Wednesday, April 30, 2014

மழை வேண்டி வருண ஜபம்-கடவுளை ஏமாத்தவா?



                வான் மழை வேண்டி வருண ஜபம்


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

தானம் தவம் இரண்டும் தாங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானம் பொய்ப்பது வழக்கமாகிவிட்டது. இது ஏன் இப்படி நடக்கிறது என்பது அறிவியலுக்கு உட்படாத விசயமாகவே உள்ளது. வான்மழை தவரா இடத்தில் வளம் கொழிக்கும்.வளம் கொழிக்கும் பூமியில் நாம் வணங்குவதால் தான் வான் மழை பொழிகிறது என  உலகத்தில் எல்லா மதங்களும் சொல்கிறது. காடுகளிலும் கடலிலும் மழைபொழிகிறதே  அங்கே யார் கடவுளை வணங்குகிறார்கள் ?

சரி கடவுளை வணங்கினால்தான் மழை பொழியும் எனில் வணங்காவிட்டால் மழைபொழியக்கூடாது ,அல்லது மழையினால் சேதம் உண்டாகக்கூடாது.இதற்கு கடவுளை வணங்கினால் பரிகாரம் உண்டா?

29.04.2014 தேதியிட்ட (தினமணி) செய்தித்தாளில் தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்களெல்லாம் கூடி வருண ஜபம் செய்தனர், என செய்தி வெளியிட்டிருந்தனர். இது அரசு உத்தரவாம்.அரசு உத்தரவிட்டு மழை பொழியட்டும்.அதே நேரத்தில் மழையினால் ஏற்படும் சேதத்திற்கு அரசு ஆணையிட்டு மழையை நிறுத்தலாமே?
மழை பொய்த்துவிட்டால் பூசை செல்லாது என முதுபெரும் தமிழ்ப்புலவரின் வாக்கு.அவர்வாக்கு என்றும் பொய்த்ததில்லை. ஆனால் மழை பொய்த்துவிடுகிறது.

இந்த வருண ஜபம் செய்கிறார்களே யாரை சமாதானப்படுத்துவதற்கு?அல்லது யாரை நம்ப வைக்கப் பார்கிறார்கள்?
மழை பொழியவில்லை.பயிர்கள் வாடுகின்றன அல்லது முற்றிலும் அழிந்துவிட்டன.இதற்கு யார்பொருப்பு? இதற்குமட்டும் மனிதன் பொருப்பு.மழைப் பொழிந்து பயிர் செழித்தால் மட்டும் கடவுள் பொருப்பா?
அர்ச்சகர்களுக்கு ஏன் இந்த பசப்பு நாடகம்?    

Tuesday, April 1, 2014

சுயமாக சிந்திப்பது எப்போது?




உணவுப்பொருட்கள் என்பது விலங்குகளும் ,மனிதர்களும் உயிர்வாழ இயற்கையாகவே இம்மண்ணுலகில் விளைகிறது. விலங்குகள் பச்சையாகவே உண்ணுகின்றன.மனிதர்கள் சிலவற்றை பச்சையாகவும் பல வற்றை வேகவைத்து வாய் ருசிக்கு ஏற்றவாறு சமைத்து உண்கின்றனர்.

உலகில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகித நில வாழ் மக்களுக்கு உண்ண உணவு கிடைப்பதில்லை.இவர்கள் யாவரும் வெய்யில் உழைப்பாளிகளே.இவர்களுக்கு உழைக்க தெரியும் திருடத் தெரியாது. இருப்பவரிடம் இருந்து கொள்ளையடிக்கத்தெரியாது.உடல் பலம் அற்றவர்கள்.இவர்கள் உழைப்பை சுரண்டும் நிழலாளிகள், ஒரு நாளுக்கு மூணுவேளை உணவருந்த போதிய ஊதியம் தரமாட்டார்கள்.

சமிபத்தில் ஒரு செய்தி,சென்னை அருகே ஒரு அம்மன் சிலைக்கு 1008 இளநீர் அபிசேகம்  செய்து தங்கள் நேர்திக்கடனை முடித்துக்கொண்டார்கள் என படித்தேன்.           
இளநீர் என்பது மனிதனுக்கு இயற்கை அளித்திட்ட அருமையான ஒரு பாதுகாக்கப்பட்ட மினரல்(தாது) நீர்.மனிதனின் உடல் உருப்புகள் நன்கு இயங்கும் அளவுக்கு தேவைப்படும் சாதாரண குடிநீரைவிட அருமருத்து.தற்பொழுது ஒரு இளநீரின் விலை குறைந்த பட்சம் ரூ20.00 ஆகிறது.அம்மை போன்று தாக்கப்பட்டுள்ள ஏழை நோயாளிகளுக்கு ஒரு இளநீர் வாங்கி தர முடியவில்லை. அம்மனுக்கு (கற்சிலைக்கு) இளநீர் ஊற்றுவதால் யாருக்கு பயன்?
அழும் குழந்தைக்கு பால் கிடைக்காதபோது அதை கற்சிலைக்கு ஊற்றினால் யாருக்கு என்ன பயன் விளையப்போகிறது?

வெய்யிலாளிகளின் வியர்வையில் உழைத்து நிழாலாளிகள் குண்டி கொழுக்கட்டும்.தவறில்லை. ஆனால் கடவுள் மனம் குளிரட்டும் என இளநீர் அபிசேகம் செய்யும் நிழலாளிகள் அம்மனிடம் வாங்கிக்கொண்டது நீரிழிவு நோயைத்தானே?
சுயமாக இவன் சிந்திப்பது எப்போது?