பரிகாரம் உண்டா ?
மனிதனின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் மனிதனின் மனம்தான் காரணம்.
கடவுள் இல்லை
நடைமுறை வாழ்க்கையில் பெரும்பாலான மனிதர்கள் இதை உணர்வதாகவோ ஏற்பதாகவோ இல்லை .
(19.01.2009) இன்றய செய்தி தாள்களில் , சென்னையில் நேற்று நடந்த பிராமணர்களின் மறுமண சுயம்வர நிகழ்ச்சியில் முதல் தீர்மானமாக, ‘திருமணம் நடக்கும் முன ஜாதகம் பார்ப்பது கூடாது அதற்கு மாறாக மணமக்களின் மனப்பொருத்தத்தைதான் பார்க்கவேண்டும். குடும்ப பின்னணி ,சமுகநிலை ,பழக்கவழக்கங்களை தெரிந்து கொண்டபிறகு திருமணம் முடித்தால் விவாகரத்து ஏற்படுவதை தவிர்க்கலாம் .’
இன்றய நாட்களில் பெரும்பாலான இந்துக்களின் மத தொடர்புடைய சம்பரதாயம் ,சடங்கு போன்ற மூட நம்பிக்கைகளின் வழிகாட்டியே பிராமணர்கள்தான் என்பது யாவரும் அறிந்ததே .
பாமர மக்களின் அறியாமையை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் உழைப்பில் வரும் பணத்தை தங்கள் வாழ்வாதாரமாக வாழ்வதில் புண்ணியம் என்கிற நம்பிக்கையை பரப்பிவிட்டனர் .
இன்றளவும் மற்ற சாதிகளின் பழக்க வழக்கங்கள்என்பது, கோள்களின் (கிரகங்கள்) அசைவு ,நட்சத்திரத்திரங்களின் தோற்றம் ஒவ்வொரு மாதத்திற்கும் ராசி என்கிற பெயர் வைத்து மண்ணில் பிறக்கும் மனிதனின் இயக்கத்திற்கும் அவன் படும் இன்ப துன்பங்ளுக்கு அறிவியல் அளவிலான காரண காரியங்களை மையப்படுத்தி ஜாதகம் ஜோசியம் என பஞ்சாங்கத்தை மேற்கோள் காட்டுகின்றனர் .
அரைகுறை படிப்பாளிகளான நம்ம பாமர மக்கள் பஞ்சாங்கம் தான் நமக்கு அறிவியல் வழிகாட்டி என இன்றளவும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்
மாஸ்ட்டர் மற்றும் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் சுயமாக சிந்திப்பது இல்லை பெற்றோரும் சுற்றத்தாறும் இவர்களை சிந்திக்க விடுவது இல்லை
இதில் ஒரு அநியாயம் என்ன வென்றால், ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும், திருமணம் ஆகவில்லை மற்றும் வேலை கிடைக்க வில்லை ,இதற்கெல்லாம் நிவாரணம் பெற பரிகாரம் செய்ய வேண்டும் ,என பாமரனை நம்ப வைத்து அவனை மேலும் மேலும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர் .
இதனால் மன நிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தம் ,மற்றும் நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர்
பரிகாரம் என்பது அடுத்தவர்களுக்கு உபகாரம் செய்வதுதான் .மேலும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்
1. அன்னதானம் செய்வது .
2.உடைகளை தானம் செய்வது
3.பொன் பொருளை தானம் செய்வது
4. ஆடு மாடுகளை தானம் செய்வது
5.கோயில் உண்டியலில் பணம் போடுவது
6.உண்டியலில் மாங்கல்யம் செலுத்துவது
7. தலை மயிரை காணிக்கை என்கிற பெயரில் மொட்டைபோடுவது
காலப்போக்கில் இதெல்லாம் திசைமாறி தான் செய்யும் வணிகத்தில் அளவுக்கு அதிக லாபம் கிடைத்தால் பாதியை உண்டியலில் செலுத்துவது (இந்த வணிகம் என்பது கள்ள ரூபா நோட்டு அச்சடித்தல் போன்ற அறவழிதவறிய செயல் மூலம் பெறும் லாபம் ).இதை நல்ல பணமாக மாற்றியபின் பாதியைஉண்டியலில் போடுவது என பிரார்த்தனை செய்வதுகொள்வது
மனிதனும் கிரகங்களும்
சம்பரதாயம் ,சடங்கு என்பதெல்லாம் மனிதன் சுயமாக எதையும் செய்யக்கூடாது என்பதுதான் அதன் பொருள் .
இது பல நூற்றாண்டுகளாக முதல் நிலை குடிமக்கள் ,இரண்டாம் நிலை குடி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலை ஆகும் .
அறவழியில் (அதாவது சக மனிதனுக்கு துன்பம் விளைவிக்காத) எந்த செயலை ஆரம்பித்தாலும் அதற்கு மூலதனமே துணிவுதான்.
இதற்கெல்லாம் பஞ்சாங்கம் பார்க்க வேண்டியதில்லை என்கிற துணிவுதான் இந்த துணிவு சாதாரணமாக யாருக்கும் எளிதில் வந்துவிடாது .
இந்த துணிவு அறவழி சுய சிந்தனையாளருக்கு மட்டுமே அமையும்.
இப்பொழுதெல்லாம் ஒரு தொழில் ஆரம்பிக்க ,ஆரம்பித்த உடனே கொள்ளை லாபம் வர வேண்டும் ,இதற்கு கடவுள் அனுக்கிரகம் வேண்டும் என ஏமாற்றி நம்ப வைப்பது
அப்பொழுதுதானே அவர்கள் பிழைப்பு நடக்கும் .
அடிக்கும் கொள்ளை லாபத்தை பார்ப்பவன் கவனத்தை திசை திருப்பவே கணபதி ஒமம் நடத்துவது , பின் செப்புத்தக்கடுகளில் புரியாத எழுத்துக்களை எழுதி அதற்கு அபரிமிதமான சக்த்தியுண்டு என அடுத்தவனை(பாமரனை) நம்ப வைப்பது .
அதை வணிகம் நடக்கும் வளாகத்தில் பிறர் கண்ணில் படும்படி வைப்பது .எதையும் எளிதில் நம்பும் நம்மவர்கள் உடனே அந்த செப்புத்தகடு அடித்தவன் முகவரி தேடி, அவன் கொழிக்க இவன் அள்ளி கொடுப்பான் .
இதற்கு தான் அந்த செப்புதகட்டை கண்ணில் படும்படி வைக்கச்சொல்வது .
புதியதாக வீடுகட்டிக்கொண்டு போவோரும் இதை தான் செய்ய ஆசைப்படுகின்றனர் .
நான் வீடு கட்ட ஆரம்பிக்கும் போது என் மனைவி மற்றும் மேஸ்த்ரி போன்றோர், நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டும் என வற்புறுத்தினர் .நான் மறுத்துவிட்டேன் .பல நாள் யோசித்து , எப்படி வீடு அமையவேண்டும் அதற்கு பொருளாதாரத்தை எப்படி பெறுவது, செலவினங்களை எப்படி சமாளிப்பது என முடிவு செய்து இந்த நாளில் ஆரம்பித்து இத்தனை நாட்களுக்குள் முடிக்கவேண்டும் என மேஸ்த்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது
அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டது .
பின் புகு மனை விழா எடுக்க வேண்டும் என்றனர் .
மறுத்துவிட்டேன் .
கடன் வாங்கி வீடுகட்டிவிட்டு அதில் குடிபுக விழா தேவை யில்லை . கணபதி ஒமம் தேவையில்லை.
அடுத்தவேளை சோத்துக்கு பணமும் ,தேடி வருபவர்களுக்கு முகவரியும் முன் சுவற்றில் எழுதி வைத்தால் போதுமானது என என் மனைவியை சமாதானம் செய்து ,வீடு கட்டி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .
ஊருக்கு தான் உபதேசம் என கூறுவார்கள் ,ஆனால் உபதேசம் செய்தபடி தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் ஒரு சிலரே, அவர்களே வரலாற்றில் இடம் பெறுவர் .
வானத்தில் எண்ணில் அடங்கா நட்சத்திரங்களும் ,கோள்களும்(கிரகங்கள்) உள்ளன .
நாம் வாழும் பூமிக்கும் சூரியன் சந்திரன் உள்ளதுபோல் ,பல பூமியும் சந்திர சூரியன்கள் உண்டு . இது இன்றய அறிவியலாளரின் கூற்று பூமிகளில் உயிரினங்கள் தோன்றுவதும் மறைவதும் இயற்கையான நிகழ்வுகள் .
இது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெறும் தொடர் நிகழ்ச்சி .
இது மேலும் தொடரும் .
இதில்சிலகாலம் வாழ்ந்துவிட்டு போகும் மனிதனின் மனதில் அளவில்லா கற்பனைகள் . பேராசைகள்
அவன் பாறைகளில் வரைந்த ஓவியம் அல்லது அவன் வடித்த சிலைகள் .
அவன் பேசிய பேச்சிற்கு எழுத்து வடிவம் அதன் படிவங்களை கதைகளாக நாம் படித்து அதற்கு அறிவியல் அர்த்தங்களை தேடிக்கொண்டிருக்கின்றோம் .
வானத்தில் தோன்றும் இடி ,மின்னல் மற்றும் தொடர் கன மழை காரணமாக உயிரை காப்பாற்றிகொள்ள மிரண்டு இங்கும் அங்கும் ஓடினான்.
மரணபயத்தால் தன்னை காப்பாற்றிகொள்ள மனிதன் பாதுகாப்பு தேடினான் .
இந்த பயத்தின் காரணமாக அருவ இயல் (theory of god ) தத்துவம் தோன்றியது.( அதாவது மனிதனை மனிதன் ஏய்க்கும் தத்துவம் அல்லது முரட்டு மனிதனை நல்வழிபடுத்தும் தத்துவம்)
பெரும்பாலும் இயற்கையான குகைகள் அவனுக்கு வசதியாக அமைந்துவிட்டது . இல்லாத இடத்தில் பாறைகளை குடைந்து கொண்டு குடும்பமாக வாழ ஆரம்பித்தான். காலப்போக்கில் செயற்கையான வீடுகளையும் கோட்டைகளையம் அமைத்துக்கொண்டான்.
பஞ்சாங்கம் எப்படி ஏற்பட்டது ?
மனிதன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் அவன் வாழ்நாளில் அவன் படும் ,இன்பதுன்பம் ,உயர்வு ,தாழ்வு ,நோயற்ற அல்லதுநோயுற்ற உடல்நிலை போன்றவை எப்படி நிகழ்கிறது என்பது முதலில் புரியாத புதிராக இருந்தவனுக்கு ,இதற்கு ஒரு அர்த்தம் வேண்டும் என வரையறுத்துக்கொண்டானர் .
இதன் விளைவுதான் வானத்தில் கண்ணில் படும் நட்சத்திரங்களையும் வளர்ந்து தேயும் நிலவையும் .
அவ்வப்போது தோன்றும் வால் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டு வானில் தோன்றும் நிகழ்ச்சிக்கும் அதன் விளைவாக பூமியில் நிகழும் பூகம்பம் ,இடி மின்னல் கடலலைச்சீற்றம் ,போன்ற இயற்கை நிகழ்வுகளால் மனிதனின் பிறப்பையும் இறப்பையும் அதற்குள் அவன்அடைந்த உயர்வு தாழ்வு நிகழ்ச்சிகளுக்கு முடிச்சு போட ஆசைப்பட்டான் .
அதன் விளைவுதான் இந்த பஞ்சாங்கம் .மற்றும் கைரேகை சாஸ்த்ரம்
பஞ்சாங்கம் பார்ப்பது யார் ?
இப்பொழுதெல்லாம் பூமியுன் சுழற்சிவேகம் மிக துல்லியமாக கணக்கிட்டு கால மாற்றங்கள் ஒரு ஆண்டில் எப்படி நிகழ்கிறது எனவும் முழு காலமாற்றமும் நிகழ ஒரு ஆண்டு ஆகிறது எனவும் ஒரு ஆண்டுக்கு 365 நாட்களும் 6 மணி நேரமும் ஆகிறது எனவும் கணக்கிட்டுள்ளனர் .
இந்த கணக்கை இன்று உலகெங்கும் உள்ள நாடுகளும் அனைத்து மதங்களும் ஏற்று கொண்டுள்ளன .
முதலில் கண்ணில் பட்ட 7. கோள்களை அதற்கு தனித்தனியாக பேர்வைத்து வாரக்கணக்காக 7.நாட்கள் என பெயர் வைத்தனர் .
ஒரு நாளுக்கு 24 மணிநேரம் என்பது மேலை நாட்டு கணக்கு .
நம்முடைய பஞ்சாங்க வாதிகள் இரவு நேரத்தை கணக்கில் கொள்ளாமல் பகலை நாழிகை முறையில் கணக்கிட்டனர்.
இரவு நேரத்துக்கு ஜாமக்கணக்கு போட்டு 4 பாகமாக பிரித்துக்கொண்டனர்.
அதாவது ஒரு ஜாமம் என்பது 3 மணிநேரம் இரவு நேரத்தில் எந்த காரியம் செய்தாலும் அதற்கு தடையில்லை .
ஆனால் செய்யக்கூடாது
பகலில் மட்டும் காலை 6 மணியிலிருந்நு மாலை 6.மணி வரைக்கும் அதாவது சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரைக்கும் பஞ்சாங்கம் பார்த்து செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது .
பின்னாளில் ஒரு ஆண்டை 12.மாதங்களாகவும் மாத த்திற்கு 4 வாரங்களாகவும் மேலை நாட்டு வானவியல் வல்லுநர்கள் வகுத்தபோது நம் நாட்டு பஞ்சாங்க வாதிகள் வாரத்திற்கு 7 நாடுகள் எனவும் மாதத்திற்று 27 நட்சத்திரங்கள் எனவும் வருடத்திற்கு 27*12=324 நாட்கள் என கணக்கிட்டனர் .
முதலில் 7 பிறகு 9- தற்போது 12 கோள்கள் இருப்பதாகவும் இவைகள் தான் நம்மை ஆட்டி படைக்கின்றன ,என மேலை நாட்டு பஞ்சாங்க வாதிகளுடன் சேர்ந்து நம்நாட்டு பஞ்சாங்க வாதிகளும் பாமரனை குழப்பிக்கொண்டிருக்கின்றனர்.
இன்னும் ஒருசில மேலைநாட்டு வானவியல் வல்லுநர்கள் ஒரு ஆண்டை 9 வகையாக பிரித்து அதாவது மாதத்த்தின் 31 நாட்களை 9வகையாக பிரித்து கீழ்கண்டவாறு கணக்கிட்டு அந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நிலைகளும் மாற்றங்களும் நிகழும் என பத்திரிக்கையில் எழுதி படித்தவனை குழப்புகின்றனர்
1-10-19-28
2-11-20-29
3-12-21-30
4-13-22-31
5-14-23
6-15-24
7-16-25
8-17-26
9-18-27
மேலும் சில வான நூல் பொய்யர்கள் 12 ராசிகளுக்கும் உருவங்களை கொடுத்து கீழ்கண்டவாறு மேலும் குழப்புகின்றனர்
மார்ச்20- ஏப்ரல்18------------------ARIES --------------- மேஷம்
ஏப்ரல்19- மே 19--------------------TAURUS-------------- ரிஷபம்
மே20- ஜூன்20--------------------- GEMINI--------------மிதுனம்
ஜூன்21-ஜூலை21--------------- CANCER--------------- கடகம்
ஜூலை22-ஆகஸ்ட்21----------- LEO -------------------சிம்மம்
ஆகஸ்ட்22- செப்டம்பர்20------- VIRGO ----------------கன்னி
செப்டம்பர்21 -அக்டோபர்22 -----LIBRA ----------------துலாம்
அக்டோபர்23- நவம்பர்21 --------SCORPIO -------------விருட்சிகம்
நவம்பர்22 -டிசம்பர்22 ------------SAGITTAURUS------- தனுசு
டிசம்பர்23- ஜனவரி19 ------------CAPRICORN ----------மகரம்
ஜனவரி20 -பிப்ரவரி18 -----------AQAUARIUS ---------கும்பம்
பிப்ரவரி19-மார்ச்19 ---------------PISCES ---------------மீனம்
(பார்க்க-டைம்சு ஆப் இந்தியா,தினத்தந்தி,இந்தியன் எக்சுபிரசு)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் யாவருக்கும் வாழ்க்கையில் ஒரே மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் நிகழும் என அடித்து கூறுகின்றனர் .
மேலே குறிப்பிடப்பட்ட தேதிகளில் வரும் ராசிகள் நிலை மாறுவதே இல்லை ஆனால் மனிதனின் நிலைகள் மட்டும் எப்படி மாறும் ?
இதில் நமது பழய பஞ்சாங்கமான 12 ராசி 27 நட்சத்திரம் 7 நாட்கள் இதில் நாழிகை, ஜாமக்கணக்கு,பாத கணக்கு ராகு காலம் ,எம கண்டம், கரிநாள், அமிர்தயேகம், மரணயேகம் ,சுக்கில பட்சம் கிருஷ்ன பட்சம். என பாமரனுக்கு புரியாத வார்த்தைகளை போட்டு கீழ்கண்டவாரு குழப்பிக்கொண்டிருக்கின்றனர் .
மொத்தத்தில் எந்த நாளில் எந்த வேலையை ஆரம்பித்தாலும் அதைப்பற்றி தெரிந்து கொள்ள எதற்கும் சோதிடரையோ அல்லது புரோகிதரையோ அணுகி அதற்கு தட்சணையாக உணவு பொருளோ அல்லது பணத்தையோ கொடுக்க வேண்டும் என்பதுதான் அதன்பொருள் .
விடாமுயற்சியும்,தொடர்உழைப்பும் கொண்டவர்கள் வாழ்க்கையில் ஜோதிடமும்,பஞ்சாங்கமும் இடம் பெறா
அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள்.
கட்டங்களை போட்டு குரு(வீடு மாறும்) மற்றும் சனி கிரக சஞ்சார பலன் சொல்லும் சோதிடர்களின் பொய் பித்தலாட்டத்தை நம்பி மன நலம் குன்றியவர்கள் ஏராளம் .
ஒரு சோதிடர் கணிப்பு அடுத்த சோதிடருக்கு ஒத்து வராது
உழைப்பை நம்பாமல் ஊர் சுற்றும் வீணர்களின் பணத்தை வைத்து இந்த சோதிடர்கள் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கின்றனர் .
இது வரை இந்த உலகில் இது நடக்கும் ,இது நடக்காது என அடித்துகூற மாட்டார்கள் . அத்தகைய பந்தயம் கட்டும் வேலைக்கும் முன் வர மாட்டார்கள் .
குரு மட்டுமில்லை இந்த கோள்கள் இட மாற்றத்தாலும் மனிதன் மனம் மாறுகின்றது என்பது இந்த வானவியல் நிபுணர்களின் கூற்று .
ஒரு வகையில் இதை நம்பினாலும் ,சுய சிந்தனையாளன் கேள்விக்கு, வீடு விட்டு வீடு மாறும் கோள்களின்(கிரக சஞ்சாரம்) நிலையை வரையறுத்து கூறுவது யார் ? .
வானத்தில் இருக்கும் கற்பனை வீடுகளில் எந்த வீட்டில் எந்த கோள் எந்த நட்சத்திரத்தோடு இணைகிறது என தினமும் தொலைநோக்கி(telescope) வைத்து கணக்கிட்டுக்கொண்டிருப்பது யார் ?
வானளாவிய செயற்கை கோள்கள் உலகெங்கும் உள்ளன.
அவற்றின் உதவியால் கிரக சஞ்சாரங்களையெல்லாம் படம் பிடித்து தொலைகாட்சியில் காண்பித்து மனிதர்களின் மன ஒட்டங்களையும் மாற்றங்களையும் ,எதிர்காலத்தில் இது நடந்தே தீரும் என நிருபிக்கவேண்டியதுதானே ?
இதற்கு யாரும் பதில் சொல்ல முடியாமல் இது ஒரு விதண்டாவாதம் என ஒதுக்கிவிடுவர் .
தினமும் ராகுகாலம் 1 ½ மணிநேரமும் எம கண்டம் 1 ½ மணிநேரமும் நமது பாமரனை பாடாய்படுத்துது .
இதை பார்த்து பார்த்து எந்த செயலையும் ஒழுங்காக செய்வதில்லை .
ஒருநாளைக்கு 24 மணிநேரம் வாரத்திற்கு 7 நாட்கள் இது எல்லாம் நாம் அறிந்தது தான் .
இருந்தாலும் அந்த 7 பகல் நாட்களில் தினமும் வந்து போகும் அந்த 1 ½ +1 ½ =3 மணி நேரத்தில் பூமியில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது ?
ஏன் அந்த மூன்று மணிநேரம் எந்த வேலையும் செய்யக்கூடாது ? அப்படி மீறி செய்தால் என்ன ஆகிவிடும்?
இந்த கேள்விக்கெல்லாம் யாருக்கும் பதில் தெரியாது .
இது பெரியவர்கள் வகுத்தது .பஞ்சாங்கத்தில் இருப்பது என கூறுவர்
அதிகம் படித்தவர்கள் (அதாவது MA ,MSc ,PHD ,MPHIL,MA ML .MS MD ,IAS ,IPS ME ,M TECH இந்த பட்டங்களெல்லாம் இந்தியாவில் இருக்கும் பல்கலை கழகங்கள் வழங்குபவை ) கூட இதை பற்றி சிந்திப்பதே இல்லை
இந்தியாவில் வாழும் பிறமதத்தவரும் இந்துக்களின் இந்த மூட நம்பிக்கையோடு இணைந்து விட்டனர் .
மேலை நாடுகளில் இதுபோன்று ராகுகாலம்,எமகண்டம் பார்த்து ,உழைப்பாளிகள் காலத்தை வீண்டிப்பதாக தெரியவில்லை
சமீபத்தில் சந்த்ராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் முன் நாள் திருப்பதியில் வந்து ~,விண்கலம் வெற்றிகரமாக அதன் பயணத்தை முடிக்கவேண்டும்” என பிரார்த்தனை செய்த இந்தியாவின் முன்னணி அறிவியலாளர் கூட ,தன்னம்பிகை இல்லா பஞ்சாங்க வாதி என நிருபித்து வருகின்றனர் .
இவர்களை நம்பி இந்திய அரசும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி சீரழிக்கிறது.
Tuesday, February 24, 2009
Monday, February 16, 2009
2.வாழ்க மகிழ்ச்சியுடன் தொடர்ச்சி -1
பிரச்சினைகளும் நிவர்த்தியும்
*********************
அ.கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை
ஆ.குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சினை
இ.பெற்றோர்களால் பிரச்சினை
ஈ.சுற்றத்தார் பிரச்சினை
உ.நண்பர்களால் பிரச்சினை
கணவன் ,மனைவிக்கிடையே பல பிரச்சினைகள் உருவாகும் இதை அவ்வப்போது பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் .
அமைதியான சூழலை உருவாக்கி நிதானமாக மனம்விட்டு பேசவேண்டும் .
அ.1. பணபற்றாகுறையும் நிவர்த்தியும்
2. படுக்கையரை குறைபாடுகளும் நிவர்த்தியும்
1.முதலில் பணபற்றாகுறையை எப்படி சமாளிப்பது என்பதை பார்ப்போம் .
“நமது எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் நமது வாழ்க்கை அமையும்” .
கணவன்மனைவிக்கிடையே எண்ணங்களை ஒருமுகபடுத்திக்கொள்ளவேண்டும் .
ஒருகுடும்பத்தில் கணவன் மட்டுமே சம்பாதிப்பார் அல்லது மனைவிமட்டுமே
சம்பாதிப்பார் . ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் வருமானத்தை வைத்து எப்படி
குடும்பம் நடத்துவது , அதுவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதுதான்
முக்கியம் .கூலித்தொழிலாளி,ரிக்சா ஓட்டி ,அலுவல் வேலையாளி,
அலுவலர் ,முதலாளி அவரவர் வருமானத்திற்கு ஏற்றாற்போல் வரவுசெலவு
கணக்கு பார்த்து மகிழ்ச்சியே குறிக்கோளாக வழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப்பார்து நிம்மதி தேடவேண்டும் .
வரவுக்கு ஏற்றாற்போல் செலவினங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் .
1,அடுப்பங்கரை செலவு
2.சாப்பாட்டு செலவு
3.உறைவிட செலவு
4.உடைகள் செலவு
5.குழந்தைகள் பராமரிப்பு செலவு
6.எதிர்பாரா மருத்துவசெலவு
7.விருந்தினர் பராமரிப்பு செலவு
8.சுற்றுலா செலவு
9.சேமிப்பு செலவு
மாதாந்திர வருவாய் உள்ளவர்கள் மாதாந்திர வரவுசெலவு கணக்கு போடலாம் .
விவசாயம் செய்பவர்கள் நில வருவாய்கு ஏற்றாற்போல் ஆறு மாதத்திற்கு
ஒருமுறையோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ வரவு செலவு கணக்கு போடலாம்
நடுத்தர குடும்பங்கள் அடுப்பங்கரைக்கே நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது
இதை கணவன் மனைவி இருவரும் இணைந்து எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு குறைக்கலாம் , மனம் ஒத்த நிலையில்.
1.அடுப்பங்கரை செலவு என்பது கட்டை அடுப்பு, மண்ணெண்ணை அடுப்பு , வளி அடுப்பு நிறுவுதல்; அதற்கான பாத்திரங்களை வாங்குதல் போன்றவையாகும்.
சமயல் பாத்திரங்கள் வாங்கும்போது அலுமின்யம் , எக்கு பாத்திரங்கள் மட்டுமே வாங்கவேண்டும்
2.சாப்பாட்டு செலவு என்பது மிகமுக்கியமானது . ஆரோக்கியமான உடல் பராமரிப்புக்கு இது மிகவும் அவசியம்.
“உணவே மருந்து” . இதை உணர்ந்து செயல்படவேண்டும் .
குறைந்த செலவில் சத்தான உணவு சாப்பிட வேண்டும் ,மேலும் உண்ணும் உணவுக்கும் ,மனோ நிலை பாதிப்புக்கும் நெறுங்கிய தொடர்புண்டு
3.உறைவிட செலவு ;வாடகை வீடு உள்ளவர்கள், சொந்த வீடு உள்ளவர்கள் என இருவகையாக பிரிக்கலாம் .
சொந்த வீடாக இருந்தாலும் , வாடகை வீடாக இருந்நாலும் காற்றோட்டமான அறைகளையே தேர்வு செய்ய வேண்டும் , நோயற்ற வாழ்வுக்கு இது பெறும் பங்கு வகிக்கும் .
சொந்தமாக வீடு கட்டுவதற்கு பொறியல் வல்லுநரையோ , ஜோசியக்காரரையோ அணுக வேண்டாம் .
அறைகளை அமைப்பதில்
8*8 ,10*10 ,15*15 , 16*16, 20*20, எனகிறமுறையில் தேர்வுசெய்து எதிரெதிர் திசையில் சன்னல்களை அமைத்து வீடுகளை அமைக்க வேண்டும் .
மொத்தத்தில் வெளிக்காற்று உள்ளே வரவேண்டும் ,உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்ல வேண்டும். இதுதான் வாஸ்த்து முறை .
கட்டியவீட்டுக்கு ஜோசியரிடம் வாஸ்த்து பார்பதும் உனக்கு ஏற்ப்படும் கஷ்டங்களுக்கு கட்டியவீடுதான் காரணம் என உனக்கு சொல்பவர்களின் அறிவுரை ஏற்றால் உனக்கு வீடில்லா நிலைதான் ஏற்படும் .
அக்கம்பக்கம் கடன்வாங்கி வீட்டைகட்டி அதனுள் குடிபுக நேரங்காலம் பார்த்து ஊர்கூட்டி ஆயிரக்கணக்கில் செலவுசெய்து புகுமனை புகுவிழா நடத்துவதால், எந்த பயனும் ஏற்படாது .மேலும் பணமில்லா நிலைதான் ஏற்படும்
4..உடைகள்செலவு
வளரும் குழந்தைகளுக்கு எந்தவித காரணங்களுக்காகவும் விலையுயர்ந்த ஆடை,அணிகலன்களை வாங்ககூடாது .
புத்தாடை அணிந்துதான் ஆண்டுகள் தோறும் வரும் விழாக்களை கொண்டாடவேண்டும் என்கிற மனோபாவத்தை குழந்தைகளிடையே வளர்க்க வேண்டாம் .
போதுமான அளவுக்கு மாற்று உடைகள் இருந்தால் ஆண்டுகள்தோறும் ,விழாக்கள் தோறும் புத்தாடைகள் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை
குழந்தைகள் பிறந்த நாட்களை எளியமுறையில் சுற்று வட்டார குழந்தைகளுடன்கொண்டாடலாம்.
அப்பாஅம்மா, குழந்தைகள் கழுத்தில் மலர் மாலை அணிவித்து , இனிப்புகள் பரிமாறி கொண்டாடலாம்
5.குழந்தை வளர்க்கும் கலை
குழந்தைகளை இரண்டுவயது வரை கண்டிப்பாக உங்களோடும் , இரவு நேரங்களில் உங்கள் படுக்கையரையை ஒட்டியும் உறங்க வைத்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வளர்க்கவேண்டும் .
குழந்தைகளை 12 மாதங்கள் தாய்ப்பால் ஊட்டியே வளர்க்க வேண்டும் .
குழந்தை பிறந்த ஆறாவது மாத த்திலிருந்து தாய்ப்பாலுடன் திடவுணவான நன்கு வேகவைத்த சிறிதளவு பருப்பு , உருளைகிழங்கு ஆகியவற்றை நன்கு வேக வைத்த அரிசியுடன் ஊட்டிவிடலாம்
குழந்தைகள் உலா வரும் இடத்தை தூய்மையாக வைக்கவேண்டும்.
தெருவில் விற்கும் தின்பண்டங்களை வாங்கித்தரக்கூடாது.
பள்ளிசெல்லும்போது பணமோ,தின்பண்டமோ கொடுத்தனுப்பக்கூடாது.
குழந்தைகள் தெருவில் விற்கும் தின்பண்டங்களை விரும்புவதும் ,பலூன் போன்ற அலங்கார பொம்மைகளை வேண்டுமென்று அடம் பிடிப்பதும் குழந்தைகளுக்கே உரிய குணம் .குழந்தை பருவம் என்பது ஒரு 7 -8 ஆண்டுகள்தான் .
பின் சிறுவர் பருவத்திற்கு மாறிவிடுவர் .குழந்தை பருவ குணங்களை மிக கவனத்தோடு கையாண்டோமானால் மிகச்சிறந்த மனிதர்களை அல்லது மக்களை பெற்ற பெற்றோர் என உலகம் உங்களை புகழும் . .குழந்தைகள் வகுப்பறைகளில் சண்டையிட்டுக்கொள்ளும் அல்லது தெருக்களில் சண்டையிட்டுக்கொள்ளும் அந்த நிகழ்ச்சியை பொற்றோர்களிடம் முறையிடும் போது ‘பதிலுக்கு அடித்துவிட்டுவரவேண்டியதுதானே’எனகுழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் குணங்களை அவர்கள் மனதில் விதைக்ககூடாது. அடித்தால் பரவாயில்லை ‘பதிலுக்கு நீ திருப்பி அடிக்ககூடாது’என குழந்தைகள்மனதில் கோபகுணத்தை போக்கி எதையும் தாங்கும் பக்குவத்தை வளர்க்கவேண்டும்.
குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு சலிப்படையாமல் பதில் சொல்ல வேண்டும் ,
எந்தகாரணத்தைக்கொண்டும் குழந்தைகளை நீண்டநேரம் அழவைக்ககூடாது .
விலையுயர்ந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை வாங்கித்தரக்கூடாது .
குழந்தைகள்உடுத்தும் ஆடைகளை தினமும் துவைத்து குழந்தைகளை குளிப்பாட்டியபின் உடுத்தவேண்டும் .
பள்ளி சென்றகுழந்தைகள் வீடு திரும்பும் முன் நீங்கள் பார்த்துகொண்டிருந்த தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்துவிடவேண்டும் .
மாலை நேரத்தில் அரைமணி நேரமோ அல்லது வாராந்திரவிடுமுறைநாட்களில் சிலமணிநேரம் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்கலாம்; அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளாக இருக்கவேண்டும்.
6.எதிர்பாரா மருத்தவசெலவு
குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அடிக்கடி சளி ,இருமல்,காய்ச்சல் தொற்றும் .
இதை ஒரிரு நாட்களில் சரி செய்ய வேண்டும் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் .
இதற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும் .
7..விருந்தினர் பராமரிப்பு செலவு உண்ணாமல் கெட்டது உறவு , பார்க்காமல் கெட்டது பயிர் , கேட்காமல் கெட்டது கடன் . இது பழமொழி .
குடும்பம் நடத்தும்போது விருந்தினர் வருவதும் அவர்களை வரவேற்று உபசரிப்பதும் நமதுகடமை . இதற்காக ஒருகுறிப்பிட்டதொகையை ஒதுக்கவேண்டும்
சுற்றுலாச்செலவு வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது நான்கு அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையோ குழந்தைகளோடு முற்றிலும் புதியசூழலைக்காண்பது மிக அவசியம்
இதை கண்டுகளிக்க மாதந்தோறும் சேமிப்பது அவசியம் .
8.சுற்றுலாச்செலவு
வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மூன்றுவருடத்திற்கு ஒருமுறையோ மனைவியுடனோ மற்றும் குழந்தைகளுடனோ வரலாற்று புகழ்பெற்ற இடங்களை சுற்றி பார்க்க
திட்டமிடல் வேண்டும்.
இதற்காக மாதாந்திர வருவாயின் ஒரு பகுதியை(சுமார் 10%)சேமிப்பாக வைக்கவேண்டும்
9..சேமிப்பு செலவு
இது வரவுதான் இருப்பினும் மாதாந்திரவருவாயில் ஒதுக்குவதால் செலவினங்களில் சேர்க்கலாம் .
மாத வருவாயில் குறைந்த பட்சம் பத்து சதவிகிதமாவது சேமிக்கவேண்டும்
2.படுக்கையறை பிரச்சினையும் நிவர்த்தியும்
******************************
படித்தவர்கள்தான் இதை பிரச்சினை ஆக்கிக் கொள்கிரார்கள் .
கணவன் மனைவி இருவரும் அமைதியான சூழலில்சந்தோஷ தருணங்களில் (இதை நாமஉருவாக்கிக்கொள்ளவேண்டும்)மனம்விட்டு பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும் .
சந்தோஷ தருணங்கள் என்பது திருமணமான புதிதில் அடிக்கடி ஏற்படும் .
வயது கூடகூட தருணங்களில் அதிக இடைவெளி ஏற்படும் .
அதற்கு காரணம் இருவருக்கும் இடையில் உருவாகும் குழந்தைகள் , கூட்டுகுடும்பம் எனில் அப்பாஅம்மா , திருமணமாகாத தம்பி தங்கைகள் , ஒருசிலருக்கு தாத்தாபாட்டியும் இருக்கும் .
இவர்களையெல்லாம் பராமரித்துக்கொண்டு தாம்பத்தியத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளவேண்டும் .
படுக்கையறையை மனசுக்குப்பிடித்த நறுமணங்களால் நிரப்பவேண்டும் .
மனம் லயிக்கும் இசைகளை பாடவிடலாம் முக்கியமாக கொசு , ஈ கரப்பான் , சிலந்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
படுக்கபோகும்முன் எக்காரணத்தைக்கொண்டும் நடந்த கசப்பான நிகழ்ச்சிகளையோ எதிர்காலம் எப்படி அமையுமோ எனகிற மனக்கவலையோ இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .
உடலுக்கு பலமூட்டும் எளிமையான உணவு வகைகளை உண்ணவேண்டும் . இதனால் மனம் சந்தோஷப்படும் .
இந்த நேரத்தில் கருதரிக்கும் மேலும் குழந்தைகள் பிரசவிக்கும் காலங்கள் சூலை மாதம்முதல் டிசம்பர் மாத்த்திற்குள் இருக்கும்படி நிர்னயித்துகொள்வது நல்லது .
அதாவது வெப்பம் குறைந்த காலமாக இருக்கவேண்டும்குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . . காரணம் இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பண்பட்ட குணம் அமைகிறது என்பது ஆராய்ச்சியின் விளைவு .
பெரும்பாலான குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை தங்களோடு படுக்க வைத்துக்கொள்வார்கள் .
இதுதவறு. குழந்தை அல்லது குழந்தைகளை தங்கள் படுக்கையறைக்கு அருகே தனி படுக்கையோ அல்லது தனி அறையோ அமைத்துக்கொடுக்க வேண்டும் .
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இது மிகவும் அவசியம் அதே நேரத்தில் தங்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியம் .
குழந்தைகள் தூங்குவதாக நினைத்துக்கொண்டு , நீங்கள் உங்கள் படுக்கையறையை பூட்டக்கூடாது .
இரவு நேரங்களில் இறைச்சி , முட்டை , தயிர் , கீரை , மோர் அறவே தவிர்க்கப்படவேண்டும் .
எண்ணெயில்லா கோதுமைபண்டம் உலர்பழங்கள் , மிளகு ரசம், பால் இதுவே எளிய உணவு .
இரவு நேரத்தில் உணவு உண்டவுடன் படுக்க கூடாது .ஒருமணிநேரம் இடைவெளி வேண்டும்.
அவசரப்பட்டு ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தைவேண்டாம் என அறுவைசிகிச்சை செய்ய வேண்டாம் .
குடும்ப பொருளாதாரம் ,மனைவியின் உடல்நிலை பொருத்து கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி எத்தனை குழந்தைகள் தேவை என தீர்மானிக்கலாம்
ஆ. குடும்ப உருப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சனைகளும்
தீர்வுகளும்.
குடும்பத்தில் அப்பாஅம்மா, குழந்தைகள்,மற்றும்தாத்தாபாட்டி இவர்கள்தான் முக்கிய உருப்பினர்கள்.
குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் சண்டைபோடவேண்டாம் .
குழந்தைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொள்ளும் இதை தீர்ப்பதில் பெரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் சண்டைபோடவேண்டாம் .
யார்பெரியவர்களோ அவர்கள் பேச்சை சிறியவர்கள் கேட்கும்படி செய்யவேண்டும்.
இப்படி பழகும்போது குழந்தைகள் உரையாடல்களை பெரியவர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.
வரம்பு மீறும் பேச்சுக்களை திருத்தவேண்டும். அதுவும் அன்பாக திருத்தவேண்டும் .
குழந்தைகள் சண்டையை தீர்க்கும் பொருட்டு எந்த குழந்தையையும் அடிக்க வேண்டாம் .
அப்படிசெய்தால் குழந்தைகள் மனசிதைவு ஏற்படும் .
குழந்தைகள் வளர்ப்பில் எந்தக்குழந்தைக்கும் மனசிதைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது பெரியவர்களின்பொறுப்பு .
இ.பெற்றோர்களால் பிரச்சினைகளும் தீர்வுகளும்
பெற்றோர்களை பிரச்சினையாக நினைக்கும் மனோபாவத்தை ஒழிக்கவேண்டும் .
பெற்றோர்களை மதிப்பதும் இறந்தவர்களை வழிபடுவதும் சமதர்ம மனிதகுலம் தழைத்தோங்க உதவும் .
இது ஒரு மனித உணர்வு மனிதனின் பிறப்பு இச்சையானது .
பிறந்தவுடன் அவன் தானாக வளர்ந்து விடுவதில்லை. அவன் வளர்க்கப்படுகின்றான் .
பின் இறப்புஇச்சையானது.
பிறப்பிலும் இறப்பிலும் சடங்குகளை புகுத்தி வாழ்க்கையில் மனிதனுக்கு பற்றை ஏற்படுத்தி மனிதவுணர்வுகளான அனபு ,பண்பு ,பரிவு , தர்மம் ,நீதி நேர்மை ,நன்றி போன்ற அற உணர்வுகளை அவன் வளர்க்கப்படும்போது உணரச்செய்யப்படுகிறது .
இதில் பெற்றோர்களுக்கு பெரும்பங்கு உண்டு உன் குழந்தைகள் முன்னிலையில் உன் பெற்றோரை நீ வணங்கவேண்டும் இது மிக முக்கியமான மனித பண்பு .
இந்த பண்பை ஒவ்வொருமனிதனும் உணர்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பெற்றோர்களால் பிரச்சினையே வராது .
ஈ . சுற்றத்தார் பிரச்சினைகளும் தீர்வுகளும்
கூட்டம் கூட்டமாக வாழ்வது மனிதர்களிடையே இருக்கும் ஒரு மிருக உணர்வு .இதுஒரு சிறந்த உணர்வு .
பிறர்கின்னா செய்யாமையும் நன்றி மறவாமையும் தான் இதற்கு தீர்வு .இது மனித உணர்வு .
நம்மிடையே உபரியாக இருக்கும் பணத்தை நம்முடைய உறவினர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் .அவர்கள் முன்னேறிய பிறகு அதாவது யார் நம்மால் பயன்அடைந்தார்களோ அவர்கள் நம்மிடம் பாசமாக இருப்பார்கள் என எதிர்பாக்ககூடாது ,இந்த நிலையை நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
இது மகன்,மகள்,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை
உறவுமுறைகளுக்கும் பொறுந்தும்.நல்லது செய்ய செய்ய மனம் மகிழ்ச்சி அடையும்.
உ .நண்பர்களால் பிரச்சனையும் தீர்வும்
அப்பாஅம்மா ,அண்ணன் தம்பி ,அக்கா தங்கை இவர்களைவிட நண்பனுக்கு தனி நிலையுண்டு .
காரணம் நணபர்களிடம்மட்டுமே அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியும் .
