Monday, November 30, 2020

ஏ.அ-46

 

குழந்தைகள் வளர வளர அவர்களுக்கும் இது ஒரு சம்பரதாயம், என தோன்றும், நம் முன்னோர்கள் போல் நாமும் பின்பற்றுவோம் எனும் எண்ணம் அவர்கள் மனதில் தோன்றும்,இதுவே பொங்கல் கொண்டாட்டம்.

குழந்தைப் பருவத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லித்தரும் பழக்க வழக்கம் என்பது அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் மனதில் கொள்ளும் நிகழ்ச்சிகளாக பதிந்து விடும்.

எனக்கு என் அம்மா சொல்லி தந்த குழந்தைப்பருவ பழக்கங்கள் என்பது எந்திரத்தனமானது,ஆம் காலை எழுந்த உடன் படிக்க வேண்டும்,பின் குளிக்க வேண்டும்,குளித்த பின் பூஜை அறைக்கு செல்ல வேண்டும், பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் கடவுளர் படங்களுக்கு மலர் தூவி பின் கற்பூரம் கொளுத்தி படங்களுக்கு காட்ட வேண்டு்ம்,பின் ஊதுவத்தி கொளுத்தி வைக்க வேண்டும்,முடிந்த உடன் தயாராக வைக்கப்பட்டிருக்கும் ஒரு டம்ளரில் உள்ள நீரை ஆராதனை செய்ய வேண்டும்.

பின் கடவுளிடம் பாடல்கள் மூலம் தேவைகளை பட்டியிலிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அப்படித்தான் நான் ராமலிங்க அடிகளார் முருகனைப் பாடி தொழுத பாடலான, ’ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்.......எனும் பாடலை முழுமையாக பாடி தினமும் பூசையை முடிப்பேன்.பின் பள்ளி கல்லூரிக்கு செல்ல வேண்டும்.....இது எங்க அம்மாவின் ஆசை,உத்தரவு.

ஆண்டொன்று போக வயதொன்று கூட அறிவியல் சிந்தனை வளரும்,வளர வேண்டும். இதுவே முழுமையடை முயற்சிக்கும் மனிதனின் செயல். மனிதர்களுக்கு குழந்தை பருவம் முடிந்ததும்(18 வயது வரை} சுய சார்புத்தன்மை வளரும். கூடவே சுற்று சூழல் பாதிப்புகளையும் உணரத்தெரிய வேண்டும்.

No comments: