Tuesday, May 13, 2014

முரட்டுத் தமிழர்களுக்கு முன்னேற்றமே கிடையாதா?




            முரட்டுத் தமிழர்களுக்கு முன்னேற்றமே கிடையாதா?

சமிபத்தில் இந்திய உச்ச நீதி மன்றம், தமிழ் நாட்டில் வெகுநாட்களாக நடைபெற்றுவரும் சல்லிக்கட்டுக் காளை அடக்கும் போட்டியை தடை செய்துள்ளது.
தமிழர்கள் வீர விளையாட்டு என்று சொல்லி முரட்டுத்தனத்திற்கு வீரம் என்று புகழுரை கொடுத்து காலமெல்லாம் சுயமாக சிந்தனை செய்யவிடாமல்  தமிழர்களை முட்டாட்களாக்கி வந்த அரசியல் வாதிகளுக்கு ஒரு பெரிய மண்டையடி கொடுத்துள்ளது. 

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் தாயைப்பார்த்து மிரண்டு ஓடும். தாய்மீது வெறுப்புக் கொள்ளும். அந்த குழந்தைகளின் மன நிலையில்த்தான் இன்று தமிழர்கள் இருக்கின்றனர்.இவர்களை வழி நடத்திச்செல்ல இதுவரை ஒரு தலைவன் கூட அமையவில்லை.
உலகத்தில் தோன்றிய எத்தனையோ மனித இனங்கள் தோன்றி அழிந்துவிட்டது.தமிழைப் பேசுவதால் மட்டுமே தமிழ் இனம் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்கள், மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த வெள்ளையின மக்களிடம் அடிமைப்பட்டு 3000-ம் ஆண்டுகளாகிவிட்டது.அன்றாட வாழ்க்கையில் அறிவியியலைப் பயன்படுத்தாத இனம் தமிழினம்.அதனல்தான் தன் முரட்டு குணங்களால் மற்ற இனங்களிடம் அடிமைப்பட்டு இருக்கின்றது.

முரட்டு மனிதர்களை அடிமைப்படுத்த பயன் படுத்தப்பட்ட வார்த்தைதான் வீரம் .வீரன் எனும் புகழ் வார்த்தையில் மயங்கி அதை அடைவதற்காக வாழ்க்கையை வீணாக்கிக் கொண்ட உலகத்தின் முரட்டு மனிதர்களில் தமிழர்கள் முந்தி நிற்கின்றனர்.இதற்கு ராமயண கதா பாத்திரங்கள் முதல் எடுத்துக்காட்டு.

மனிதனுக்கு உடல் பலம் முக்கியம்தான்,அதைவிட மூளை பலம் முக்கியம் என்பதை தமிழர்களுக்கு உணர்த்த இங்கு தலைவர்கள் இல்லை.அப்படி அவ்வளவு சீக்கிரம் தமிழர்களை விவேகமுள்ள மனிதர்களாக மாற்றிவிடுவோமா என்ன? என்று அனைத்து அரசியல் தலைவர்களும் தடை செய்யப்பட்ட சல்லிக்கட்டை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றனர்.

வாழும் கலையை சொல்லித்தருகிறேன் என சொல்லி உழைப்பாளிகளின் பணத்தை சுரண்டும் இயக்கங்கள் தான் இருக்கின்றன.தமிழர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எந்த இயக்கமும் இல்லை.ஏழாம் அறிவு இயக்கம் மட்டுமே அதற்காக இலவசமாக இயங்குகிறது .இலவச பொருட்களை அடைய நினைக்கும் உழைப்பாளி சமுதாயம் ,பணத்தை எவ்வாறு மிச்சப்படுத்தி எவ்வாறு சேமிப்பு செய்வது என இலவசமாக சொல்லித்தரும் ஏழாம் அறிவு இயக்கத்தை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதலில் வீரவிளையாட்டுக்களை தடை செய்யப் படவேண்டும்.அவர்களுக்கு பரிசளிக்கிறேன் என மயக்கும் இயக்கங்களை தடை செய்யப் படவேண்டும்.பள்ளி கல்லூரிகளில் அறிவார்ந்த பயிற்சிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும்.இதற்கு அரசியல் தலைவர்கள் பாடுபடவேண்டும்.அப்பொழுதுதான் அமைதியான,அறிவார்ந்த தமிழ் சமுதாயத்தை நாம் காணமுடியும். 

இதுவரை பரிசு பெற்ற விளையாட்டு வீரர்கள் தன் பிள்ளைகளை பெரிய படிப்பாளியாக்கி இருக்கின்றனரா? விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் எத்தனைபேர் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் என பட்டியலிடமுடியுமா?  சல்லிக்கட்டில் மாட்டை அடக்கி விட்டால் மனிதன் அறிவியல் சிந்தனையை எட்ட முடியுமா? எங்கே போகிறது தமிழகம். ஏன் இந்த அடம்?தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் நவீன சிநதனைக்கு மாறுவது எப்போது?

No comments: