Tuesday, July 15, 2014

வேஷ்ட்டி தமிழரின் உடையா?



              வேஷ்ட்டி தமிழரின் உடையா?            16.07.14                

சென்னையில் சென்ற வாரம் ஒரு கிரிகட் சங்க கட்டிடத்தில் ஒரு விழா.அந்த விழாவில் கலந்துகொள்ள ஒரு நீநிபதி வேஷ்டி சட்டையணிந்து (இது தமிழரின் பாரம்பரிய உடையாம்!) சென்றுள்ளார்.அந்த கட்டிடத்தின் காவலாளி நீதிபதியை உள்ளே விடவில்லை.காவலாளிக்கு இடப்பட்ட உத்தரவு அது.அவர் வேலையை அவர் சரியாக செய்தார்.

ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போது மனிதர்கள் எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பது மனிதன், மனிதனுக்கு வகுத்துக்கொண்ட ஒரு நாகரிக பண்பாடு அல்லது வெளிப்பாடு.

தமிழன் பாரம்பரியமாகவே ஒரு வெய்யில் தொழிலாளி.இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.அவனுடைய அடிப்படை இயல்புகளே வயலில் உழைப்பது,விளைபொருளை தனக்குப்போக நிழலாளிக்கு விற்று விடுவது.இனப்பெருக்கம்(காதல்) செய்வது.வீரத்தை காட்ட போரிடுவது.(மூர்கத்தனத்தை காட்டுவது)தன் இனத்தை காக்க அல்ல மற்ற இனத்தை காக்க.

உலகில் இதுபோன்று அறம் காக்கும் செயல் செய்வது தமிழ் இனம் மட்டுமே.அதனால் தான் தமிழனை அடிமை இனம் என்று கூறப்படுகிறது.இவர்களுக்கு வழிகாட்டியே பிராமணர்கள்தான். இவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு கருமாதியே (தோஷ பரிகாரம்) வீட்டில் செய்யமாட்டார்கள்.தீட்டு! அதனால் வீட்டுக்கு வெளியே குளக்கறையோ அல்லது ஆற்றங்கரையோ,அல்லது கடற்கரையோ தோர்ந்தெடுப்பார்கள்.சாவு வீட்டுக்குள்ள தானே  நடக்குது?.தோஷபரிகாரம் குளக்கரையில் செய்தால் எப்படி நிவர்த்தியாகும்?தமிழன் எதை சிந்தித்தான் இதை சிந்திப்பதற்கு?

வேஷ்ட்டி தமிழ் வார்தையே இல்லை.அப்படி இருக்க தமிழனுக்கு அது எப்படி உடையாகும்?
மர உரி தரித்த தமிழனுக்கு பின்னாளில் அரைக்கோவணமும் சித்தாடையும் வழங்கியதே நிழாலாளிகள் தான்.100-ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழகத்தில் பரவலாக இந்த ஆடைதான் இருந்தது.அதன் நினைவாக இப்பொழுதும் கிராமங்களில் வீட்டில் இறந்த வர்களுக்கு வைத்துப் படைப்பது அரைத்துண்டும் சித்தாடையும் தான்.(சித்தாடை என்பது 2*1/2 அடி அளவில்  கிடைக்கும் சிவப்புத் துண்டு) சென்ற நூற்றாண்டு வரை கிராம புற பெண்களின் பிரத்யோகமான ஆடையே இதுதான்.

எல்லாம் சரி.நமக்கு ஏன் காலம் மாறிப்போய் கூட பேன்ட் சட்டை அணியச் சொல்ல? பெரியவங்க முன்னாடி மரியாதை காட்ட முடியாது இல்ல? பெரியவங்க என்று சொன்னால் அவங்க(தமிழன்) வீட்டு பெரியவங்க அல்ல,கிராமத்தில் வசிக்கும் மற்ற இன மக்களான பிராமணர்கள்,பிள்ளைமார்,பணக்கார முதலாளிகள் போன்றோர் முன் நிற்கும் போது வேட்டியை மடித்துக்கட்டக்கூடாது.அதுதான் மரியாதை.அந்த மரியாதையை பேன்ட் போட்டவனிடம் பெற முடியுமா? முடியாதே .அதனால் தான் தமிழனுக்கு என்றைக்கும் வேட்டிதான்!

புது முறைச் சிந்தனைச் சிற்பி
படைவீடு திருவேங்கடம்         

No comments: