Sunday, November 22, 2020

ஏ.அ-44

பிறந்த அத்துணை குழந்தைகளுக்கும்,உணவு உடை,கல்வி, உறைவிடம் கிடைக்க இந்த அரசு அனைத்து முயற்சிகளும் எடுக்கின்றதா? கல்வியை இலவசமாக கட்டாயமாக குழந்தைகளுக்கு வழங்கினால் மட்டுமே தன்மானத்தோடு அவர்கள் உணவைதேட முடியும்.

பொது வழிப்பாட்டுத்தலங்கள் இருப்பதாலேயே பெரும்பாலான மக்கள் உழைக்க போகவேண்டும் எனும் எண்ணத்தையே வளர்த்துக் கொள்வதில்லை. எனவே கோயில்களை,சர்ச்சுகளை,மசூதிகளை மூடி விட்டால் அவரவர் வீட்டிலேயே கடவுகளை வணங்கிக் கொள்வர்.சமுகத்தில் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து போகும். இதை அரசாங்கம் தான் செய்ய வேண்டும்`!

அடுத்து, நான் கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டிருப்பதில் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போக வாய்ப்புண்டு. என் வழித்தோன்றல்கள் மனதில் வாழ்க்கைப்பற்றிய அர்த்தம் இல்லாமல் போகும். அதாவது அவரவர்கள் மனம் போன போக்கில் வாழ நினைப்பர். எனவே குடும்ப நிகழ்ச்சிகளில், பெரியவர்களை வணங்க வேண்டும், என்பேன். இது கடவுள் மறுப்பாளருக்கு ஒவ்வாது, ஆனால் வாழ்க்கை முறைகளை பகுத்தறிவுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுகின்றோம்.   

என் வாழ் நாளில் நான்,கடவுள் மறுப்பு சிந்தனைகளில் வளர்ந்த குடும்பங்களை மகிழ்ச்சியற்ற குடும்பமாக இருந்துள்ளதை நான் கண்டிருக்கின்றேன்.காரணம் கடவுள் மறுப்பாளர்கள் குடும்பங்களில் பெரும்பாலும் சடங்கு சம்பரதாயம் நிகழ்ச்சிகளை ஒதுக்கி விடுவர். இதனாலேயே அந்த குடும்பங்களில் மகிழ்ச்சியற்று காணப்படும். குழந்தைகளின் குதுகலம் என்பது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் பண்டிகைக்கால விழாக்களே!

 

No comments: