Tuesday, April 1, 2014

சுயமாக சிந்திப்பது எப்போது?




உணவுப்பொருட்கள் என்பது விலங்குகளும் ,மனிதர்களும் உயிர்வாழ இயற்கையாகவே இம்மண்ணுலகில் விளைகிறது. விலங்குகள் பச்சையாகவே உண்ணுகின்றன.மனிதர்கள் சிலவற்றை பச்சையாகவும் பல வற்றை வேகவைத்து வாய் ருசிக்கு ஏற்றவாறு சமைத்து உண்கின்றனர்.

உலகில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகித நில வாழ் மக்களுக்கு உண்ண உணவு கிடைப்பதில்லை.இவர்கள் யாவரும் வெய்யில் உழைப்பாளிகளே.இவர்களுக்கு உழைக்க தெரியும் திருடத் தெரியாது. இருப்பவரிடம் இருந்து கொள்ளையடிக்கத்தெரியாது.உடல் பலம் அற்றவர்கள்.இவர்கள் உழைப்பை சுரண்டும் நிழலாளிகள், ஒரு நாளுக்கு மூணுவேளை உணவருந்த போதிய ஊதியம் தரமாட்டார்கள்.

சமிபத்தில் ஒரு செய்தி,சென்னை அருகே ஒரு அம்மன் சிலைக்கு 1008 இளநீர் அபிசேகம்  செய்து தங்கள் நேர்திக்கடனை முடித்துக்கொண்டார்கள் என படித்தேன்.           
இளநீர் என்பது மனிதனுக்கு இயற்கை அளித்திட்ட அருமையான ஒரு பாதுகாக்கப்பட்ட மினரல்(தாது) நீர்.மனிதனின் உடல் உருப்புகள் நன்கு இயங்கும் அளவுக்கு தேவைப்படும் சாதாரண குடிநீரைவிட அருமருத்து.தற்பொழுது ஒரு இளநீரின் விலை குறைந்த பட்சம் ரூ20.00 ஆகிறது.அம்மை போன்று தாக்கப்பட்டுள்ள ஏழை நோயாளிகளுக்கு ஒரு இளநீர் வாங்கி தர முடியவில்லை. அம்மனுக்கு (கற்சிலைக்கு) இளநீர் ஊற்றுவதால் யாருக்கு பயன்?
அழும் குழந்தைக்கு பால் கிடைக்காதபோது அதை கற்சிலைக்கு ஊற்றினால் யாருக்கு என்ன பயன் விளையப்போகிறது?

வெய்யிலாளிகளின் வியர்வையில் உழைத்து நிழாலாளிகள் குண்டி கொழுக்கட்டும்.தவறில்லை. ஆனால் கடவுள் மனம் குளிரட்டும் என இளநீர் அபிசேகம் செய்யும் நிழலாளிகள் அம்மனிடம் வாங்கிக்கொண்டது நீரிழிவு நோயைத்தானே?
சுயமாக இவன் சிந்திப்பது எப்போது?   


No comments: