Wednesday, July 30, 2014

94-பள்ளிக் குழந்தைகள் தீக்கிரை,யார் பொறுப்பு?



94 பள்ளிக் குழந்தைகள் தீக்கிரை,யார் பொறுப்பு?

கும்பகோணத்தில் சூலை 16 2004 அன்று ஒரு தனியார் (கிருட்னா பள்ளி) பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 ஆரம்ப பள்ளி குழந்தைகள் கருகி விட்டன.பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் வீடு திரும்பும் என நினைத்த பெற்றோர்களுக்கு சொல்லொணாத்துயரம்.

தான் பெற்ற பிள்ளைக்கு தனக்கு முன்னே மரணம் நேர்ந்தால்,பிள்ளையை பெற்றோருக்கு யார்தான் ஆறுதல் சொல்வது?

இவ்வளவு பெரிய மரணத்திற்கு எது காரணம்? அந்த காரணத்தை நீதி மன்றம் ஏன் குறிப்பிடவில்லை? பொறுப்பாளர்கள் 10 பேர் என சிறைதண்டனை வழங்கி தஞ்சை நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று அருகில் உள்ள கோயிலில் கடவுளுக்கு பூசை.அன்று அமாவாசை.குழந்தைகளை பூட்டிவிட்டு ஆசிரியர்கள் கோயிலுக்கு சென்று விட்டார்கள்.நாமெல்லாம் நல்லா இருக்கணும் என்றுதானே கடவுளை வணங்குகிறோம்.ஒரு பாவமும் அறியா அந்த பிஞ்சு உள்ளங்கள் (உடல்கள்) தீயில் கருக யார் காரணம்? கடவுள் தான் காரணம் என நீதி மன்றம் ஏன் தீர்ப்பு சொல்ல வில்லை?அல்லது குழந்தைகளை காப்பாற்ற வக்கில்லாத கடவுளை ஏன் வணங்கப்போனீர்கள்?அதனால் தான் உங்களுக்கு இந்த சிறை தண்டனை என நீதி மன்றம் ஏன் தீர்ப்புச் சொல்லவில்லை?

அது சரி தூங்கி எழுந்த உடன் கடவுளை வணங்குகிறோம்,குளிச்சி சாப்பிட்டு பள்ளி/அலுவலகம் புறப்படும் முன் கடவுளை வணங்குகிறோம்.பள்ளி அல்லது அலுவலகம் சென்று பணி துவங்குமுன் கடவுளை வணங்குகிறோம்.மாலை வீடு திரும்பியவுடன் கடவுளை வணங்குகிறோம்.பின் படுக்கப் போகுமுன் கடவுளை வணங்குகிறோம் இவ்வளவு ஏன் ? பாக்கெட்லியே கடவுள் படத்தை பத்திரமா வச்சிருக்கிறோம். நம்மவர்களை மட்டும் கடவுள் பத்திரமா ஏன் வச்சிக்கிறது இல்லை?
நமக்கு உதவி செய்பவர்களை மறந்துவிட்டு கடவுளால் தான் உதவி கிட்டியது என கல்லை நேசிக்கிறோம்.எங்கே மனித நேயம்?  

இதை ஏன் யாரும் சிந்திக்கிறது இல்லை? பள்ளிக்கூடத்தில் தீப்பொறியை பாதுகாக்க தெரியாதவர்கள் குழந்தைகளை எப்படி பாதுகாப்பார்கள்?கடவுள் பார்த்துப்பார் என கோயிலுக்கு சென்று விட்டார்களா?

மரணம் மனிதனுக்கு வயது முதிர்ச்சியால் வரட்டும்.அறிவீனத்தால் வரக்கூடாது.

                                         புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
                                            படைவீடு திருவேங்கடம்              

Tuesday, July 15, 2014

வேஷ்ட்டி தமிழரின் உடையா?



