உழைப்பாளிகள் குடும்பத்தோடு கோயிலுக்கு வந்து சாமி சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்தால் வீட்டில் பால் பொங்கும் என சொன்ன பார்பனர்களை நம்பி உணவுப் பொருட்களை வீணாக்குகின்றனர்..
1- பாலபிஷேகம்,அன்னபிஷேகம்,புஷ்ப்பபிஷேகம் என்பது மட்டுமல்ல கர்ப கிரகத்தில் ஒரு சிலையை நிறுவி விட்டு, இன்னொரு உலோகத்தாலான (பஞ்ச உலோகம்) சிலைக்கு தங்க நகைகளை அணிவித்து, மலர்களால் அலங்கரித்து ஊர்த் தெருக்களில் உழைப்பாளிகளில் சத்திரியர்களைக் கொண்டு பல்லக்கு சுமக்க வைத்தனர், பல்லக்கில் பார்ப்பனர்களும் உட்கார்ந்தால் தான் தட்டில் விழும் இளிச்சவாய்த் தமிழர்களின் காசு கிடைக்கும்.அதே இளிச்சவாய்த் தமிழர்களின் தோள்கள் மீது இன்றும் பல்லக்கு சவாரி செய்வதை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை,
ஏன் சுமக்க வேண்டும் என்று எந்த உழைப்பாளியும் சிந்திப்பதில்லை!2- மேலை நாடுகளில் உள்ள பொது வழிபாட்டுத் தலங்களில் சிலை ஊர்வலம், பாதிரியர்கள், மற்றும் இமாம்களை பல்லக்கில் வைத்து சுமப்பதில்லை, அவர்கள் அறிவாளிகளாகவும் மகிழ்ச்சியாகவும் வாழத்தானே செய்கின்றனர். இங்கு இதைப்பற்றி பேசினால் நமது கலாச்சாரம் வேறு,அவர்கள் கலாச்சாரம் வேறு என நம்மவர்கள் திசை திருப்புவர்.நம்மில் கலாச்சார புரட்சி ஏற்படுவது எப்பொழுது?
3- உலகில் கலாச்சார புரட்சி ஏற்படுத்திய முதல் மாமனிதர் சீனாவின் மாசேதுங் மட்டுமே.1950 களில் ஆரம்பித்து 1975ல் கலாச்சார புரட்சி முடிவுக்கு வந்தது, இன்றும் அதன் தாக்கம் தொடர்கிறது. மக்களை பொது உடைமை சிந்தனைக்கு கொண்டு சென்று வெற்றயடைந்த மக்கள் தலைவர் மாசே துங்க மட்டுமே.
4- காரல் ஹூன்ரிச் மார்க்ஸ் 1818 ம் வருடம் மே 5 ம் தேதி பிறந்தவர்.யூதர்.இவருடைய தந்தை ஒரு வழக்குறைஞர்,பின்னாளில் இவரும் வழக்குறைஞர் பட்டம் பெற்றார். சுரங்கத் தொழிலாளர்களும், பஞ்சாலைத் தொழிலாளர்களும் வறுமையில் வாழ்வதும் அவர்கள் முதலாளிகள் செல்வச் செழிப்பில் உலா வருவதையும் கண்ணுற்ற மார்க்சு தொழிலாளர் சங்கம் ஆரம்பித்தார். பத்திரிக்கைகளுக்கு தொழிலாளர் நலம் சார்ந்த கட்டுரைகள் வெளியிட்டதில் மக்களின் கவனத்தை ஈர்த்தார்,தனது 29 வயதில் அவர் எழுதிய நூல் ஒன்று அரசாங்கத்தையே உலுக்கியது. தனது 50 வயதில்(1867) ‘மூலதனம்’(capitol) எனும் தத்துவ நூலை வெளியிட்டார். இன்றளவும் அந்நூல் உலக பொதுவுடைமை தத்துவங்களை பறைசாற்றும் வேத நூலாக விளங்குகிறது.1883 ம் ஆண்டு மார்ச் 14ந்தேதி சாய்வு நாற்காலியில் படித்துக்கொண்டே இறந்து போனார்
காரல் மார்க்சு இறந்து 10 ஆண்டுகள் கழித்து அவர் எழுதிய ‘மூலதனம்’ நூலை அவரது நண்பர் எங்கர்சால் வெளியிட்டார்.அந்நூல் உலகின் பலரது கவனத்தை ஈர்த்தது,குறிப்பா ரஷ்ய புரட்சியாளர் திரு லெனின் படித்தார்.ரஷ்யா பொது உடைமை நாடாக உருவெடுத்தது.. முதலாம் உலகப்போரில்(1919) ரஷ்யாவின் USSR எனும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவின் வெற்றி,உலக வல்லரசு எனும் அங்கீகாரத்தை பெற்றது. அதன் பிறகு 1930களில் மாசே துங், ரஷ்ய அதிபரை சந்தித்து ஆட்சி மாற்றத்திற்கு காரணங்களை கேட்டறிந்தார். அந்நாளில் சீன மக்களை கடும் பஞ்சம் வாட்டியெடுத்தது. விவசாயிகள், பருவ மழை தவறியதால் தங்கள் நிலத்தில் குறைவாக விளைந்த உணவு தானியங்களை பூர்ஷ்வா அரசுக்கு அளித்து விட்டு தங்கள் குடும்ப உறுப்பினர்களை பசியில் வாட விட்டன
பட்டிணியைப் போக்க மக்கள் களிமண்ணையும் அரிசித்தவிட்டையும் பிசைந்து வெய்யிலில் காயவைத்து உரலில் இடித்து புடைத்து கஞ்சி காய்த்து குடித்து பசியை போக்கினர்.என தன் வரலாற்று குறிப்பில் மாசேதுங் குறிப்பிடுகிறார். விவசாயிகளை துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் ஏந்தி அரசுக்கு எதிராக போராட வைத்தார். இதற்காக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 25 ஆயிரம் மக்களை ஒன்று திரட்டி 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பல நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.பசியாலும் பட்டிணியாலும் பல உயிர்களை இழந்து சில ஆயிரம் மக்கள் மட்டுமே வட சீனாவை சென்றடைந்தனர். மக்களுக்கு போராடும் உணர்வை ஊட்டி வளர்த்தார்.
மூலதனம் நூலை வாங்கிய மாசே துங்,தன் நாட்டில் மார்க்சு-லெனின் கருத்துக்களை இணைத்து மார்க்சிசம் எனும் புதிய சீன பொது உடைமை கொள்கையை உருவாக்கினார்.இந்த தத்துவம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.புகழ் பெற்ற சீனாவின் கலாச்சார புரட்சி (CULTURAL REVOLUTION) 1940ல் துவங்கிய புரட்சி 1965ல் முடிவுற்றது.
5- சீனாவில் கலாச்சார புரட்சி நடந்தது என நாம் படித்திருப்போம்,ஆனால் மாணவ பருவத்தில் அது பற்றிய தெளிவான சிந்தனை நமக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.
அது பற்றிய குறிப்பை இங்கு காணலாம். 1- பொது வழிபாட்டுத் தலங்கள் (கோயில்,சர்ச்,மசூதிகள் ) மூடப்பட்டன. கடவுள் இருப்பது உண்மையானால் அதை வீட்டில் வணங்கிக் கொள்ளட்டும், பொது இடத்தில் கூட்டம் கூடி கடவுளை வணங்கினால்தான் கடவுள் அருள் புரிவாரா என்ன?
2-கடவுளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையே வாழ்ந்த இடைத்தரகர்கள் காணாமல் போனார்கள்.
3-வெய்யிலாளிகளின் ஊதியம் அதிகரித்து,நிழலில் உழைக்கும் வர்கத்தினர் ஊதியம் குறைக்கப்பட்டது. இன்றும் சீனாவில் இதே நிலைதான்.
இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த 1945 ம் ஆண்டு முடிவில் சீனாவின் பலம் உலகுக்கு தெரியவந்தது.
6- ஐநா சபை உருவான காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து,பிரான்சு மற்றும் ரஷ்யா. வல்லரசுகளாக அங்கீகாரம் பெற்றன.அதற்கு முன் செர்மனி மட்டுமே வல்லரசாக இருந்து வந்தது, மற்ற நான்கு நாடுகளும் ஒன்று சேர்ந்து செர்மனியின் பலத்தை குறைக்க திட்டமிட்டன. அதன் படி செர்மனியை கிழக்கு மேற்காக பிரித்து,கிழக்கு செர்மனியை ரஷ்யாவும் மேற்கு செர்மனியை அமெரிக்காவின் ஆளுகைக்கும் கொண்டு வரப்பட்டன.பெர்லின் தலை நகரை இரண்டாக பிரித்து இடையில் 20 அடி உயர கான்கிரிட் சுவர் எழுப்ப பட்டது.கிழக்கு செர்மனி ரஷ்யா ஆளுகைக்கும், மேற்கு செர்மனி ஆமெரிக்க ஆளுகைக்கும் உட்படுத்தப்பட்டது. இண்டாம் உலகபோர் 1945ல் முடிவுக்கு வந்தது.
