வான் மழை வேண்டி வருண ஜபம்
சிறப்பொடு
பூசனை செல்லாது வானம்
வறக்குமேல்
வானோர்க்கும் ஈண்டு
தானம்
தவம் இரண்டும் தாங்கா வியன்உலகம்
வானம்
வழங்கா தெனின்
12
ஆண்டுகளுக்கு ஒருமுறை வானம் பொய்ப்பது வழக்கமாகிவிட்டது. இது ஏன் இப்படி நடக்கிறது
என்பது அறிவியலுக்கு உட்படாத விசயமாகவே உள்ளது. வான்மழை தவரா இடத்தில் வளம்
கொழிக்கும்.வளம் கொழிக்கும் பூமியில் நாம் வணங்குவதால் தான் வான் மழை பொழிகிறது
என உலகத்தில் எல்லா மதங்களும் சொல்கிறது.
காடுகளிலும் கடலிலும் மழைபொழிகிறதே அங்கே
யார் கடவுளை வணங்குகிறார்கள் ?
சரி
கடவுளை வணங்கினால்தான் மழை பொழியும் எனில் வணங்காவிட்டால் மழைபொழியக்கூடாது
,அல்லது மழையினால் சேதம் உண்டாகக்கூடாது.இதற்கு கடவுளை வணங்கினால் பரிகாரம் உண்டா?
29.04.2014
தேதியிட்ட (தினமணி) செய்தித்தாளில் தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்களெல்லாம் கூடி
வருண ஜபம் செய்தனர், என செய்தி வெளியிட்டிருந்தனர். இது அரசு உத்தரவாம்.அரசு
உத்தரவிட்டு மழை பொழியட்டும்.அதே நேரத்தில் மழையினால் ஏற்படும் சேதத்திற்கு அரசு
ஆணையிட்டு மழையை நிறுத்தலாமே?
மழை
பொய்த்துவிட்டால் பூசை செல்லாது என முதுபெரும் தமிழ்ப்புலவரின் வாக்கு.அவர்வாக்கு
என்றும் பொய்த்ததில்லை. ஆனால் மழை பொய்த்துவிடுகிறது.
இந்த வருண
ஜபம் செய்கிறார்களே யாரை சமாதானப்படுத்துவதற்கு?அல்லது யாரை நம்ப வைக்கப் பார்கிறார்கள்?
மழை
பொழியவில்லை.பயிர்கள் வாடுகின்றன அல்லது முற்றிலும் அழிந்துவிட்டன.இதற்கு
யார்பொருப்பு? இதற்குமட்டும் மனிதன் பொருப்பு.மழைப் பொழிந்து பயிர் செழித்தால் மட்டும்
கடவுள் பொருப்பா?
அர்ச்சகர்களுக்கு
ஏன் இந்த பசப்பு நாடகம்?