Thursday, November 19, 2020

ஏ.அ-43

 

எழுத படிக்கத்தெரியாத மக்கள்,விவசாயத்திற்கு படிப்பு அவசியமில்லை என முடிவு பண்ணி தங்கள் இஷ்ட்டத்திற்கு அதிக பட்சம் 12 பிள்ளைகள் பெற்றவர்கெளல்லாம் வாழ்ந்தனர்.எனக்கு தெரிந்து ஒரு முதலியார் இணையர் 17 பெண்களும் கடைசியாக ஒரு ஆண் பிள்ளையும் ஆக 18 பிள்ளைகளை பெற்றனர்.இவர்கள் எங்கள் கிராமத்து அருகே உள்ள ஆரணி நகரத்தில் வாழ்ந்தனர்.

எங்க தந்தை இறந்த அடுத்த ஆண்டு(1991) கார்த்திகை 20 தேதியில் அம்மாவின் நினைவு நாளையும் இணைத்து இருவருக்கும் ஒரே நினைவு நாளை அனுசரிக்கத் தொடங்கினோம். நினைவு நாளை அக்கம் பக்கம் உறவினர்களுக்கு உணவளித்து முடிப்பதை விட அன்று வரும் மாற்று புடவை இல்லா பெண்களுக்கு புடவை ரவிக்கை வழங்க முடிவு செய்தேன்.

என் மாத சம்பளத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய் பேங்கில் போட்டு வைத்து கார்த்திகை மாதம் 20 புடவை ரவிக்கை எடுத்து உறவினர்களுக்கும்  பக்கத்து வீடுகளை சார்ந்த பெண்மணிகளுக்கும் உணவளித்து வழங்குவதை வழக்கமாக கொண்டேன்.

அதன் பின் என் பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்தனர்.எனக்கும் சம்பளத்தில் மிச்சம் செய்து அதிக சேமிப்பு வைத்தேன்.

பணத்தை சேர்த்து வைத்து என்ன சாதிக்கப் போகிறோம்?

நாம் ஏன் என் சேரிவாழ் குடும்ப பெண்களுக்கும் புடவை ரவிக்கை வழங்க கூடாது என யோசித்தேன்.1995 லிருந்து ஆண்டு தோறும் 70 புடவைகள் எடுக்க ஆரம்பித்தேன் ஒரு புடவை ரவிக்கையின் விலை 200 ரூபாய்க்குள் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்.

அப்போது தான் துணி தரமாக இருக்கும் என்பது என் கணிப்பு. சில நேரங்களில் ரூ.200 அல்லது 220 கூட தாண்டும்.

No comments: