகங்கள்
2-எத்தனைக் காலம் ஏமாற்றும் கலைஞரின்  மறுமுகம்
3-தமிழக முதல்வர்களின் மறுமுகங்கள்
4-செல்வந்தர்களின் மறுமுகங்கள்
5-மாயாவதியின் மறுமுகம் 
6 மறு முகம் இல்லா திருமுகங்கள்
7-கடவுளின் மறுமுகம்
8 அழுக்குத்தமிழனின் மறுமுகம்
9-திருமுக மகனின் மறுமுகம் 
10-அறிவியலாளரின் மறுமுகங்கள்
11-ஆட்சியாளரின் மறுமுகங்கள்
12அரசியல் மற்றும்  அதிகாரிகளின்  மறுமுகங்கள் 
13-பத்திரிக்கை முதலாளிகளின் மறுமுகங்கள்
14-ராச பக்சேவின் மறுமுகம்
15-மாமுனிவனின் மறுமுகம்
16-ஆரியர்களின் மறுமுகங்கள்
17-ஆன்மீக வாதிகளின் மறுமுகங்கள்
18-பலசாலிகளின் மறுமுகங்கள்
19-மருத்துவ மற்றும் மருந்து கடை முதலாளிகளின் மறுமுகங்கள்
20-சூதாட்ட வியாபாரியின் மறுமுகம் 
21-அரசியல் வாதியின் மறு முகம் 
22-தேசியவாதிகளின் மறு முகங்கள்
23-வியாபாரிகளின் மறுமுகங்கள்
24-சிதம்பரத்தின் மறு முகம்
25-ஆறறிவு மனிதர்களின் மறுமுகங்கள்
26-கூட்டுக்கொள்ளை கொள்கை அரசியல்வாதிகளின்    மறுமுகங்கள்            27-மருத்துவர்களின் மறுமுகங்கள்
28-விளையாட்டு(அரசியல் ?) வீரர்களின் மறுமுகங்கள்
29-யாத்ரிகர்களின் மறுமுகங்கள்
30-பெற்றோர்களின் மறுமுகங்கள்
31-இதிகாசதேசியவாதிகளின் மறுமுகங்கள்
32-நித்தியானந்தாவின் மறுமுகம்
33-ஐ.நா.அவையின் மறுமுகம்
34-திராவிடக்கட்சிகளின் மறுமுகங்கள்
35-வியாபாரி -பத்திரிக்கையாளரின் மறுமுகங்ள்
36-அரசாங்கத்தின் மறுமுகம்
37-இந்திய அரசின் மறுமுகம்
38-தமிழரின் மறுமுகம்
39-பக்தர்களின் மறுமுகங்கள்
40-நீதிபதியின் மறுமுகம்
41-உயிரினத்தோற்றம்
42-ஆன்மா-ஆத்மா



                       

                           திருமுகத்தின் மறுமுகம்                    01.09.2011                                                                                                                                                                                                            
                   1-தமிழகத்தில் பிற மொழிக்காரர்களின் மறுமுகங்கள்
அன்று காலை 6 மணி
2011 ஆகத்து மாதத்தின் முதல் வாரத்தின் ஒருநாள்.
வழக்கமாக காலை நான் நடை பயிற்சி முடித்து வீடு திரும்பும் முன் காலை செய்திதாட்களை வாங்கிவருவது வழக்கம்.
அப்படி வாங்கி வரும்போது சாலை ஓரம் ஈழத்தமிழர்களை சுட்டு வீழ்த்தும் காட்சி சித்தரிக்கப்பட்ட ஒரு டிஜிடல் சுவரொட்டி வைக்கப்பட்டிருந்தது.

அதை நான் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு பெரியவர் ,இது என்ன ? என எனைப்பார்த்து வினவினார்.
‘ஈழ இன படுகொலை                                
தடுத்த நிறுத்த கோரியும் போர்குற்ற விசாரணை நடத்த ஐ.நா சபையை வலியுறுத்தியும் தமிழர் பாது காப்பு இயக்கம் வைத்துள்ள சுவரொட்டி’-அவர் புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.
அப்படி என்றால் என்ன? என மீண்டும் வினவினார்.
தங்களுக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கம் உண்டா ?
‘உண்டு.ஆனால் தெலுங்கு மட்டுமே தெரியும் .தெலுங்கு பத்திரிக்கை மட்டுமே படிப்பேன்’என்றார்
அவரை நான் பல முறை பார்த்துள்ளேன் .அவர் ஒரு தெலுங்கர் என எனக்கு தெரியாது.
ஈழத்தமிழர் என்றால் தெரியுமா ?
தெரியாது.
இலங்கை தெரியுமா?
தெரியும்.
அங்கே தமிழர்கள் கொல்லப்படுவது தெரியுமா ?
தெரியாது.
பிரபாகரன் கொல்லப்பட்டது தெரியுமா ?
தெரியும்.வீரப்பனை சாகடித்ததும் தெரியும்.
‘இரண்டு பேரையும் சாகடித்தது சரிதான்’.அவர் தலை குனிந்து நடக்க ஆரம்பித்தார்.
என்ன ?---?