              வேஷ்ட்டி தமிழரின் உடையா?            16.07.14                

சென்னையில் சென்ற வாரம் ஒரு கிரிகட் சங்க கட்டிடத்தில் ஒரு விழா.அந்த விழாவில் கலந்துகொள்ள ஒரு நீநிபதி வேஷ்டி சட்டையணிந்து (இது தமிழரின் பாரம்பரிய உடையாம்!) சென்றுள்ளார்.அந்த கட்டிடத்தின் காவலாளி நீதிபதியை உள்ளே விடவில்லை.காவலாளிக்கு இடப்பட்ட உத்தரவு அது.அவர் வேலையை அவர் சரியாக செய்தார்.

ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போது மனிதர்கள் எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பது மனிதன், மனிதனுக்கு வகுத்துக்கொண்ட ஒரு நாகரிக பண்பாடு அல்லது வெளிப்பாடு.

தமிழன் பாரம்பரியமாகவே ஒரு வெய்யில் தொழிலாளி.இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.அவனுடைய அடிப்படை இயல்புகளே வயலில் உழைப்பது,விளைபொருளை தனக்குப்போக நிழலாளிக்கு விற்று விடுவது.இனப்பெருக்கம்(காதல்) செய்வது.வீரத்தை காட்ட போரிடுவது.(மூர்கத்தனத்தை காட்டுவது)தன் இனத்தை காக்க அல்ல மற்ற இனத்தை காக்க.

உலகில் இதுபோன்று அறம் காக்கும் செயல் செய்வது தமிழ் இனம் மட்டுமே.அதனால் தான் தமிழனை அடிமை இனம் என்று கூறப்படுகிறது.இவர்களுக்கு வழிகாட்டியே பிராமணர்கள்தான். இவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு கருமாதியே (தோஷ பரிகாரம்) வீட்டில் செய்யமாட்டார்கள்.தீட்டு! அதனால் வீட்டுக்கு வெளியே குளக்கறையோ அல்லது ஆற்றங்கரையோ,அல்லது கடற்கரையோ தோர்ந்தெடுப்பார்கள்.சாவு வீட்டுக்குள்ள தானே  நடக்குது?.தோஷபரிகாரம் குளக்கரையில் செய்தால் எப்படி நிவர்த்தியாகும்?தமிழன் எதை சிந்தித்தான் இதை சிந்திப்பதற்கு?

வேஷ்ட்டி தமிழ் வார்தையே இல்லை.அப்படி இருக்க தமிழனுக்கு அது எப்படி உடையாகும்?
மர உரி தரித்த தமிழனுக்கு பின்னாளில் அரைக்கோவணமும் சித்தாடையும் வழங்கியதே நிழாலாளிகள் தான்.100-ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழகத்தில் பரவலாக இந்த ஆடைதான் இருந்தது.அதன் நினைவாக இப்பொழுதும் கிராமங்களில் வீட்டில் இறந்த வர்களுக்கு வைத்துப் படைப்பது அரைத்துண்டும் சித்தாடையும் தான்.(சித்தாடை என்பது 2*1/2 அடி அளவில்  கிடைக்கும் சிவப்புத் துண்டு) சென்ற நூற்றாண்டு வரை கிராம புற பெண்களின் பிரத்யோகமான ஆடையே இதுதான்.

எல்லாம் சரி.நமக்கு ஏன் காலம் மாறிப்போய் கூட பேன்ட் சட்டை அணியச் சொல்ல? பெரியவங்க முன்னாடி மரியாதை காட்ட முடியாது இல்ல? பெரியவங்க என்று சொன்னால் அவங்க(தமிழன்) வீட்டு பெரியவங்க அல்ல,கிராமத்தில் வசிக்கும் மற்ற இன மக்களான பிராமணர்கள்,பிள்ளைமார்,பணக்கார முதலாளிகள் போன்றோர் முன் நிற்கும் போது வேட்டியை மடித்துக்கட்டக்கூடாது.அதுதான் மரியாதை.அந்த மரியாதையை பேன்ட் போட்டவனிடம் பெற முடியுமா? முடியாதே .அதனால் தான் தமிழனுக்கு என்றைக்கும் வேட்டிதான்!

புது முறைச் சிந்தனைச் சிற்பி
படைவீடு திருவேங்கடம்         

Tuesday, July 1, 2014

நெற்றியில் குறிகள் எதற்கு?

                நெற்றியில் குறிகள் எதற்கு?
ஆன்மிக சிந்தனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சுய சிந்தனையற்ற, இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைக் கொண்ட இந்திய மற்றும் தெற்காசிய மக்களுக்கு, கடந்த 100-ஆண்டுகளாக அறிவியலின் அற்புத கண்டு பிடிப்புகளான போக்குவரத்து,தொலைத்தொடர்பு சாதனங்களின் செயல்பாடுகள் அனைத்தும் பிரமிப்பூட்டுவதாக உள்ளன.
அப்பொழுது கூட நம்மக்களை சரியான அறிவியல் சிந்தனைக்கு செல்லும் கல்விப் பாடத் திட்டங்களை மாற்றியமைக்கப் படவில்லை.முன்னோர்கள் கடைபிடித்த சம்பரதாயம் மற்றும் சடங்குகள் பின்பற்றுவதில் தான் வாழ்க்கையில் வெற்றிபெற்ற மனிதனாக வாழமுடியும், என
மத-ஆன்மிக குருக்கள்,
மனைவியை வெறுத்த வாழா வெட்டிகள்(முற்றும் துறந்த முனிவர்கள்?)
தம்மை வாழ்த்த மாட்டார்களா? என தாய் தந்தையரையும் உதாசினப்படுத்தி.உடன் பிறந்தவர்களையும் விரட்டிவிட்டு மடாலயங்களில் சரணடையும் மனிதர்கள் பெருகிவிட்டனர்.
இவர்கள் போடும் வேடங்கள் இருக்கிறதே அது கொஞ்ச நஞ்சமல்ல,
காவி உடை அணிதல்,
தாடி வைத்தல்,
மொட்டை போடல்,
விரதம் இருத்தல்,
எந்நேரமும் மந்திரம் செபித்தல் ( தாய் மொழி தவிர பிறமொழியில்)
அதுவும் தனக்கே புரியாத அர்த்தமற்ற மந்திரம் கற்றுக்கொண்டோம் எனும் மமதையில் பெரிய பெரிய ஆடம்பர மாளிகைப் போன்ற மடாலயம் அமைத்துக்கொண்டு அரசியல் தலைவர்களையும் தம் காலில் மண்டியிட வைத்தல் போன்ற கலாச்சாரம் பெருகிவிட்டது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஆதாரம் அற்ற-யூகத்தின் அடிப்படையில்,அறிவியலை துணைக்கு இழுத்து பாமர மக்களையும்,வெய்யிலாளிகளையும் மூடநம்பிக்கையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கும் ஊடகங்களான பத்திரிக்கைகளும்,தொலைக்காட்சி பெட்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு அறிவியல் சிந்தனையே வேண்டாம் என முடி வெடுத்து இயங்குகின்றன.

உதாரணமாக இன்று தினமணி(27.06.2014) யில் ‘திருநீற்றின் மகத்துவம்’ என அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்ட செய்திகளை நெற்றியில் இடும் சாம்பலைம்,குங்குமத்தையும் (இது எந்த மதப்பிரிவினர் வேறுபடுத்தி காண உதவும் நெற்றியில் இடும் ஒரு குறியீடு-இது பற்றி விரிவாக எனது வெளியீடான, ‘அறம் காத்த வர்மாக்கள்’எனும் நூலில் காணலாம்) அறிவியலாக்கும் முயற்சி, ஒரு அறிவீனர்களின் கற்பனா சக்தியின் வெளிப்பாடு.தினமணி போன்ற அறிவியல் தொடர்புடைய தினசரியில் இதுபோன்ற கட்டுரைகளை தயவு செய்து வெளியிட வேண்டாம்.
                                                புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
                                                படைவீடு திருவேங்கடம்
                                                நிறுவனர்:ஏழாம் அறிவு இயக்கம்

                                          Visit:www.thiru-rationalism.blogspot.in