Wednesday, November 18, 2020

ஏ.அ-42

 

அதற்கு அவர், ‘பரவாயில்லை தேய்பிறையில் கூட திதி தரலாம்உடனே நான் இந்த குழப்பமெல்லாம் வேண்டாம், நாங்களே தமிழ் மாதத்தில் வரும் இறந்த நாளை அனுசரித்துக் கொள்கிறோம்,அடுத்த ஆண்டு முதல் நீங்கள் வரவேண்டாம்என சொல்லி அய்யரை தடுத்து நிறுத்தினேன்.

அதுமுதல் நாங்கள் அக்கம் பக்கம் உள்ள  உறவினர்களுக்கு உணவளித்து விரதத்தை முடிப்போம்.

1990 கார்த்திகை 20 நாள் வியாழன் அன்று எங்கள் தந்தை வயோதிகத்தின் காரணமாக இறந்து போனார்,

அவருக்கு அப்போது 93 வயதிருக்கும்,இது என் தோராய கணக்கு. எங்கள் அப்பா இறந்த போது எனக்கு 39 வயது. 39 வருடங்களுக்கு முன் நான் பிறந்த போது எங்கள் அப்பாவுக்கு 55 வயதிருக்கும். எங்க அம்மாவுக்கு 40 வயதிருக்கும்.பொதுவாக பெண்களுக்கு பிள்ளை பெரும் வயது அதிக பட்சம் 45 அல்லது 46 வயது தான்.எனக்குப் பின்னால் என் தம்பி 5 ஆண்டுகள் கழித்து பிறந்துள்ளான்,என்பதை என் தாய் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.45க்கு மேல் தாய் பிள்ளை பெறுவது என்பது இயலாத காரியம். அந்நாளில் பெண்கள் கடைசி வயது வரை பிள்ளை பெறுவது என்பது ஒரு வழக்கம்.என் தந்தைக்கும் தாய்க்கும் 15 ஆண்டுகள் வயது வித்தியாசம் இருக்கும் என்பது என் யூகம். எனவே என் தந்தையின் இறந்த வயதை 90 அல்லது 93 இருக்கும் என கணக்கிட்டேன்.

No comments: