எனவே தான் அவ்வகை மனிதர்களை புறந்தள்ளிவிட்டு,நான் ஏழாம் அறிவு இயக்கம் ஆரம்பித்துள்ளேன்.இதில் முழுக்க முழுக்க உண்மைத்தன்மை கொண்ட பதிவுகளே உள்ளன.மெய்ப்பியல் (materialism) என்பது குறளில் சொல்லப்பட்ட,
‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு’
இதை தமிழன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சொல்லிவிட்டான்.
மனிதர்களின் வாழ்வியல் முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது இந்த பொருளியல் வாதம்.கண்ணால் காண்பதே நிஜம்,தீர விசாரிப்பதும் அறிவே!
இன்று உலகெங்கும் நுண்ணுயிரியால்(வைரஸ்) இப்பொழுது மனிதர்ளுக்கு தீங்கு விளைந்துள்ளது. அந்த நுண்ணுயிரிகளை நிலைப்படுத்தி அதை கொல்ல எதிர் வினை நுண்ணுயிரிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அறிவியலாளர்கள் இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment