38 தமிழரின் மறுமுகங்கள்
ஒவ்வொரு இனமும் அதன் குணம் சார்ந்த
அதாவது ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடக்கியாள நினைக்கும் மிருக குணம் நிறைந்த
மக்கள் இனம் தான் அதிகம்.
மனிதனை மனிதன் அடக்கியாள உருவாக்கிய
கருவி தான் வே(பே)தங்கள்.
எத்தனை மதங்கள்? எத்தனை வே(பே)தங்கள்-வேறுபாடுகள்? இதோ
1-
இந்து மதம் உருவாக்கியதுதான் பகவத் கீதை
கடவுள் மனிதனுக்கு அறிவுருத்திய
அறிவுரைகள் அடங்கிய நூல்.அதாவது கிருட்ண கடவுள் அவதாரம் அர்ச்சுனன் என்னும்
அசாதாரண மனிதனுக்கு போர்களத்தில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பை(வாழ்வியல்
தத்துவம்) நூல் வடிவமாக மக்களுக்கு தந்தது வியாசமுனிவர்.(3000 ம் ஆண்டுகளுக்கு முன்)
2-இந்து மதத்திலிருந்து பகுத்தறிவாத
இயக்கம், மதமாக மாறிப்போன புத்த மற்றும் சைன மதங்களின்- போதனைகள் அடங்கிய வேத நூல்கள்(2500 ஆண்டுகளுக்கு முன்)
பராமரிக்கப்படவில்லை எனினும் சைன
மதத்தில் மனிதன் மகிழ்ச்சியாகவும் சக மனிதனை(உயிரினங்களை) துன்ப படுத்தாமல்
அறவழி நிலையை கடைபிடிக்க மக்களுக்கு
போதிக்கப்பட்டன.
3-கடவுள் அனுப்பிய தூதராக(யாரும் கடவுளை
கண்டதாக பைபிளில் கூறப்படவில்லை) மண்ணில் தோன்றிய யேசுவின் அறிவுரைகளினால்
வெகுண்டெழுந்த மன்னர்களின் கோபத்திற்க்கு ஆளாகி சிலுவையில் அறையப்பட்டார்.மக்களின்
அனுதாபத்தை பெற்ற யேசு மீண்டும் உயிர்த்தெழுந்ததாக கூறப்படும் 10 கட்டளைகளின்(மனிதர்களின் வாழ்வியல் தத்துவம்)
விரிவாக்கம் தான் பைபிள் (2000 ம்
ஆண்டுகளுக்கு முன்)
4- ஆனால் கடவுளே தனக்கு
நேரில்(கனவில்?)தோன்றி அருளப்பட்டது தான் குரான்
எனும் மனித வாழ்க்கை வழி காட்டி நூல் என முகமது
நபி அவர்கள் மக்களை நம்பச் செய்தார். (1500 ஆண்டுகளுக்கு முன்)
5-அறிவியல் முன்னேற்றம் அடைந்த
காலங்களில் இந்தியாவில் உருவான சீக்கிய மதம்,அறிவியல் ரீதியாக மக்களை அடக்கியாள
முடியாது என அறிவியலை புறந்தள்ளி மூட
நம்பிக்கைகள் கொண்ட புதிய மதம் இது.(400 ஆண்டுகள் முந்தையது) இதன் மத நூல் கிரந்தம் என அழைக்கப்படுகிறது.
சைன
மதம்
தவிர அனைத்து மத மக்களும் அறவழி தவறிய செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள
முனைப்பு காட்டுகின்றன.(மனித வதை,மிருக வதை,கோபம்,களவு,மனித மற்றும் மிருக கொலை
போன்ற கொடிய அறவழி தவறிய செயல்)
அதாவது தனக்காக ஒரு வாழ்க்கை பிறருக்காக
ஒரு வாழ்க்கை என இரட்டை நிலைதான் இப்பொழுது பெரும்பாலான மதம் சார்ந்த மக்களின்
வாழ்க்கையாகிவிட்டது.தன்னலம் ஒன்றே இந்த அனைத்து
மத மக்களின் கொள்கையாகிவிட்டது .
மத நூல் வழிகாட்டும் அறிவரைகளை யாரும்
கடைபிடிப்பதே இல்லை; மத குருமார்கள் உட்பட. இதனால்தான் போலி சாமியார்கள்
பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.
தற்கால சைன மதத்தவரும் அறவழி தவறிய
வட்டிக்கடை, மற்றும் அதர்ம வியாபார உத்திகளை கையாளுகின்றனர்.இவர்கள் வெய்யிலில்
உழைக்க விரும்புவதே இல்லை. (உழைக்காமல் பிழைக்கும் யுக்தி) பின் எப்படி தர்ம
சிந்தனை தோன்றும்?
மனிதனின்
கற்பனா சக்தியில் உருவானதுதான் கடவுள் கொள்கை.கற்பனையும் உண்மைக்கு புறம்பான
கட்டுக்கதைகள் நிறைந்த, நிருபிக்க முடியாத, சொல்லாற்றல்
பெற்றதுதான்(enchanting words or mantras) புராணக்கதைகள். நடந்த உண்மை
நிகழ்ச்சிகளாக புராணத்தில் கூறப்படும் செய்திகள் யாவும் அறிவியல் பூர்வமாக
மாற்றமுடியாதா ? என மனிதனை ஏங்க வைக்கும் கற்பனை கதைகள். புராணக்கதைகள் எல்லா மதங்களிலும் உலகம் முழுக்க
பரவியுள்ளது.
மதமும்
அறிவியலும் ஒன்றாக ஒத்து இயங்காது .அறிவியல் பூர்வமாக வாழ்க்கையை அமைத்துக்
கொள்ள வேண்டும், என உலகில் யாரும் கவலைப்பட்டுக் கொள்ளவதில்லை. இதற்கு காரணம்
நாட்டின் ஆட்சியாளர்களே இந்த சிந்தனையில் அமைவதில்லை.
அப்படி
ஒரு சிந்தனையாளன் நாட்டில் உருவனால் அவனுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு சரி,அவனுடைய புரட்சிகரமான
கொள்கைகளை வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சிப்பதோ அல்லது முயற்சிக்க வைப்பதோ
முனைப்பு கட்டுவதில்லை. பெரியாரின் பிறந்த நாளை கொண்டாடுவதும் அவர் இறந்த நாளை
நினைவு கூறுவதும் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்ச்சிகள்.ஆனால் அவருடைய பகுத்தறிவாத
சிந்தனைகளை பள்ளி மற்றும் கல்லுரி பாடத்திட்டத்தில் சேர்க்க திராவிட கட்சி ஆட்சி
காலத்தில் அதன் தலைவர்கள் ஏனோ முயற்சிக்கவில்லை.
அதைப்போலவே புரட்சிக்கவி பாரதிதாசனின்
பிறந்த நாளும் கொண்டாடப்படுகின்றன. புரட்சிக்கவி
இறந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவருடைய பகுத்தறிவாத கவிதைகளை,பாடல்களை பள்ளி
கல்வி பாடத்திட்டத்தில்,கல்லுரி பாடத்திட்டத்தில் இதுவரை ஏன் சேர்க்கவில்லை? திராவிடக்கட்சிகள்
அவருக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக அவருடைய கொள்கைகளை மாணவர்கள் மத்தியில் பரப்ப
ஏன் முயற்சிக்கவில்லை?
பொய்யும்
கற்பனையும் நிறைந்ததுதான் சமய இலக்கியங்கள்.சமய இலக்கியங்களை பய
பக்தியுடன் போற்றி பாதுகாக்கும் குணம் கொண்டவர்களாக தமிழர்களை மாற்றிவிட்டனர்.
