Tuesday, May 13, 2014

மனிதனை மனிதன் ஏன் சுமக்க வேண்டும்?



                    ஏழாம் அறிவு இயக்கம்
           (Visit: www.thiru-rationalism,blogspot.in)
  (இது ஒரு பகுத்தறிவாத இயக்கம்-கடவுள் மறுப்பு இயக்கமல்ல)
               நிறுவனர்:  படைவீடு திருவேங்கடம்
தலைமையகம்,4-பெரியார் தெரு,கண்ணதாசன் நகர்,திருவள்ளூர்-602001

         உலகைப் படைத்தது கடவுளாகவே இருக்கட்டும்
அதைப்பூட்டி வைத்து பூஜை செய்தால் உன் பேச்சைக் கேட்குமா?

பெறுநர்                                                                     11.05.2014
                பொது தகவல் அலுவலர் ,கோயில் நிர்வாகம்
               வைத்திய வீர ராகவா கோயில்
               தேவஸ்த்தானம்-திருவள்ளூர்-602001.

(தகவல் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் தகவல் கோரி விண்ணப்பம்)

அய்யா,      பொருள்: வீர ராகவர் வீதி உலா-பல்லக்கில் சுவாமியோடு
                           4-5பிராமணர்களை சுமக்கும் மனிதர்கள்.சுமக்க
                           முடியாமல் திணரல்-மனித உரிமை மீறல் குறித்து

திருவள்ளூரில் இப்பொழுது வீர ராகவர் கோயில் பிரம்மோற்சவம் நடக்கும் காலம்.சுவாமி ,பல்லக்கில் வீதி உலா வரும் நேரம். மனிதர்கள் சுவாமியை பல்லக்கில் சுமந்து வந்தனர். அதே  பல்லக்கில் சுவாமி சிலை சுற்றி 4 அல்லது 5 பிராமணர்கள் அமர்ந்து ஒருவர் சாமிக்கு சாமரம் வீசுவதும் மற்ற நான்கு பிராமணர்களும் உறங்கிக்கொண்டு வருவதை நான் பார்த்தேன்(நாள்-08.05.14,காலை 8.30 மணி,வடக்கு ராசவீதி)

சுவாமியை மனிதன் பல்லக்கில் சுமக்கட்டும் தவறில்லை,ஆனால் மனிதர்கள் தூக்கமுடியாமல் சுமந்து வரும் அதே பல்லக்கில் நான்கைந்து பிராமணர்கள் சுகமாக அமர்ந்து வருவது எந்த வகையில் நியாயம்? அப்படி சுமக்க    வேண்டும் என கோயில் நிர்வாகத்தின் உத்தரவா? அல்லது தமிழ் நாடு அரசின் அறநிலையத் துறையின் உத்தரவா? அல்லது அகோபில மடத்தின் உத்தரவா? அப்படி இருந்தால் ஆணையின் நகலை எனக்கு அனுப்பும் படி வேண்டுகிறேன்.

மனிதன் மலத்தை மனிதன் சுமப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்வது குற்றம் என உத்தரவிடப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல அது மனித உரிமை மீறல் ஆகும்.                                              
அப்படி இருக்க, மலத்துடன் இருக்கும் மனிதர்களை, மனிதர்கள் சுமக்கலாமா? இது மனித உரிமை மீறல் ஆகாதா?

இது குறித்து மேற்கண்ட முகவரிக்கு தகுந்த தகவல் அளிக்கும்படி தகவல் உரிமைச்சட்டம்,2005 ன் கீழ் தங்களை வேண்டுகிறேன்.    
வணக்கம்
                                                           இவண்
                                                 புதுமுறைச் சிந்தனைச் சிற்பி
                                                படைவீடு திருவேங்கடம்
                           இது குறித்து உதவி   அறநிலையத்துறை ஆணையருக்கு(வேலூர்) மேல் முறையீடு செய்தேன்,அவர் அனுப்பிய பதில் கீழ் கண்டவாறு,"திரு பாதம் தாங்கிகள் (பல்லக்கு தூக்குவார்கள்)அவர்கள் மனமுவந்து செய்யும் கைங்கர்யாம் அதில் கோயில் நிர்வாகம் தலையிடாது"
             

No comments: