Tuesday, March 16, 2021

ஏ.அ-81

 

மிக்க மகிழ்ச்சி அய்யா,ஒரு ஆசிரியரை நினைவில் வைத்து அழைத்துள்ளீர்கள்,இது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக அமையும் அய்யா என செம்மங்கடி தெரிவித்தார்  

இருவரையும் கொண்டு சிலைகளை திறந்தேன். இதனால் எங்கள் கிராமத்தின்  முதல் தாய் தந்தையர் கோயில் அமைத்த நபராக ஆனேன்.  இளமைக்கால என் எண்ணங்கள் நிறை வேறிவிட்டது.

பள்ளிக்காலத்தில் நான் படிக்கும் தினசரி பத்ரிக்கையில் ஒரு செய்தி படித்தேன்,திரு கி.ஆ.பே விஸ்வநாதம் எனும் ஒரு தமிழறிஞர்,திருச்சியை சார்ந்தவர் அவர் திருச்சி காவேரி அற்றங்கரையில் தனக்காக 40 வயதில் ஒரு கல்லறை அமைத்து சுற்றி தென்னை மரங்கள் வைத்துள்ளதாக படித்தேன்.தன் மரணத்திற்காக காத்திருந்த அவர் 40 ஆண்டுகாலம் கழித்தே இறந்தார்.

அதைப்போல நானும் எனக்கு கல்லறை அமைத்துக் கொள்ள ஆசைப்பட்டேன். அதற்கான காலம் கனிந்து வந்தது.

2019ல் சித்தூருக்கு சென்றேன்.சித்தூரில் தேடிப்பிடித்து ஒரு கருங்கல் பலகை செய்யும் தொழிற்சாலையை கண்டுபிடித்து 6க்கு 2 அடி கொண்ட 6 கற்பலகைகளும்,2க்கு 2அடி கொண்ட நான்கு கற்பலகைகளும் ஒவ்வொன்றும் 3 அங்குல தடிமன் கொண்டது..என் மனைவிக்கும் எனக்கும் இணைந்து இரு கல்லறைகள் அமைக்க ஆசைப்பட்டேன்.

திருவள்ளூரிலிருந்து ஒரு மினி ட்ரக் கொண்டு போய் எடுத்து வந்தேன்.இதற்கு ரூபாய் 40 ஆயிரம் ஆனது.உள்ளூர் கல் தச்சரை கொண்டு செப்பனிட்டேன்.இதற்கு 20 ஆயிரம் ஆனது. ரூ.60 ஆயிரம் கொண்ட  கல்லறையை திருவள்ளூர் வீட்டில் வைத்திருந்தேன் ,எனது கிராமத்தில் இடுகாட்டில் கல்லறை கட்டுவதா அல்லது எனக்கு சொந்தமான இடத்தில் கட்டுவதா எனும் யோசனையில் எங்கள் ஊர் இடு காட்டில் இரண்டு  கல்லறைகளை வைத்தள்ளேன்,ஒன்று எனக்கு இன்னொன்று என் மனைவிக்கு!

என் வீட்டெதிரே எனக்க கற்சிலை வைக்க தீர்மானித்து,6 அடிஉயர பீடம் அமைத்து விட்டேன்.மகாபலிபுரத்திலிருந்து 6 அடி உயர கற்சிலையை ட்ரக் மூலம் கொண்டு வந்தேன்,வழியில் தென்பட்ட ஒரு க்ரேன்ஐ வரவழித்தேன்,அவன் 4 ஆயிரம் கேட்டான் சரி என ஒத்துக்கொண்டேன்,6 அடி உயர பீடத்தில் நிலை நிறுத்தப்பட்டது!

 

Thursday, February 25, 2021

ஏ.அ-80

 

இறந்து போன என் தாய் தந்தையருக்கு அவர்கள் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நெடு நாட்களாக என் மனதில் ஒரு எண்ணம் உலா வந்தது.அதற்கான காலம் கனிந்து வந்தது,2013ம் ஆண்டு  கிராமத்தில் உள்ள என் பழைய வீட்டை ஒருபகுதியை இடித்து விட்டு நவீனக் கழிப்பறையுடன் பழைய வீட்டின் ஒரு பகுதியையும் புதியதாக இரண்டு சதுரத்தில் ஒரு ஓய்வு இல்லம் அமைத்துள்ளேன்.

வீட்டின் முகப்பில் கருங்கல் பலகை கொண்டு என் எண்ணங்களை எழுத்துக்களாக வடிவமைத்தேன். அதற்கு தாய் தந்தையர் கோயில் என பெயரிட்டேன்.

கோயில் என்றால் சிலை இருக்க வேண்டுமே,யோசித்தேன்.....மகாபலிபுரம் சென்று சிற்பியைச் சந்தித்து தாய்  தந்தையரின் உருவ படங்களை காட்டி மார்பளவு சிலை வடிக்கச் சொன்னேன்.

சிலை திறப்பு நிகழ்ச்சி எளிமையாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டுமென நினைத்தேன்.எனது பள்ளி நாட்களில் எனக்கு அறிவு கண் திறந்த 10 மற்றும் 11 வகுப்புகளுக்கு (1968&69) ஆங்கிலம் மற்றும் கணக்குக்கு ஆசிரியராக இருந்தவர், ஆசிரியர் திரு வீரராகவன் அவர்களை அழைக்க வேண்டும் என நினைத்தேன்.இதற்காக அவர் ஆரணியில் வாழ்ந்த விட்டை அணுகினேன்,ஒரு வயோதிக அம்மையார் அந்த வீட்டில் குடியிருந்தார்.