மக்களை தற்சிந்தனையாளராக மாற்ற எந்த
அரசியல் கட்சியும், ஆட்சியாளரும் விரும்புவதில்லை. தமிழகத்தை ஆண்ட ஆளப்போகும்,ஆளத்துடிக்கும்
அத்தனை கட்சிகளும் தமிழர்களை திராவிட இனங்களில் ஒன்றாக நினைக்கிறது. தமிழ்
நாட்டில் தனியாக தமிழர்களுக்கு என்று தனி இட ஒதிக்கீடு வழங்க முடியாது என்கிற
எண்ணத்தில் செயல்படுகின்றன
.தமிழகத்தில்
1-முதல் தர குடிமக்களாக தெலுங்கர்கள்(நாயுடு,கம்ம
நாயுடு,நாயக்கர்)உள்ளனர்.தமிழகத்தின் பெரும் பணக்காரர்களாக உள்ளனர்,சுமார் 400
பொறியியல் கல்லுரிகளும் 10க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லுரிகளும்,பெரும் நில
உடமையாளர்களாகவும் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.
2- அடுத்து வட இந்தியாவைச்சார்ந்த சைன சமுகத்தினர் மற்றும் ராசபுத்திர ர்கள்(மார்வாரிகள்) -இவர்கள் தமிழக கிராமபுர மக்களின் நம்பிக்கைகளான தாலி மற்றும் பித்தளை பாத்திரங்களை அடகுவைத்து அதிக வட்டிக்கு பணத்தை கொடுத்து அவைகளை மீட்டெடுக்க ஏழைகளின் வியர்வை துளிகளை தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு அடித்தளமாக பயன்படுத்துவதை இன்றளவும் காணலாம் - இவர்கள் தமிழகத்தின் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்கின்றனர்.
3-அடுத்து மலயாளிகள்(நாயர்,மேனன் போன்றோர்) தமிழகம் முழுக்க தேநீர்
மற்றும் உணவு விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் வைத்து மூன்றாம் தர குடிமக்களாக
வாழ்கின்றனர்
4- அடுத்து கன்னடியர்கள்(அய்யங்கார்,கவுடா,லிங்காயத் போன்றோர்),இவர்கள் உடுப்பி
உணவகங்கள் ,பேக்கரிகள் நடத்தி நான்காம் தர குடிமக்களாக வாழ்கின்றனர்.
(தமிழகத்தில் பணம் கொழிக்கும் தொழிலான
சினிமா உலகத்தை சார்ந்தவர்கள் கூட மேலே சொன்ன நான்கு இனத்தவர்தான், திரை இசை
பின்னணி குரலில் பாட கூட ஒரு தமிழனும் இதுவரை பிறக்கவில்லை)
தமிழகத்தின் நிரந்தர ஆட்சியாளர்களாக I.A.S,I.P.S போன்ற ஆட்சியாளர்களாக இருப்பவர்கள் கூட தெலுங்கு,மலயாளம் ,கன்னடம்,மற்றும் ஒடிசா போன்ற வடமாநிலத்தவராகவே உள்ளனர்..இதுதான் கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடந்துவரும் -நடக்கும் ஆட்சியாகும் .இதனல்தான் இதுவரை தமிழில் ஒரு அரசு ஆணை கூட வெளியிட முடியவில்லை .தப்பித்தவறி ஒரு தமிழன் அமைச்சராகிவிட்டால் அவருடைய தேவைகளை மட்டும் அறிந்து அவருக்குமட்டும் பயன் அளிக்கும் விதமாக நடந்துகொண்டு, அரசு பணிகளை தங்கள் இன மக்களுக்கு அளித்துவிடுவர். .தமிழருக்கு கடைநிலை பணிகளான வாகன ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிகள் கிடைக்கச்செய்வர். எல்லாம் பணம் படுத்தும் பாடு.ஊழல் அரசு.
5- அடுத்து நம் தமிழர்கள் வெய்யிலில்
வயல் வெளியில் உழைக்கும் கடும் உழைப்பாளிகள். கூழுக்கும் குடிக்கும் ஆசைபட்டு மற்ற நான்கு இனங்கள் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கு ஒட்டு போடுவார்கள்.இவர்களை அய்ந்தாம் தர மக்கள் என்று அழைப்பதில் என்ன தவறு? தமிழர்களுக்கு மொழி உணர்வும் இல்லை, சாதிய
உணர்வும் இல்லை, என்பதை தமிழ் நாட்டில் வாழும் மற்ற இனத்தினர் நன்கு உணர்ந்துள்ளனர்.
இதற்கு உதாரணமாக கூறவேண்டுமானால் 2000-ம்
ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் ராவண காவியமே(ராமாயணம்)இதற்கு சாட்சி..அதில்
தமிழன் (ராவணன்) குடும்பத்தில் தோன்றிய(உடன் பிறந்த) ஒரு இனத்துரோகியைப் பற்றி அப்பொழுதே விபிஷணன் என்கிற கதாபாத்திரத்தின்
மூலம் அந்த கதையில் விவரிக்கப்பட்டுள்ளது. இன்றளவும்
தமிழினத்தின் நிலை இதுவே. அதாவது ஒரு இனத்து மக்கள் ஓரணியில்(ஒரு கட்சியில்) இல்லை
என்பதற்கு இன்றய அரசியல் தன்மை எடுத்துக்காட்டுகளாக உள்ளது. இதைப்பறியெல்லாம் நினைத்து
வெட்கி தலைகுனியும் நிலை எப்பொழுது இந்த தமிழனுக்கு ஏற்படும்? அந்த நாளே தமிழன்
தன்னிலை உணர்ந்த நாள்.
தமிழர்களுக்கு மொழி உணர்வு
இருந்திருந்தால், ஆந்திரம்,கேரளம்,மற்றும் கன்னடம் போன்று தனித்துவமாக மொழி
சார்ந்த மாநிலம் அமைத்திருப்பார்கள். தமிழ்
பேசும் இனங்களில் பல சாதிய அமைப்புகள் உள்ளன. ஒரு சாதிக்கும் தன் இனத்தோடு ஒத்து
வாழ தெரியவில்லை.
தமிழ் பேசுபவர்கள் பெரும்பாலும் ஏழைகளே.
இவர்களில்- அவர் வாழும் ஊர்களில் யாரவது ஒருவர் சுய முயற்சியாலோ அல்லது பிறர்
உதவியாலோ பொருளாதாரத்தில் முன்னேறினால் அவரை தன் இனத்திலிருந்து ஒதுக்கிவிடுவர்.
நேற்றுவரை நம்மோடு பசியும் பட்டினியுமாய் இருந்தவனுக்கு எப்படி பணக்காரனாக
மாறினான்.இது நியாய வழியில் வந்ததாக இருக்காது,என பழித்து கூறுவர்.இதுவே தமிழரை
நண்டு இனத்திற்கு ஒப்பிடுவர், மற்ற முன்னேறிய இனத்தவர்.
தமிழர்கள் சங்கம் வைத்து இலக்கியங்கள்
வளர்த்த காலங்களில் (சுமார் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்) கவிதைகளில் உணர்வுகளை
பறிமாறிக்கொண்டனர்.அத்தகைய மொழிக்கு வசியம் இருந்தது அதாவது மந்திர சக்தி இருந்தது
.பின்பு வந்த ஆரியர்கள், ‘தமிழ் நீச மொழி அதில் மந்திர சக்தி இல்லை’ என தன் மொழியை மட்டுமல்ல இனத்தையும் பழித்ததை உணர முடியாமல் போனது எப்படி? என இன்றுவரை
தெரியவில்லை. எப்படி சுரணையற்ற தமிழராக
மாறினார்கள் ? சமஸ்கிரதம் தேவ மொழி என்று கூறியதை நம்மவர்கள் எப்படி நம்பினர் என
இன்று வரை தெரியவில்லை.
இன்றும் திருமணங்களில் புரியாத சமஸ்கிரதத்தை
ஓதுவதால் மணவாழ்க்கையில் அற்புதங்கள் நிகழும் என பாமரன் மட்டுமல்ல எம்.ஏ.எம்.பில்-பி.எச்.டி
படித்தவர் மட்டுமல்ல உயர் அறிவியல் பட்டதாரிகளும்,பொறியியல் வல்லுநர் பட்டம்
பெற்றவர்களும் அதை நம்புகிறார் எனில், ஆட்சியாளருக்கு மட்டும்
எப்படி சிந்தனை தோன்றும்?
முற்கால தமிழக மன்னர்கள் தற்ச்சிந்தனை
அற்றவர்களாக இருந்தனர். சமய சடங்குகளில் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். மக்கள்
வரிப்பணத்தில் உயர்ந்த கோபுரங்களை கொண்ட
சைவ மற்றும் வைணவத்தலங்களை அதிகம் கட்டினர்.
குருகுலம் போன்ற பள்ளிக்கூடங்களை
நகரங்களில் அமைத்தனர். வெய்யிலில் உழைக்கும் தமிழர்களுக்கு பள்ளிக்கூடம்
தேவையில்லை என மன்னரின் அவையில் தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக படிப்பறிவே
இல்லாத கிராமத் தமிழ் சமுதாயம் உருவாகியது.
தமிழகத்தின்
நீர்நிலை பிடிப்புள்ள வளமான நிலங்களை ஆந்திரத்தின் தெலுங்கர்கள் கைப்பற்றினர்.
தமிழர்கள் மலையும் மலைச்சார்ந்த அல்லது கடலும் கடல்சார்ந்த இடங்களில் குடியேறினர்.
தமிழர்கள் பங்காளிகளை பகையாளிகளாக்கி
வீரத்தை நிலைநாட்டினர்.இனப்பெருக்கம் செய்வது மட்டுமே இவர்கள் பொழுதுபோக்கு.
தங்களுக்குப் பின்னும் தற்சிந்தனையற்ற
வாரிசுகள் உருவாவதையே விரும்பினர்.
இதனாலே முன்னோர் கடைபிடித்த சடங்குகளான
மூட நம்பிக்கைகளை இன்றளவும் போற்றி பாதுகாக்கின்றனர்.தப்பித்தவறி தானாக படித்து
தெளிவடைந்தவனை கூட ‘படித்த முட்டாள்’ என பட்டம் கொடுத்து மகிழ்கின்றனர்.
சமீபத்தில் நான் ஒரு
நாள்காட்டி(காலண்டர்) வடிவமைக்க அச்சகத்திற்கு சென்றேன். ராகுகாலம் எம கண்டம்
நல்லநாள் கெட்ட நாள் குறிக்கப்படாத நாள்காட்டி அச்சடிக்க விரும்பினேன். அப்படி
நாள்காட்டியே அச்சடிக்க முடியாது என அச்சகத்தார் சொல்லிவிட்டனர். ‘அப்படி ஒரு
நாள்காட்டி அச்சடிக்க விரும்பினால் ரூ.5000.00லிருந்து 10000.00 வரை செலவாகும்.
அதுவும் அதை நீங்களே வைத்துக் கொள்ள வேண்டியதுதான்,அப்படி ஒரு நாள்காட்டியை
நாங்கள் வணிகத்தனமாக வியாபாரம் செய்ய இயலாது.’ என கூறிவிட்டனர். அப்படியும் ஒரு
அச்சக நண்பர் ‘உங்களுக்காக ஒரு இங்லீசு நாள்காட்டி வலை தளத்தின் மூலம் பதிவிறக்கம்
செய்து 200 நாள்காட்டி செய்து தருகிறேன்’ எனக் கூறினார்.
அப்படி என் செலவில் அச்சடித்த நாள்
காட்டியை நான் அன்றாடம் சந்திக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விநியோகம்
செய்தேன். எனக்கு நன்கு பழக்கமான மளிகை கடைக்காரர் ,நான் தினமும் பத்திரிக்கை
வாங்கும் தேநீர் கடைக்காரர் இங்கெல்லாம், ‘நீங்கள் பஞ்சாங்கம் காட்டும் நாட்
காட்டி பக்கத்தில் இதையும் மாட்டவேண்டும்’ என கேட்டுக்கொண்டேன்.
மளிகைகடைகாரர் வன்பொருள் கடைக்காரர்
இவர்களெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டனர். தேநீர் கடைக்காரர் வாங்கி வைத்துக்கொண்டு
இதை மாட்ட இடமில்லை என கூறிவந்தார்.
நானே அவர் கடையில் இடம் உருவாக்கி மாட்ட
வைத்தேன். சனவரி மாதம் மாட்டிய நாள்காட்டி மார்ச் வரை மாற்றவே இல்லை அவர்கடையில் மற்ற
நாள்காட்டியேல்லாம் மாதா மாதம் சரியாக மாற்றப்பட்டு வந்தது ஆனால் இந்த பகுத்தறிவு
நாள்காட்டியை தொடவே இல்லை.சில நாட்களில் அந்த நாள்காட்டி தாளை கைதுடைக்க
வைத்துக்கொண்டனர்.
