Sunday, July 8, 2012

40-;நீதிபதிகளின் மறுமுகங்கள்


                               40-நீதிபதிகளின் மறுமுகங்கள்
மனிதன் உருவாக்கிய மதங்களில்(religions) மயங்கியவன் இன்றளவும் தெளிவு பெறவில்லை.
மதக்கொள்கைக்கு உடன் பாடு இல்லாதவர்களை அந்நியராக நினைத்து சமுதாயத்தில் செயல் இழக்கச் செய்வதில் மனிதனுக்கு நிகர் மனிதனே.

1-பாகித்தானில் குரானை அவமதித்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்(இன்றய 06.07.2012 தேதியிட்ட தினத்தந்தி) ஊர்மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு  குரானை அவமதித்தவரை வெளியே இழுத்துவந்து பெட்டரோல் ஊற்றி கொளுத்தி சாகடித்து விட்டனர்.

2-கிருட்னகிரி(தர்மபுரி) அருகே கோயில் திருவிழாவில் ஆன்மீகத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தவரை துப்பாக்கியால் சுட்டும் தலையை வெறிதீர தனியே வெட்டி வீசினர்,ஆன்மீகவாதிகள்

3-காவேரிப்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் பெரியார் சிலை நிறுவுவதில் உள்ளூர் ஆன்மீக வாதிகளுக்கும் (பாரதீய சனதா கட்சி)பெரியார் ஆதரவாளருக்கும் நீதி மன்ற வழக்கு நிலுவையிலிருந்து நேற்று (05.07.2012)தீர்ப்பளிக்கப்பட்டது. ‘பள்ளி வளாகத்தில் பெரியார் சிலையை நிறுவுவதால் பள்ளி மாணவர்கள் நாத்திக வாதியாக அதாவது கடவுள் மறுப்பாளராக மாறிவிடுவர் என அஞ்சத்தேவையில்லை’ என தீர்ப்பு சொல்லி சிலையை நிறுவலாம் அனுமதி அளித்தது.
 மனிதன் காட்டுவாசியாக வாழ்ந்த காலந்தொட்டு , இயற்கை சீற்றங்களுக்கு பயந்து தான் உயிர்வாழ நடத்திய சடங்குகளை, இன்றுவரை மதவாதிகள் தன் சுய லாபத்திற்காக விளம்பரப்படுத்தி சிறிதும் தொய்வில்லாமல்  பாமரனை மதி மயக்கி வைத்துள்ளனர்.
இதன் விளைவால் நிகழ்வதுதான் மேலே குறிப்பிடப்பட்ட 3 நிகழ்ச்சிகள். தங்களுடைய பாதுகாப்பிற்கும் எதிர்கால வாழ்வாதாரங்களைப் பற்றியும்  சிறிதும் கவலைப்படாத காட்டுமிராண்டி ஆன்மீக வாதிகளால்(பாமரவாசிகள்) தான் மனித சமுதாயத்திற்கு அழிவைத்தவிர வேறு என்ன நன்மை ஏற்படப்போகிறது?

இதற்கெல்லாம் காரணம் நாட்டின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் ஆட்சியாளர்கள்தானே?
ஆன்மீகம் மனிதநேயமற்றது. பகுத்தறிவாதம் மட்டுமே மனித வளம் பெறுக வழிகாட்டும்.

அப்பொழுதுகூட நாத்திகவாதிகளால் மனித சமுதாயத்திற்கு என்ன தீமை விளையும் ?என அந்த தீர்ப்பு ஏன் அமையவில்லை? நீதிபதியும் ஆன்மீக வம்சத்திலிருந்து வந்தவர்தானே?
நீதி பதிகளின் மறுமுகங்களை காண்பீர்! 

           


Monday, July 2, 2012

39-பக்தர்களின் மறுமுகங்கள்


                               39-பக்தர்களின் மறுமுகங்கள்

இன்றய செய்தி தாளில் (30.06.2012 தேதியிட்ட தினத்தந்தி) திருப்பதியில்  1¼ லட்சம் மது புட்டிகளும் மக்களின் உணவு பொருட்களான கோழி மற்றும்  ஆட்டிறைச்சியையும் அழித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என அதே செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது மேல் திருப்பதி(திருமலை) கடவுள் வாழும் இடமாம். அங்கே மதுவுக்கும் இறைச்சிக்கும் இடமில்லையாம்.
அப்படியானால் அங்கே மனிதர்கள் வாழ்வதே இல்லையா? மனிதன் உண்ணும் உணவுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு ?மனிதன் தாவரங்களையோ அல்லது தாவர தானியங்களையோ மட்டுமே உயிர்வாழ முடியாதென்பது நிருபிக்கப்பட்ட உண்மை.
 மதுவோடு மாமிசம் உண்பதால் மனிதன் அறவழி தவறிய செயல்களில் ஈடுபடுவான் என்பது உண்மைதான். அதற்காக பயணம் செய்யும் காலங்களில் மட்டும் மதுவை தடை செய்யலாம் .இன்றியமையாத மாமிச உணவை தடை செய்வது என்பது அரசாங்கம்  மனித உரிமையில் தலையிடும்  செயலாகும். 
விலங்கினங்களிலும் மனிதரிலும் சைவ உணவு விரும்பிகள் உண்டு .ஆனால் அவைகள் யாவும் அசைவ உணவான தன் தாய் இனத்தின் ரத்தத்தை(பால்) உறிஞ்சி வளர்கின்றன. வளர்ந்த பின் ஆடு மாடுகளும் சில மனித இனங்களும் தாவர உணவுக்கு மாறுகின்றன.

அப்பொழுது கூட வளர்ந்த மனிதர்கள் மாட்டுப்பாலையும் ஆட்டுப்பாலையும் அதன் விளைபொருட்களான தயிர் மற்றும் நெய் போன்ற வற்றை இறக்கும் வரைகூட விடுவதில்லை. அந்த வகையில் சைவ விலங்குகளை விட சைவ மனிதன் மோசமானவன்.

உலகில் சுமார் 700 கோடி மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகம் சைவ உணவு உண்டு வாழும் மக்கள்   இந்தியாவில் உள்ளனர்.(சுமார் 20 கோடி மக்கள்)

சுமார் 680 கோடி மக்கள் அசைவ உணவு பிரியர்களே. இவர்களில் 300 கோடி மக்கள்(கிறித்துவம் மற்றும் இசுலாம் மதம்) தினமும் யேசு மற்றும் அல்லா போன்ற தெய்வங்களை வணங்குபவர்கள்.மற்ற 380  கோடி மக்களில் 100 கோடிக்குமேல் இந்துக்கள்(இந்தியா மற்றும் நேபாளம்) அசைவ உணவு விரும்பிகள்.மீதமுள்ள 280 கோடி மக்கள் புத்த மத மற்றும் மாறுபட்ட இந்துக்களாக சைனா,சப்பான்,மலேசியா,சிங்கப்பூர்,கம்போடியா வியட்நாம்,தாய்லாந்து,இலங்கை,மியான்மர் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர் .

இவர்கள் யாவருமே அசைவ உணவு பிரியர்கள் தான் முக்காலமும் கடவுள் பக்தி கொண்டவர்கள். அசைவ உணவு உண்ணும் மக்களுக்கு எல்லாம் ஆண்டவன் அருள் கிடைக்காதா?என்னதான் தங்களுக்கு இறைவன் அருள் என்றும் உள்ளது என நம்பி வாழ்ந்தாலும்  வழக்கமான இயற்கை சீற்றங்களான பூகம்பம்,சுனாமி,இடி,மின்னல்,வெள்ளச்சீற்றம், மற்றும் சாலை,கடல் மற்றும் வானூர்தி விபத்துக்கள் (என்னதான் மனம் உருகி இறைவனை வேண்டினாலும்) போன்றவைகளிலிருந்து மனிதன் தப்ப முடியவில்லை.உலகில் மனிதனின் சராசரி வாழ்நாளான 100 ஆண்டுகளை முழுவதுமாக நிம்மதியாக முடிக்க முடியவதில்லை.
                            
உயிர்வாழ உணவு உண்ண வேண்டும்.என்னதான் உண்ணா நோன்பு இருந்தாலும் மீண்டும் உணவு உண்ண வேண்டும்.இதில் சைவமா இருந்தால் என்ன? அசைவமாயிருந்தால் என்ன? எல்லாருக்கும் முடிவு ஒன்றுதானே?

உலக மக்கள் இப்படி இருக்க திருப்பதியில்  வாழும் கடவுளுக்கு பாலாபிஷேகம்(அசைவம்)மட்டும் பிடிக்குமாம்.   திருமலையில் வாழும் மக்களுக்கு இறைச்சி உணவு பிடிக்காது என்பது யார் கண்டுபிடித்த உண்மை? திருமலையில் உணவைத்தேடும் பக்தர்களுக்கு (மக்களுக்கு நீரிழிவு நோயைத் தரக்கூடிய)சைவ உணவை திணிப்பது மனித உரிமை மீறல் அல்லவா? இவையாவும்(இறைச்சி உணவை அழிப்பது) இறைவனின் இடைத்தரகர்களான மதவாதிகளின்  ஆர்பாட்டம் அல்லவா?கடவுள் பக்தர்களின்(மத வாதிகளின் ) மறுமுகங்களை காண்பீர்!