சீனா, வல்லரசு போட்டியிலிருந்து விலகி நின்றது. ஐ.நா சபையில் வல்லரசுகளுக்கு மட்டுமே தனித்தனி அதிகாரம் வழங்கப்பட்டது.ஒரு மனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றும் போது யாராவது ஒரு வல்லரசுக்கு அது ஒத்து வரவில்லை என்றால், veto எனும் ரத்து அதிகாரம் அந்த ஒட்டுமொத்த தீர்மானத்தையும் ரத்து செய்யும் அதிகாரம் கொண்டதாக வழங்கப்பட்டது.உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக அன்றிலிருந்து இன்று வரை சீனா உள்ளது.. அறிவியல் வளர்ச்சியிலும் முந்துகிறது.
ஒரு நாட்டுக்கு வல்லரசு தகுதி எப்படி வழங்கப்படுகிறது என்பதை பார்ப்போம்.
1-ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சம உரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
2-சம பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும்.
3-அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் இலவசமாக வழங்க வேண்டும்.
4-அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி வழங்கப்பட வேண்டும். -
5- அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்பட வேண்டும்.
6-தனி நபர் மற்றும் வியாபாரிகளுக்கு மேற் சொன்னவற்றில் இடமளிக்க கூடாது.7-தனி நபர் நலனைவிட சமுக நலனே முக்கியம் என வரையறுக்கப்பட்டது.ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவின் அசுர பலத்தை கண்டு உலகமே அஞ்சியது. முரட்டுத்தனமும் மூட நம்பிக்கைகள் கொண்ட இஸ்லாமிய மக்களை திருத்தும் முயற்சியில் ரஷ்யாவின் பத்துக்கும் மேற்பட்ட அண்டை நாடுகளை தன்னுடன் இணைத்து USSR-united states of soviet Russia,எனும் வல்லரசாக இரண்டாம் உலகப்போரில் உலகைக் கலக்கியது. சுமார் 40 ஆண்டுகாலம் தன் ஆளுகைக்கு உட்பட்டிருந்த கஜகஸ்த்தான், துர்க்மேனிஸ்த்தான், அர்மேனிய போன்ற நாடுகள் அந்நாட்டு மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப 90 களில் ரஷ்யாவின் அதிபராக பதவி ஏற்ற ‘கொர்பாச்சேவ்’ சில ஆண்டுகளில் தனிதனி நாடுகளாக பிரித்து கொடுத்து விட்டார்,
ஆனால் ரஷ்யாவின் ராணுவ பலம் மட்டும் குறையவில்லை, ரஷ்யா, மற்றும் சீனாவைத் தொடர்ந்து செக்கோஸ்லோவாகியா ஸ்பெயின், கியூபா, வட கொரியா போன்ற நாடுகளும் பொதுவுடைமை கொள்கைகளை இன்றளவும் பின் பற்றுகின்றன. உலகில் பொதுவுடைமை புரட்சி நடந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது..பொது உடைமை கொள்கை என்பது காரல் மார்க்கசின் தனியுரிமை கொள்கையல்ல, உலகெங்கும் வாழும் வெய்யிலாளி மக்களின் கொள்கை.அது ஏன் மழுங்கி விட்டது. மாசே துங்ககுக்கு பின் ஒரு இளைஞன் கூட உருவாக வில்லை.தற்பொழுது வட கொரியா அதிபராக ‘கிம் ஜோங் உன்’ துடிப்பாக உள்ளார்.இவர் மாசேதுங் உருவம் போல் தோற்றமளிக்கின்றார். வட கொரியாவை தொடர்ந்து கம்போடியாவிலும் கெமர் ரூச் சர்வாதிகார ஆட்சிக்குப்பின் போல்பாட் தலைமையில் பொதுவுடை ஆட்சி நடைபெற்றது, தற்போது ராணுவ ஆட்சி நடக்கின்றது.
No comments:
Post a Comment