Sunday, December 27, 2020

ஏ.அ-62

 

என்ன செய்தார்,பெரியார்? தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்டவர்களை கடவுள் இல்லை,அந்த கற்சிலையை ஏன் நீங்கள் பார்க்க வேண்டும்? என சொல்வதற்கு பதிலாக வாங்கள்,கோயிலுக்குள் போகலாம் என கோயிலுக்குள் நுழைய முற்பட்டார்.நிலைமையை முன்கூட்டியே உணர்ந்த காவல்துறை பெரியாரையும் மற்றவரையும் கைது செய்தனர்.ஏன் இந்த நாடகம்?

கோயில்களை கட்டிக் கொடுத்து விட்டு, அர்ச்சகர்களை கற்சிலைகளுக்கு ஆராதனை செய்யட்டும் என அனுமதித்து விட்டு, வெய்யிலாளிகளில் ஒரு பிரிவினரை உள்ளே நுழையலாம்( வன்னியர்) மற்றவர்களெல்லாம் (பறையர் மற்றும் பஞ்சமர்) வெளியே நிற்க வேண்டும் என சொல்லிவிட்டனர்.உடனே வெய்யிலாளி இனத்தில் இரு பிரிவுகளாக பிரிந்து கோயில்களுக்கு முன் சண்டை இடுவதை ஆதிக்க சாதிகள் வேடிக்கை பார்த்தனர்.இதில் பெரியாரின் நயவஞ்சக செயல் கண்டிக்கத்தக்கது. பெரியார் என்ன செய்திருக்க வேண்டும்?

இரு பிரிவு வெய்யிலாளிகளையும் அழைத்து,’கடவுளே இல்லை,கோயில்களில் இருக்கும் கற்சிலைகளுக்கு உயிரோட்டம் இல்லை,அவை வெறும் கற்கள்,நீங்கள் யாரும் கோயிலுக்கு செல்ல வேண்டாம்,

அங்கே தட்டேந்தி நிற்கும் அர்ச்சகர்களுக்கு காசு போட வேண்டாம்.மொத்தத்தில் கோயிலுக்கே செல்ல வேண்டாம், கோயில்களை மூடுங்கள்.என போராடியிருக்க வேண்டும். இதை செய்திருந்தால் பெரியார் உண்மையிலேயே பகுத்தறிவாளிதான். இது போன்று கோயில்களை மூடும் போராட்டம் நடத்தியிருந்தால், அவர் சார்ந்த இன (தெலுங்கர்கள்) மக்கள் எதிர்ப்பு அதிகம் இருக்கும் என உணர்ந்து அந்த போராட்டத்தை பெரியார் முன்னெடுக்க வில்லை. இது பெரியாரின் நயவஞ்சக செயல்தானே?

No comments: