Sunday, June 8, 2014

கடவுளிடம் மழை வேண்டி 10008 தேங்காய் உடைப்பு,மழை பொழிந்ததா?


   கடவுளிடம் மழை வேன்டி 10008 தேங்காய் உடைப்பு,மழை பொழிந்ததா?

 

உலகில் உள்ள எல்லா மதங்களின் கடவுளையும் எப்படி வணங்க வேண்டும் என அந்தந்த வேத நூல்களில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.எந்தக் கடவுளும் தனக்கு உணவுப் பொருளை வீணாக்கி அல்லது உணவுப்பொருளை அழித்து கோரிக்கை வைக்கவேண்டும் என எழுதப்படவில்லை அல்லது சொல்லப்படவில்லை.   இந்து மதத்தில்மட்டும் கடவுளை எப்படி பூசிக்க வேண்டும் என உப நிடதங்களில் விளக்கப்பட்டுள்ளது.உலகில் கடவுள் வழிபடு கொள்கை ஆரியர்களால் தான் வகுக்கப்பட்டது.ஆரம்பக்கட்டத்தில் கடவுளை அருவமான (உருவமற்ற நிலை) நிலையில் தான் வழிப்பட்டார்கள்.இந்நிலையில் உழைப்பாளிகளை ஈடு படுத்தமுடியவில்லை.உழைப்பாளிகளை கடவுள் வழிபடு கொள்கைக்கு(உருவ வழிபாடு) உட்படுத்தினால் தான் கடவுள் வழி படு கொள்கையை உருவாக்கியவர்கள் அதாவது நிழலாளிகள் சுக மாக வாழ முடியும் எனும் சூட்சமத்தை உழைப்பாளிகள் உணர முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளும் வரைமுறைகளும் வகுக்கப்பட்டன.

 

வேதங்களையும் உப நிடதங்களையும் உழைப்பாளிகள் படிப்பது பாவம் என அறிவுறுத்தப்பட்டது.அதனால் உழைப்பாளிகளுக்கு படிக்கும் எண்ணமே வரவில்லை.அந்நாளில் வயிற்று உணவுக்கே அல்லல் பட்ட பிராமணர்கள் காடுகளில் கிடைக்கும் பழங்களையும் காய் களையுமே உண்டு வாழ்ந்தனர்.இத்தகைய உணவு பழக்கத்தால் உழைப்பாளிகள் போல் இனப்பெறுக்க விளையாட்டுகளில் ஈடு பட முடியாதது ஒரு பெரிய குற்ற உணர்வாகவே பிராமணர்கள் உணர்ந்தார்கள்.

 

பசுவின் பாலை அருந்தி மாட்டிறச்சியை உண்டு வந்த ஆரியர்கள் பசுவின் நெய்யை உணவுப்பொருளோடு உண்டால் உடலில் மிருக பலம் கிடைக்கும் என கணக்கிட்டனர்.கடவுளுக்கு நெய்வேத்தியம் செய்தால் கண்ணனின் அருள் கிடைக்கும் என ஆயர் குல மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.எனவே மிகச்சிறந்த ஊட்டச்சத்தான பசுவின் நெய் பிராமணர்கள் இல்லந்தேடி வர ஆரம்பித்தது.இன்றும் வருகிறது.    

 

காலப்போக்கில் ஆயர் குல மக்களுக்கும் வர்மாக்களுக்கும் நாம் கொடுக்கும் உணவுப்பொருள் கடவுள் எப்படி உண்கிறார்  என்பதை கண்ணால் காண வேண்டும் என ஆவல் மேலிட்டது. இந்த சந்தேகத்தை எப்படி போக்குவது என பிராமணர்கள் ஆய்ந்தனர். அப்படிசிந்தனையில் உருவானதுதான் கடவுள் உருவ வழிபாடு. இனி பிரச்சினைகளை வெகு சுலபமாக சமாளித்து விடலாம் என கணக்குப்போட்டனர் . நெய்,காய் கனிகளை கடவுள் சிலைமுன் படைத்தால் அவர் பசி அடங்கி விடும் எனும் கதையை வெய்யிலாளிகளை நம்ப வைத்தனர் ,அது இன்றும் தொடர்கிறது உழைக்காமலேயே பிராமணர்கள் வயிற்றை நிரப்ப இதுதானே சிறந்த வழி!

 

மேலும் பிராமணர்களை கேட்காமலே உழைப்பாளிகளே தங்கள் விளைவிக்கும் உணவு பொருளை தாங்களே சிலையை செய்து அதற்கு தேங்காய் உடைத்தல் பலகாரம் படைத்தல் பாலபிசேகம் செய்தல் போன்ற அறிவியலுக்கு அப்பாற்பட்ட,உணவை சீரழிக்கும்,சட்டத்துக்கு புறம்பான தண்டனைக்குறிய செயல்களை செய்கின்றனர் .உணவுப்பாதுகாப்பு தடைச்சட்டத்தின் மூலம் இத்தகைய செயல்களை தடுக்கலாம்.ஆனால் செய்யப்படுவது இல்லை ஏன்?

 

இன்றய செய்தியில் (தினமனி,08.06.2014)காரைக்கால் அருகே ஒருவர்(பக்தர்?) 10,008 தேங்காய்களை மழை வேண்டி பிரார்த்தனை செய்து உடைத்துள்ளார் ,எவ்வளவு பெரிய உணவுப்பொருளை வீணாக்கிய அந்த நபரை உணவுப்பாதுகாப்புச் சடேடத்தின் மூலம் கைது செய்தால் என்னவாம்?