வயதுஏற ஏற பருவத்திற்குஏற்றாற்போல் நண்பர்கள் மாறிக்கொண்டேஇருப்பார்கள்
ஆரம்ப பள்ளி உயர்நிலைப்பள்ளி ,கல்லூரி மற்றும் வேலை நிறுவணங்களில்
நண்பர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் .
பழகும்போது நண்பர்களின் குணமறிந்து பழகவேண்டும் என கூறுவார்கள் .
ஆனால் நமக்கு என்ன குணங்கள் உள்ளன அதில் அடுத்தவர்களை கெடுக்கும் குணமுள்ளதா? அல்லது வரியவர்கள் ஏழைகள் இவர்களை பார்த்து முகம் சுழிக்கும் குணமுள்ளதா என சுய விமர்சனம் செய்யும் பக்குவம் நமக்கு வரவேண்டும்
இந்த நோக்கில் நண்பர்களை தேர்வுசெய்தால் நமக்கு நண்பர்கள் மிக குறைவாகவே அமைவார்கள் .
சிலநேரங்களில் நமக்கு பிடிக்காத பொருளைப்பற்றி அருவருக்கதக்க மொழிகளில் நம்மை வெறுப்பேற்ற மணிக்கணக்காக பேசுவார்கள் .
அந்த நேரத்தில் பொறுமை காக்க வேண்டும். அப்பொழுதும்
எல்லைமீறும்சமயத்தில் அத்தகைய நட்பை துண்டிக்க வேண்டும். எந்த நிலையிலும் வன்முறையில் இறங்க கூடாது
சூதாட்டம்,புகைபழக்கம் , குடிப்பழக்கம் பிறன்மனை கெடுக்கும் நோக்கம் இருந்தால் நிறைய நண்பர்கள் சேருவார்கள் .
இந்த மாதிரியான நண்பர்கள்தான் நமக்கு எதிரிகளாகவும்,துரோகிகளாகவும் மாறுவார்கள் இந்த நண்பர்களை வீடுவரை அழைத்து வரக்கூடாது .
இந்த நண்பர்களால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த கூடா நட்பை தட்டிகழித்தால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது .
நட்புக்காக ஆதரவு கரம்நீட்டலாம், ஆனால் உயிரைவிடும் அளவுக்கு கோழையாக இருக்க கூடாது.
நண்பர்களுக்கு பொருளுதவி செய்யலாம் அதேநேரத்தில் நமக்கு பொருளில்லா நிலை ஏற்பட்டு விடக்கூடாது
*********************
அ.கணவன், மனைவிக்கிடையே பிரச்சினை
ஆ.குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சினை
இ.பெற்றோர்களால் பிரச்சினை
ஈ.சுற்றத்தார் பிரச்சினை
உ.நண்பர்களால் பிரச்சினை
கணவன் ,மனைவிக்கிடையே பல பிரச்சினைகள் உருவாகும் இதை அவ்வப்போது பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் .
அமைதியான சூழலை உருவாக்கி நிதானமாக மனம்விட்டு பேசவேண்டும் .
அ.1. பணபற்றாகுறையும் நிவர்த்தியும்
2. படுக்கையரை குறைபாடுகளும் நிவர்த்தியும்
1.முதலில் பணபற்றாகுறையை எப்படி சமாளிப்பது என்பதை பார்ப்போம் .
“நமது எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் நமது வாழ்க்கை அமையும்” .
கணவன்மனைவிக்கிடையே எண்ணங்களை ஒருமுகபடுத்திக்கொள்ளவேண்டும் .
ஒருகுடும்பத்தில் கணவன் மட்டுமே சம்பாதிப்பார் அல்லது மனைவிமட்டுமே
சம்பாதிப்பார் . ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் வருமானத்தை வைத்து எப்படி
குடும்பம் நடத்துவது , அதுவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதுதான்
முக்கியம் .கூலித்தொழிலாளி,ரிக்சா ஓட்டி ,அலுவல் வேலையாளி,
அலுவலர் ,முதலாளி அவரவர் வருமானத்திற்கு ஏற்றாற்போல் வரவுசெலவு
கணக்கு பார்த்து மகிழ்ச்சியே குறிக்கோளாக வழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்துப்பார்து நிம்மதி தேடவேண்டும் .
வரவுக்கு ஏற்றாற்போல் செலவினங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் .
1,அடுப்பங்கரை செலவு
2.சாப்பாட்டு செலவு
3.உறைவிட செலவு
4.உடைகள் செலவு
5.குழந்தைகள் பராமரிப்பு செலவு
6.எதிர்பாரா மருத்துவசெலவு
7.விருந்தினர் பராமரிப்பு செலவு
8.சுற்றுலா செலவு
9.சேமிப்பு செலவு
மாதாந்திர வருவாய் உள்ளவர்கள் மாதாந்திர வரவுசெலவு கணக்கு போடலாம் .
விவசாயம் செய்பவர்கள் நில வருவாய்கு ஏற்றாற்போல் ஆறு மாதத்திற்கு
ஒருமுறையோ அல்லது ஆண்டுக்கு ஒருமுறையோ வரவு செலவு கணக்கு போடலாம்
நடுத்தர குடும்பங்கள் அடுப்பங்கரைக்கே நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது
இதை கணவன் மனைவி இருவரும் இணைந்து எவ்வளவுக்கெவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு குறைக்கலாம் , மனம் ஒத்த நிலையில்.
1.அடுப்பங்கரை செலவு என்பது கட்டை அடுப்பு, மண்ணெண்ணை அடுப்பு , வளி அடுப்பு நிறுவுதல்; அதற்கான பாத்திரங்களை வாங்குதல் போன்றவையாகும்.
சமயல் பாத்திரங்கள் வாங்கும்போது அலுமின்யம் , எக்கு பாத்திரங்கள் மட்டுமே வாங்கவேண்டும்
2.சாப்பாட்டு செலவு என்பது மிகமுக்கியமானது . ஆரோக்கியமான உடல் பராமரிப்புக்கு இது மிகவும் அவசியம்.
“உணவே மருந்து” . இதை உணர்ந்து செயல்படவேண்டும் .
குறைந்த செலவில் சத்தான உணவு சாப்பிட வேண்டும் ,மேலும் உண்ணும் உணவுக்கும் ,மனோ நிலை பாதிப்புக்கும் நெறுங்கிய தொடர்புண்டு
3.உறைவிட செலவு ;வாடகை வீடு உள்ளவர்கள், சொந்த வீடு உள்ளவர்கள் என இருவகையாக பிரிக்கலாம் .
சொந்த வீடாக இருந்தாலும் , வாடகை வீடாக இருந்நாலும் காற்றோட்டமான அறைகளையே தேர்வு செய்ய வேண்டும் , நோயற்ற வாழ்வுக்கு இது பெறும் பங்கு வகிக்கும் .
சொந்தமாக வீடு கட்டுவதற்கு பொறியல் வல்லுநரையோ , ஜோசியக்காரரையோ அணுக வேண்டாம் .
அறைகளை அமைப்பதில்
8*8 ,10*10 ,15*15 , 16*16, 20*20, எனகிறமுறையில் தேர்வுசெய்து எதிரெதிர் திசையில் சன்னல்களை அமைத்து வீடுகளை அமைக்க வேண்டும் .
மொத்தத்தில் வெளிக்காற்று உள்ளே வரவேண்டும் ,உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்ல வேண்டும். இதுதான் வாஸ்த்து முறை .
கட்டியவீட்டுக்கு ஜோசியரிடம் வாஸ்த்து பார்பதும் உனக்கு ஏற்ப்படும் கஷ்டங்களுக்கு கட்டியவீடுதான் காரணம் என உனக்கு சொல்பவர்களின் அறிவுரை ஏற்றால் உனக்கு வீடில்லா நிலைதான் ஏற்படும் .
அக்கம்பக்கம் கடன்வாங்கி வீட்டைகட்டி அதனுள் குடிபுக நேரங்காலம் பார்த்து ஊர்கூட்டி ஆயிரக்கணக்கில் செலவுசெய்து புகுமனை புகுவிழா நடத்துவதால், எந்த பயனும் ஏற்படாது .மேலும் பணமில்லா நிலைதான் ஏற்படும்
4..உடைகள்செலவு
வளரும் குழந்தைகளுக்கு எந்தவித காரணங்களுக்காகவும் விலையுயர்ந்த ஆடை,அணிகலன்களை வாங்ககூடாது .
புத்தாடை அணிந்துதான் ஆண்டுகள் தோறும் வரும் விழாக்களை கொண்டாடவேண்டும் என்கிற மனோபாவத்தை குழந்தைகளிடையே வளர்க்க வேண்டாம் .
போதுமான அளவுக்கு மாற்று உடைகள் இருந்தால் ஆண்டுகள்தோறும் ,விழாக்கள் தோறும் புத்தாடைகள் எடுக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை
குழந்தைகள் பிறந்த நாட்களை எளியமுறையில் சுற்று வட்டார குழந்தைகளுடன்கொண்டாடலாம்.
அப்பாஅம்மா, குழந்தைகள் கழுத்தில் மலர் மாலை அணிவித்து , இனிப்புகள் பரிமாறி கொண்டாடலாம்
5.குழந்தை வளர்க்கும் கலை
குழந்தைகளை இரண்டுவயது வரை கண்டிப்பாக உங்களோடும் , இரவு நேரங்களில் உங்கள் படுக்கையரையை ஒட்டியும் உறங்க வைத்து உங்கள் நேரடி கண்காணிப்பில் வளர்க்கவேண்டும் .
குழந்தைகளை 12 மாதங்கள் தாய்ப்பால் ஊட்டியே வளர்க்க வேண்டும் .
குழந்தை பிறந்த ஆறாவது மாத த்திலிருந்து தாய்ப்பாலுடன் திடவுணவான நன்கு வேகவைத்த சிறிதளவு பருப்பு , உருளைகிழங்கு ஆகியவற்றை நன்கு வேக வைத்த அரிசியுடன் ஊட்டிவிடலாம்
குழந்தைகள் உலா வரும் இடத்தை தூய்மையாக வைக்கவேண்டும்.
தெருவில் விற்கும் தின்பண்டங்களை வாங்கித்தரக்கூடாது.
பள்ளிசெல்லும்போது பணமோ,தின்பண்டமோ கொடுத்தனுப்பக்கூடாது.
குழந்தைகள் தெருவில் விற்கும் தின்பண்டங்களை விரும்புவதும் ,பலூன் போன்ற அலங்கார பொம்மைகளை வேண்டுமென்று அடம் பிடிப்பதும் குழந்தைகளுக்கே உரிய குணம் .குழந்தை பருவம் என்பது ஒரு 7 -8 ஆண்டுகள்தான் .
பின் சிறுவர் பருவத்திற்கு மாறிவிடுவர் .குழந்தை பருவ குணங்களை மிக கவனத்தோடு கையாண்டோமானால் மிகச்சிறந்த மனிதர்களை அல்லது மக்களை பெற்ற பெற்றோர் என உலகம் உங்களை புகழும் . .குழந்தைகள் வகுப்பறைகளில் சண்டையிட்டுக்கொள்ளும் அல்லது தெருக்களில் சண்டையிட்டுக்கொள்ளும் அந்த நிகழ்ச்சியை பொற்றோர்களிடம் முறையிடும் போது ‘பதிலுக்கு அடித்துவிட்டுவரவேண்டியதுதானே’எனகுழந்தைகளிடம் வன்முறையை தூண்டும் குணங்களை அவர்கள் மனதில் விதைக்ககூடாது. அடித்தால் பரவாயில்லை ‘பதிலுக்கு நீ திருப்பி அடிக்ககூடாது’என குழந்தைகள்மனதில் கோபகுணத்தை போக்கி எதையும் தாங்கும் பக்குவத்தை வளர்க்கவேண்டும்.
குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு சலிப்படையாமல் பதில் சொல்ல வேண்டும் ,
எந்தகாரணத்தைக்கொண்டும் குழந்தைகளை நீண்டநேரம் அழவைக்ககூடாது .
விலையுயர்ந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளை வாங்கித்தரக்கூடாது .
குழந்தைகள்உடுத்தும் ஆடைகளை தினமும் துவைத்து குழந்தைகளை குளிப்பாட்டியபின் உடுத்தவேண்டும் .
பள்ளி சென்றகுழந்தைகள் வீடு திரும்பும் முன் நீங்கள் பார்த்துகொண்டிருந்த தொலைக்காட்சிப்பெட்டியை அணைத்துவிடவேண்டும் .
மாலை நேரத்தில் அரைமணி நேரமோ அல்லது வாராந்திரவிடுமுறைநாட்களில் சிலமணிநேரம் தொலைக்காட்சியை பார்க்க அனுமதிக்கலாம்; அறிவுபூர்வமான நிகழ்ச்சிகளாக இருக்கவேண்டும்.
6.எதிர்பாரா மருத்தவசெலவு
குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அடிக்கடி சளி ,இருமல்,காய்ச்சல் தொற்றும் .
இதை ஒரிரு நாட்களில் சரி செய்ய வேண்டும் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் .
இதற்காக மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும் .
7..விருந்தினர் பராமரிப்பு செலவு உண்ணாமல் கெட்டது உறவு , பார்க்காமல் கெட்டது பயிர் , கேட்காமல் கெட்டது கடன் . இது பழமொழி .
குடும்பம் நடத்தும்போது விருந்தினர் வருவதும் அவர்களை வரவேற்று உபசரிப்பதும் நமதுகடமை . இதற்காக ஒருகுறிப்பிட்டதொகையை ஒதுக்கவேண்டும்
சுற்றுலாச்செலவு வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது நான்கு அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையோ குழந்தைகளோடு முற்றிலும் புதியசூழலைக்காண்பது மிக அவசியம்
இதை கண்டுகளிக்க மாதந்தோறும் சேமிப்பது அவசியம் .
8.சுற்றுலாச்செலவு
வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மூன்றுவருடத்திற்கு ஒருமுறையோ மனைவியுடனோ மற்றும் குழந்தைகளுடனோ வரலாற்று புகழ்பெற்ற இடங்களை சுற்றி பார்க்க
திட்டமிடல் வேண்டும்.
இதற்காக மாதாந்திர வருவாயின் ஒரு பகுதியை(சுமார் 10%)சேமிப்பாக வைக்கவேண்டும்
9..சேமிப்பு செலவு
இது வரவுதான் இருப்பினும் மாதாந்திரவருவாயில் ஒதுக்குவதால் செலவினங்களில் சேர்க்கலாம் .
மாத வருவாயில் குறைந்த பட்சம் பத்து சதவிகிதமாவது சேமிக்கவேண்டும்
2.படுக்கையறை பிரச்சினையும் நிவர்த்தியும்
******************************
படித்தவர்கள்தான் இதை பிரச்சினை ஆக்கிக் கொள்கிரார்கள் .
கணவன் மனைவி இருவரும் அமைதியான சூழலில்சந்தோஷ தருணங்களில் (இதை நாமஉருவாக்கிக்கொள்ளவேண்டும்)மனம்விட்டு பேசித்தீர்த்துக்கொள்ளவேண்டும் .
சந்தோஷ தருணங்கள் என்பது திருமணமான புதிதில் அடிக்கடி ஏற்படும் .
வயது கூடகூட தருணங்களில் அதிக இடைவெளி ஏற்படும் .
அதற்கு காரணம் இருவருக்கும் இடையில் உருவாகும் குழந்தைகள் , கூட்டுகுடும்பம் எனில் அப்பாஅம்மா , திருமணமாகாத தம்பி தங்கைகள் , ஒருசிலருக்கு தாத்தாபாட்டியும் இருக்கும் .
இவர்களையெல்லாம் பராமரித்துக்கொண்டு தாம்பத்தியத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளவேண்டும் .
படுக்கையறையை மனசுக்குப்பிடித்த நறுமணங்களால் நிரப்பவேண்டும் .
மனம் லயிக்கும் இசைகளை பாடவிடலாம் முக்கியமாக கொசு , ஈ கரப்பான் , சிலந்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .
படுக்கபோகும்முன் எக்காரணத்தைக்கொண்டும் நடந்த கசப்பான நிகழ்ச்சிகளையோ எதிர்காலம் எப்படி அமையுமோ எனகிற மனக்கவலையோ இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .
உடலுக்கு பலமூட்டும் எளிமையான உணவு வகைகளை உண்ணவேண்டும் . இதனால் மனம் சந்தோஷப்படும் .
இந்த நேரத்தில் கருதரிக்கும் மேலும் குழந்தைகள் பிரசவிக்கும் காலங்கள் சூலை மாதம்முதல் டிசம்பர் மாத்த்திற்குள் இருக்கும்படி நிர்னயித்துகொள்வது நல்லது .
அதாவது வெப்பம் குறைந்த காலமாக இருக்கவேண்டும்குழந்தைகள் நலமுடன் பிறக்கும் . . காரணம் இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல பண்பட்ட குணம் அமைகிறது என்பது ஆராய்ச்சியின் விளைவு .
பெரும்பாலான குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை தங்களோடு படுக்க வைத்துக்கொள்வார்கள் .
இதுதவறு. குழந்தை அல்லது குழந்தைகளை தங்கள் படுக்கையறைக்கு அருகே தனி படுக்கையோ அல்லது தனி அறையோ அமைத்துக்கொடுக்க வேண்டும் .
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இது மிகவும் அவசியம் அதே நேரத்தில் தங்களின் நேரடி கண்காணிப்பில் இருப்பது அவசியம் .
குழந்தைகள் தூங்குவதாக நினைத்துக்கொண்டு , நீங்கள் உங்கள் படுக்கையறையை பூட்டக்கூடாது .
இரவு நேரங்களில் இறைச்சி , முட்டை , தயிர் , கீரை , மோர் அறவே தவிர்க்கப்படவேண்டும் .
எண்ணெயில்லா கோதுமைபண்டம் உலர்பழங்கள் , மிளகு ரசம், பால் இதுவே எளிய உணவு .
இரவு நேரத்தில் உணவு உண்டவுடன் படுக்க கூடாது .ஒருமணிநேரம் இடைவெளி வேண்டும்.
அவசரப்பட்டு ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் குழந்தைவேண்டாம் என அறுவைசிகிச்சை செய்ய வேண்டாம் .
குடும்ப பொருளாதாரம் ,மனைவியின் உடல்நிலை பொருத்து கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசி எத்தனை குழந்தைகள் தேவை என தீர்மானிக்கலாம்
ஆ. குடும்ப உருப்பினர்களில் ஒருவருக்கொருவர் பிரச்சனைகளும்
தீர்வுகளும்.
குடும்பத்தில் அப்பாஅம்மா, குழந்தைகள்,மற்றும்தாத்தாபாட்டி இவர்கள்தான் முக்கிய உருப்பினர்கள்.
குழந்தைகள் முன்னிலையில் பெரியவர்கள் சண்டைபோடவேண்டாம் .
குழந்தைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டுக்கொள்ளும் இதை தீர்ப்பதில் பெரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் சண்டைபோடவேண்டாம் .
யார்பெரியவர்களோ அவர்கள் பேச்சை சிறியவர்கள் கேட்கும்படி செய்யவேண்டும்.
இப்படி பழகும்போது குழந்தைகள் உரையாடல்களை பெரியவர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும்.
வரம்பு மீறும் பேச்சுக்களை திருத்தவேண்டும். அதுவும் அன்பாக திருத்தவேண்டும் .
குழந்தைகள் சண்டையை தீர்க்கும் பொருட்டு எந்த குழந்தையையும் அடிக்க வேண்டாம் .
அப்படிசெய்தால் குழந்தைகள் மனசிதைவு ஏற்படும் .
குழந்தைகள் வளர்ப்பில் எந்தக்குழந்தைக்கும் மனசிதைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது பெரியவர்களின்பொறுப்பு .
இ.பெற்றோர்களால் பிரச்சினைகளும் தீர்வுகளும்
பெற்றோர்களை பிரச்சினையாக நினைக்கும் மனோபாவத்தை ஒழிக்கவேண்டும் .
பெற்றோர்களை மதிப்பதும் இறந்தவர்களை வழிபடுவதும் சமதர்ம மனிதகுலம் தழைத்தோங்க உதவும் .
இது ஒரு மனித உணர்வு மனிதனின் பிறப்பு இச்சையானது .
பிறந்தவுடன் அவன் தானாக வளர்ந்து விடுவதில்லை. அவன் வளர்க்கப்படுகின்றான் .
பின் இறப்புஇச்சையானது.
பிறப்பிலும் இறப்பிலும் சடங்குகளை புகுத்தி வாழ்க்கையில் மனிதனுக்கு பற்றை ஏற்படுத்தி மனிதவுணர்வுகளான அனபு ,பண்பு ,பரிவு , தர்மம் ,நீதி நேர்மை ,நன்றி போன்ற அற உணர்வுகளை அவன் வளர்க்கப்படும்போது உணரச்செய்யப்படுகிறது .
இதில் பெற்றோர்களுக்கு பெரும்பங்கு உண்டு உன் குழந்தைகள் முன்னிலையில் உன் பெற்றோரை நீ வணங்கவேண்டும் இது மிக முக்கியமான மனித பண்பு .
இந்த பண்பை ஒவ்வொருமனிதனும் உணர்ந்து வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் பெற்றோர்களால் பிரச்சினையே வராது .
ஈ . சுற்றத்தார் பிரச்சினைகளும் தீர்வுகளும்
கூட்டம் கூட்டமாக வாழ்வது மனிதர்களிடையே இருக்கும் ஒரு மிருக உணர்வு .இதுஒரு சிறந்த உணர்வு .
பிறர்கின்னா செய்யாமையும் நன்றி மறவாமையும் தான் இதற்கு தீர்வு .இது மனித உணர்வு .
நம்மிடையே உபரியாக இருக்கும் பணத்தை நம்முடைய உறவினர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம் .அவர்கள் முன்னேறிய பிறகு அதாவது யார் நம்மால் பயன்அடைந்தார்களோ அவர்கள் நம்மிடம் பாசமாக இருப்பார்கள் என எதிர்பாக்ககூடாது ,இந்த நிலையை நாம் இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
இது மகன்,மகள்,அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை
உறவுமுறைகளுக்கும் பொறுந்தும்.நல்லது செய்ய செய்ய மனம் மகிழ்ச்சி அடையும்.
உ .நண்பர்களால் பிரச்சனையும் தீர்வும்
அப்பாஅம்மா ,அண்ணன் தம்பி ,அக்கா தங்கை இவர்களைவிட நண்பனுக்கு தனி நிலையுண்டு .
காரணம் நணபர்களிடம்மட்டுமே அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியும் .
வயதுஏற ஏற பருவத்திற்குஏற்றாற்போல் நண்பர்கள் மாறிக்கொண்டேஇருப்பார்கள்
ஆரம்ப பள்ளி உயர்நிலைப்பள்ளி ,கல்லூரி மற்றும் வேலை நிறுவணங்களில்
நண்பர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் .
பழகும்போது நண்பர்களின் குணமறிந்து பழகவேண்டும் என கூறுவார்கள் .
ஆனால் நமக்கு என்ன குணங்கள் உள்ளன அதில் அடுத்தவர்களை கெடுக்கும் குணமுள்ளதா? அல்லது வரியவர்கள் ஏழைகள் இவர்களை பார்த்து முகம் சுழிக்கும் குணமுள்ளதா என சுய விமர்சனம் செய்யும் பக்குவம் நமக்கு வரவேண்டும்
இந்த நோக்கில் நண்பர்களை தேர்வுசெய்தால் நமக்கு நண்பர்கள் மிக குறைவாகவே அமைவார்கள் .
சிலநேரங்களில் நமக்கு பிடிக்காத பொருளைப்பற்றி அருவருக்கதக்க மொழிகளில் நம்மை வெறுப்பேற்ற மணிக்கணக்காக பேசுவார்கள் .
அந்த நேரத்தில் பொறுமை காக்க வேண்டும். அப்பொழுதும்
எல்லைமீறும்சமயத்தில் அத்தகைய நட்பை துண்டிக்க வேண்டும். எந்த நிலையிலும் வன்முறையில் இறங்க கூடாது
சூதாட்டம்,புகைபழக்கம் , குடிப்பழக்கம் பிறன்மனை கெடுக்கும் நோக்கம் இருந்தால் நிறைய நண்பர்கள் சேருவார்கள் .
இந்த மாதிரியான நண்பர்கள்தான் நமக்கு எதிரிகளாகவும்,துரோகிகளாகவும் மாறுவார்கள் இந்த நண்பர்களை வீடுவரை அழைத்து வரக்கூடாது .
இந்த நண்பர்களால் நமக்கு மன அழுத்தம் ஏற்படும். இந்த கூடா நட்பை தட்டிகழித்தால் நமக்கு எந்த பிரச்சனையும் வராது .
நட்புக்காக ஆதரவு கரம்நீட்டலாம், ஆனால் உயிரைவிடும் அளவுக்கு கோழையாக இருக்க கூடாது.
நண்பர்களுக்கு பொருளுதவி செய்யலாம் அதேநேரத்தில் நமக்கு பொருளில்லா நிலை ஏற்பட்டு விடக்கூடாது
Subscribe to:
Comments (Atom)