இதனை உணர்ந்த, நான் அக்கம் பக்கத்தினர் தீபாவளி போன்ற விழாக்கள் கொண்டாடும்போது நம் பிள்ளைகளுக்கு உற்சாகம் குறையக்கூடாது எனும் நோக்கில் மற்றவர்களைப் போல் பலகாரங்கள் செய்து கொடுக்கச் சொல்லி என் மனைவியிடம் சொல்வேன். அவளும் மனம் கோணாமல் குழந்தைகளுக்கு பலகாரங்களை செய்து கொடுப்பாள்.
அந்நாளில் கிராமத்து மக்களுக்கு தினசரி உணவென்பது கூழும் களியும் தான்.
தீபாவளி என்பது கோழி அல்லது ஆட்டு இறைச்சியுடன்,இட்லி,தோசை மற்றும் வடை பாயாசம் போன்ற உணவு வகைகளை இரவு பகல் கண்விழித்து செய்து பிள்ளைகளுக்கு கொடுப்பார்கள். இப்பொழுதெல்லாம் இட்லி தோசை தினசரி காலை உணவாகி விட்டதால் தீபாவளியின் மவுசு குறைந்து விட்டது.
பொங்கல் என்பது உழவர் திருநாள் என்பதால் அன்று குழந்தைகளுக்கு புத்தாடையும் எடுத்து கொடுத்து குழந்தைகளின் முகத்தில் தோன்றும் சிரிப்பை கண்டு களிப்போம். கிராமங்களில் தெருக்களில் பொங்கல் வைப்பதால், எல்லா வீடுகளிலும் குழந்தைகள் மகிழ்ந்நி பொங்க ஓடியாடி விளையாடுவர். நகரத்தில் அதுபோன்று ஒரு குதூகலம் காண முடியாது.
இப்போதெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் ஒரு சடங்காகவே முடிந்து விடுகிறது,ஆம்,காலையில் தெருவில் வீட்டு வாசல் எதிரே செங்கற்களை அடுக்கி வெண்கலப் பானையை வைத்து கடையில் விற்கும் பச்சரிசியை போட்டு பொங்கி வரும்போது இரக்கி வைத்துவிடுவோம். அதற்குள் பகல் 12 மணியை கடந்துவிடும். குழந்தைகள் முன்னிலையில் சூரியனுக்கு உணவுப் பொருளை காட்டி குழந்தைகளை வணங்கச் சொல்வோம்.
No comments:
Post a Comment