அவர் தெறிவித்த முகவரியில் தொலைபேசி எண்ணை பெற்று ஆசிரியருடன் நேரடி தொடர்பு கொண்டேன். அப்போது அவர்,

நான் ஆரணியில் இல்லை, படப்பையில் குடியேறிவிட்டேன்

 அய்யா நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

ஏன், எதற்கு?’

அய்யா நீங்கள் என் அறிவுக் கண்களை திறந்த ஆசான், நான் என் தாய் தந்தையருக்கு என் கிராமத்தில் சிலை வைத்துள்ளேன்,அதனை தங்கள் கையால் திறந்து வைக்க வேண்டும்என்றேன்.

அப்படியா மிக்க மகிழ்ச்சி, இதற்கு ஏன் என்னை தேடி வரப்போற, முகவரியை சொல் நானே வந்துவிடுகிறேன்என்றார்

2017ம் ஆண்டு கார்த்திகை மாதம் 20 நாள் நினைவு நாளன்று எனது நண்பரும், ‘இளைய பல்லவன் கருணாகரத் தொண்டைமான் எனும் காப்பிய நூலாசிரியருமான திரு  செம்மங்குடி துரையரசன் அவர்களிடம் எனது பள்ளிக்கால ஆசிரியரை சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளதை தெரிவித்தேன்.

Wednesday, February 24, 2021

ஏ.அ-79

 

பணி ஓய்வு காலத்தில் வெய்யிலாளி இனமான என் சமுக மக்களின் கல்வியறிவும் சுய சிந்தனையும் வளர்க்கும் பொருட்டு என் சிந்தனையில் உருவான பகுத்தறிவு இயக்கமான ஏழாம் அறிவு இயக்கம் என்னுடைய வலைதளமான www.thiru-rationqlism.blogspot.in ல் ஆரம்பித்தேன். இந்த வலைதளத்தை என் மகன் வினோத் உருவாக்கினான். இந்த வலைதளம் ஒரு சிறந்த சிந்தனைக் களமாக உலக மக்களிடம் சென்றடைந்தது. நூல்களை கணினிமூலம் அச்சிலேற்றி நூலாக்கி பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறேன்

அதை தொடர்ந்து, வலைதளத்தில் உள்ள என் சுய சிந்தனைக் கருத்துகளை, ‘அறவழி சுய சிந்தனையுடன் மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள் எனும் நூலில் தொகுத்து வழங்கினேன்(2011).இந்நூல் பல தரப்பட்ட மக்களை சென்றடைந்தது.தமிழக அரசும் தன் நூலகங்களுக்கு இந்நூலை வாங்கிக் கொண்டது.

வலைதள (blogspot) பயன்பாடு மக்களிடம் அதிகம் இல்லை,இதை உணர்ந்த நான் முகநூல்,வாட்சப் மற்றும் ட்விட்டரில் தினமும் என் சிந்தனைகளை பதிவிடுகிறேன். எல்லாவிதமான வினாக்களுக்கும் என்னால் பதிலளிக்க முடிகிறது.

Tuesday, February 23, 2021

ஏ.அ-78

 

எங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் 90 சதவிகிதம் முன்னேறிய இன அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் நிரம்பி இருந்தனர்.

எல்லாருமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள். இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது, இதோ-

அதிகாரிகள் உத்தரவிடும் போது முடியாத வேலைகளை முடியும் என பொய் சொல்ல வேண்டும்.

அதிகாரிகளை எதிர்த்து பேசக்கூடாது.

அதிகாரிகளிடமோ,நுகர்வோர் மீதோ கோவப்படக் கூடாது.

சக ஊழியர்களிடம் மனம் கோணாமல் வேலை வாங்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி மாறுதல் ஆணை வந்தால் உடனே சென்று மாற்று இடத்தில் பணியில் சேர்ந்துவிட வேண்டும்.

பணியில் சேர்ந்த பிறகு விருப்பமான இடத்தை கேட்டு மனு அளிக்க வேண்டும்.

ஆனால் என் விஷயத்தில் விருப்பமான இடத்தை கேட்டு பெற்று இன்னலை அனுபவித்துள்ளேன்.எனவே நிர்வாகம் பணி மாறுதல் செய்யும் இடத்திற்கு பணியில் சேர்ந்து விடுவேன்.அப்படி சென்று பணியாற்றியதால் எனக்கு பிற மாநில மக்களிடம் பழக வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு நல்ல அனுபவமாகவே எடுத்துக் கொண்டேன்.

தொழிலாளர் சங்கத்தில் இருந்தால் ஓரளவுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கும், இல்லையேல் அதிகாரிகளிடம் சுமுகமாக பழக தெரிந்திருக்க வேண்டும். ஊழியர்களின் இனம் சார்ந்த அதிகாரிகளுக்கு நல்ல சலுகை கிடைக்கும்.என் இனத்தில் எனக்கு தெரிந்த அதிகாரிகள் கிடையாது,

1995-96 ல் எனக்கு தெரிந்த ஒரு உறவுக்கார ஐஏஎஸ் அதிகாரி கிடைத்தார் ,அதே நேரத்தில் என் இனம் சார்ந்த ஒரு தொழிற்சங்க தலைவரின் நட்பு கிடைத்தது. அதன்பின் 10 ஆண்டுகள் நிம்மதியாக பணிபுரிந்து 2007 ம் ஆண்டுஆகத்து மாதத்திலிருந்து   ஒய்வை பெற்றேன்.