 அவர் விலகிச்சென்றுவிட்டார்.மேலும் என் விளக்கம் அவருக்கு தேவைபடவில்லை.
ஆக
தெலுங்கு தேசத்தில் அம்மக்கள், தமிழர்களைப்பற்றியும்,ஈழ தமிழர்களைப்பற்றியும் அறிந்தது அவ்வளவுதான்.அந்த தேசத்தின் பத்திரிக்கை தர்மம் அவ்வளவுதான்.
ஆனால் தெலுங்கர்கள் இங்கு வந்து சொத்து சுகம் மாடமாளிகை கட்டிக்கொண்டு கால்மேலே காலை போட்டுக்கொண்டு நாதியற்ற தமிழனை நாட்டாமை செய்ய ஆசை மட்டுமல்ல,தமிழ் தேசத்தை ஆளவேண்டும் என்கிற வெறி உள்ளது

கேரளத்தில் அவர்கள் மலையாள மொழி பேசும் மலையாளிகள்.
கன்னடத்தில் அவர்கள் கன்னடமொழி பேசும் கன்னடர்கள்.
ஆந்திரத்தில் அவர்கள் தெலுங்கு பேசும் தெலுங்கர்கள்.
 ஆனால் தமிழர்கள் மட்டும் திராவிடர்கள்.
இவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டும் என்பது தமிழன் மேல் திணிக்கப்பட்ட கருத்து.
ஏனெனில் தமிழினம் அடிமை இனம்தானே? மிருக இனத்தில் அவன் பொதிசுமக்கும் கழுதை. எஜமான விசுவாசத்திற்கு உதாரணமான நாய்  இந்த இரண்டு இனத்தின் கலப்பினத்தை சார்ந்தவன் 
அதனால் திராவிடம் என கூறிக்கொண்டு இங்குள்ள தெலுங்கர்கள் தமிழர்களுக்காக வாழ்வதாகவும் ,தமிழுக்கு உயிர் விடுவதாகவும் மேடை போட்டு முழங்குவது வழக்கமாகிவிட்டது,பழகிவிட்டது. ,தமிழன் ஒரு இளிச்ச வாயன் என்று உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதை எந்த தமிழனும் உணர்ந்ததாக தெரியவில்லை.
பன்னெடுங்காலமாக தமிழகத்தின் வந்தேரிகள் இதைதான் செய்து கொண்டு இருக்கிறார்கள் .
இன்றும் தமிழர்கள் தங்கள்  இனத்தை காட்டிகொடுத்தும் ,தங்களையே மட்டம் தட்டிக்கொண்டும் அவர்கள் இடும் பிச்சையை நக்கிக்கொண்டு இருக்கின்றனர்.
இங்கு பிரபலமான அரசியல் தலைவர்(இவர் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்,சினிமா நடிகர்)அவர் பேசும் மேடையில்,~தமிழெனன்று சொல்லடா,தலை நிமிர்ந்து நில்லடா” என்று மேடையில் விளம்பரதட்டி வைப்பார் .
அதை பார்த்து நம் தமிழன் புளங்காகிதம் அடைந்து விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்வான்
                                  
இன்றும் தமிழகத்தில் இரண்டு அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொண்டால் (இவர்கள் பெரும்பாலும் தெலுங்கு,கன்னடம் மற்றும் மலயாளம் மொழிகளை  தாய் மொழியாக கொண்டவர்களாகவே இருப்பர்) தத்தமது தாய் மொழியில் தான் உரையாடுவர் .
அதை பார்த்துகொண்டிருக்கும் நம் தமிழன் அப்பொழுது கூட, அவர்களின் திருமுகங்களின் மறுமுகங்களை உணரத்தெரியவில்லை என்பதுதான் உண்மை.
தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து செல்லடா!


--அடுத்துவருவது,எத்தன்னைக்காலம்தான் ஏமாற்றுவார் இந்த கலைஞர்-2






No comments: