Saturday, October 31, 2020

ஏ.அ-29

 

உலகெங்கும் வாழும் வெய்யிலாளி மக்களின் கொள்கை.அது ஏன் மழுங்கி விட்டது. மாசே துங்ககுக்கு பின் ஒரு இளைஞன் கூட உருவாக வில்லை.தற்பொழுது வட கொரியா அதிபராக கிம் ஜோங் உன் துடிப்பாக உள்ளார்.இவர் மாசேதுங் உருவம் போல் தோற்றமளிக்கின்றார். வட கொரியாவை தொடர்ந்து கம்போடியாவிலும் கெமர் ரூச் சர்வாதிகார ஆட்சிக்குப்பின் போல்பாட் தலைமையில் பொதுவுடை ஆட்சி நடைபெற்றது, தற்போது ராணுவ ஆட்சி நடக்கின்றது.பொது உடைமை கொள்கைகளை ஊடகங்கள் விரும்புவதில்லை, ஊடகங்களை நடத்தும் தனி முதலாளிகள் பெரும் பணக்காரர்களே, அதனால் அது மக்களிடம் சென்றடைய வில்லை.

ஊடக முதலாளிகள், நிழலாளிகள்தானே? மற்ற நாடுகளுக்கு பரவாமல் பார்த்துக் கொள்கின்றனர். குறிப்பா முதலாளி நாடுகளின் தலைவனான அமெரிக்கா, இல்லாத கடவுளின் ஆதரவாளன். அதே எண்ணம் கொண்ட இஸ்லாமிய நாடுகளும் முதலாளித்துவ நாடுகளே.

சீனாவின் அசுர பலத்தைக் கண்டு தற்போது எல்லா வல்லரசுகளும் அஞ்சுகின்றன.தன்னுடைய பொது உடைமை கொள்கைகளை வட கொரியாவில் மட்டுமே பரவச் செய்ய முடிந்தது.தென்கொரியாவை தன்னுடைய முதலாளித்துவ கொள்கைக்கு அமரிக்கா அடிமையாக்கிவிட்டது.. சீனாவிற்கு எல்லையோர நாடுகள் என சொல்லிக்கொள்ள வட கொரியா,திபெத், மற்றும் இந்தியாவின் எல்லையோர மாநிலமான அருணாச்சல பிரதேசம் மட்டுமே

Friday, October 30, 2020

ஏ.அ-28

 

ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவின் அசுர பலத்தை கண்டு உலகமே அஞ்சியது.முரட்டுத்தனமும் மூட நம்பிக்கைகள் கொண்ட இஸ்லாமிய மக்களை திருத்தும் முயற்சியில் ரஷ்யாவின் பத்துக்கும் மேற்பட்ட அண்டை நாடுகளை தன்னுடன் இணைத்து USSR-united states of soviet Russia,எனும் வல்லரசாக இரண்டாம் உலகப்போரில் உலகைக் கலக்கியது. சுமார் 40 ஆண்டுகாலம் தன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கஜகஸ்த்தான், துர்க்மேனிஸ்த்தான்,  அர்மேனிய போன்ற நாடுகள் அந்நாட்டு மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப 90 களில் ரஷ்யாவின் அதிபராக பதவி ஏற்ற கொர்பாச்சேவ்சில ஆண்டுகளில் தனிதனி நாடுகளாக பிரித்து கொடுத்து விட்டார்,ஆனால் ரஷ்யாவின் ராணுவ பலம் மட்டும் குறையவில்லை.

ரஷ்யா, மற்றும்  சீனாவைத் தொடர்ந்து  செக்கோஸ்லோவாகியா  ஸ்பெயின், கியூபா, வட கொரியா போன்ற நாடுகளும் பொதுவுடைமை கொள்கைகளை இன்றளவும் பின் பற்றுகின்றன. உலகில் பொதுவுடைமை புரட்சி நடந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.இதுவரை எந்த நாட்டிலும் பொது வுடைமை கொள்கை கொண்ட அரசாங்கம் அமைக்கப்படவில்லை.

   பொது உடைமை கொள்கை என்பது காரல் மார்க்கசின் தனியுரிமை கொள்கையல்ல,

Thursday, October 29, 2020

ஏ.அ-27

 

1-    பெர்லின் தலை நகரை இரண்டாக பிரித்து இடையில் 20 அடி உயர கான்கிரிட் சுவர் எழுப்ப பட்டது.கிழக்கு செர்மனி ரஷ்யா ஆளுகைக்கும், மேற்கு செர்மனி ஆமெரிக்க ஆளுகைக்கும் உட்படுத்தப்பட்டது. இண்டாம் உலகபோர் 1945ல் முடிவுக்கு வந்தது.

2-   சீனா, வல்லரசு  போட்டியிலிருந்து விலகி நின்றது. ஐ.நா சபையில் வல்லரசுகளுக்கு மட்டுமே தனித்தனி அதிகாரம் வழங்கப்பட்டது.

3-   ஒரு மனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் போது யாராவது ஒரு வல்லரசுக்கு அது ஒத்து வரவில்லை என்றால், veto எனும் ரத்து அதிகாரம் அந்த ஒட்டுமொத்த தீர்மானத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் கொண்டதாக வழங்கப்பட்டது.

4-   உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக அன்றிலிருந்து இன்று வரை சீனா உள்ளது. அறிவியல் வளர்ச்சியிலும் முந்துகிறது.

5-   ஒரு நாட்டுக்கு வல்லரசு தகுதி எப்படி வழங்கப்படுகிறது என்பதை பார்ப்போம். 

1-ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சம உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

 2-சம பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.  

3-அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் இலவசமாக வழங்க வேண்டும். 

4-அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும். 

5- அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்.

6-தனி நபர் மற்றும் வியாபாரிகளுக்கு மேற் சொன்னவற்றில் இடமளிக்க கூடாது.

7-தனி நபர் நலனைவிட சமுக நலனே முக்கியம் என வரையறுக்கப்பட்டது.

Wednesday, October 28, 2020

ஏ.அ-26

 

1-    ரஷ்யாவிற்கு சென்று அதிபர் லெனினை சந்தித்து,மூலதனம் நூலை வாங்கிய மாசே துங்,தன் நாட்டில் மார்க்சு-லெனின் கருத்துக்களை இணைத்து மார்க்சிசம் எனும் புதிய சீன பொது உடைமை கொள்கையை உருவாக்கினார்.இந்த தத்துவம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.புகழ் பெற்ற சீனாவின் கலாச்சார புரட்சி (CULTURAL REVOLUTION) 1940ல் துவங்கிய புரட்சி 1965ல் முடிவுற்றது.

2-   சீனாவில் கலாச்சார புரட்சி நடந்தது என நாம் படித்திருப்போம்,ஆனால் மாணவ பருவத்தில் அது பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.

3- அது பற்றிய குறிப்பை இங்கு காணலாம். 1- பொது வழிபாட்டுத்தலங்கள் (கோயில்,சர்ச்,மசூதிகள் ) மூடப்பட்டன.கடவுள் இருப்பது உண்மையானால் அதை வீட்டில் வணங்கிக் கொள்ளட்டும்,பொது இடத்தில் கூட்டம் கூடி கடவுளை வணங்கினால்தான் கடவுள் அருள் புரிவாரா என்ன?

4-   2-கடவுளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையே வாழ்ந்த இடைத்தரகர்கள் காணாமல் போனார்கள்.

5-   3-வெய்யிலாளிகளின் ஊதியம் அதிகரித்து,நிழலில் உழைக்கும் வர்கத்தினர் ஊதியம் குறைக்கப்பட்டது. இன்றும் சீனாவில் இதே நிலைதான்.

6-   இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த 1945 ம் ஆண்டு முடிவில் சீனாவின் பலம் உலகுக்கு தெரியவந்தது.ஐநா சபை உருவான காலத்தில்  அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்சு மற்றும் ரஷ்யா. வல்லரசுகளாக அங்கீகாரம் பெற்றன.அதற்கு முன் செர்மனி மட்டுமே வல்லரசாக இருந்து வந்தது, மற்ற நான்கு நாடுகளும் ஒன்று சேர்ந்து செர்மனியின் பலத்தை குறைக்க திட்டமிட்டன. அதன் படி செர்மனியை கிழக்கு மேற்காக பிரித்து,கிழக்கு செர்மனியை ரஷ்யாவும் மேற்கு செர்மனியை அமெரிக்காவின் ஆளுகைக்கும் கொண்டு வரப்பட்டன.