இன்னும் சிலர் நான் கொடுத்த நாள்
காட்டியை சுருட்டி ஒரு மூலையில் வைத்தனர்.மெத்த படித்த தமிழறிஞர் கூட அதை சுருட்டி
ஒரு ஓரம் வைத்துவிட்டார் அவர் அலுவலகத்தில் நாலைந்து நாள் காட்டி
வைத்துள்ளார்.இந்த பகுத்தறிவு காலண்டரை மாட்ட இடமில்லையாம்.'பகுத்தறிவாளரை பார்ப்பதே பாவம்,அவரோடு பழகுவதே துஷ்ட்ட சகவாசம்' என நினைக்கும் அளவுக்கு தமிழர்களை மாற்றிவிட்டனர்
இத்தனைக்கும் இந்த மூதறிஞர் எனது ஏழாம்
அறிவு இயக்கம் மூலம், நான் எழுதிய நூலை தலைமையேற்று நடத்தி வெளியிட அரும்பாடு
பட்டவர்.தினமும் நெற்றியில் குங்குமமத்தையும் சாம்பலையும் பூசாமல் பணிக்கு வரமாட்டார். ஆண்டுதோறும் புரட்சிக்கவி பாரதிதாசனுக்கு விழா எடுப்பார்.
அன்றய தினம் பாரதிதாசனுக்கு விழா எடுத்து
பாராட்டியவர்கள் அனைவருமே நெற்றியில் பட்டையும் குங்குமமும் வைத்துக்கொண்டு
பாரதிதாசனை புகழ்ந்தார்கள்.
அவருடைய கொள்கைகளை வாழ்க்கையில் யாரும்
பயன்படுத்த முன் வரவில்லை.அவருக்கு பாராட்டு எதற்கு? அதுவும் செத்தவருக்கு?
எனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.
‘புரட்சி கவியின் பகுத்தறிவு கொள்கைகளை இன்றுவரை யாரும் மாணவர் உணரும் விதத்தில்
பாடத்திட்டத்தில் சேர்க்க வில்லை.அதை ஒரு தவறாக இதுவரை யாரும் உணர வில்லை பின்
எப்படி தமிழ் சமுதாயம் தன் மானமுள்ள, சுய மரியாதையுள்ள சமுகமாக மாறும் ?’ என நான்
வினவினேன். அதோடு முடிந்தது அந்த விழா,மீண்டும் அடுத்த ஆண்டு புரட்சிக்கவிக்கு
பிறந்த நாள் கொண்டாட.இப்படி இருந்தால் அடிமைத் தமிழருக்கு எப்பொழுது விடிவுகாலம்
வரும்?
புலமை என்றாலே பொய் தான். இதில் புரட்சிக்கு
இடமளித்து ஒரு கவி உருவாகியுள்ளார் எனில் அது நம் தமிழ் மண்ணுக்கு கிடைத்த பெருமை.
இவர் எழுதிய புரட்சிக்கருத்தை சீந்துவார் இன்றுவரை இல்லை.
அவர் பெற்ற மகனே இதற்குச் சான்று.
அறிவாளிகள் வயிற்றில் முட்டாட்கள்
பிறப்பார்கள்.முட்டாட்கள் வயிற்றில் அறிவாளிகள் பிறப்பர். இது காலத்தின்
சான்று.
இறந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது
மீண்டும் ஒரு புரட்சிக்கவி எப்பொழுது பிறப்பார் ?
எத்தனை புரட்சிக்கவிகள் தினமும்
பிறந்தாலும் அடிமைத் தமிழனின் ஆளுமை குணம் எப்பொழுது உயரும்?எப்படி உயரும்?
படித்தால் தானே! படித்தும், படித்ததை
அறிவியல் பூர்வமாக சிந்தனை செய்தால்தானே !
காண்பீர் நம் தமிழரின் மறுமுகங்களை !