23.02.2014 அன்று திருவள்ளூரில் பெரியார் விருது பெற்ற எழுத்தாளர் தமிழ் மகனுக்கு, ஏழாம் அறிவு இயக்க நிறுவனர் படைவீடு திருவேங்கடம் வாசித்து அளித்த
வரவேற்புரை
நமது தமிழ் சமுதாயம் இரு பெரும் பிரிவுகளை கொண்டது.பண்பட்ட இலக்கிய சமுதாயம்.இன்னொன்று கரடுமுரடான சமுதாயம். இதனை வேறு வகையில் கூட கூறலாம் ;ஒன்று நாகரிக சமுதாயம் மற்றொன்று காட்டு மிராண்டி(அநாகரிக) சமுதாயம்.
நாகரிக சமுதாயம் இலக்கியங்கள் படைத்தது,மொழி சிறப்பை பாதுகாத்து மற்ற இணை மொழிகளான தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஒரியா போன்ற மொழிகள்,சமத்கிருதத்தோடு இணைந்து உருவாக தமிழ் மூல மொழியாக விளங்கியது.இன்றும் விளங்குகிறது.
உண்மை இலக்கியங்கள் படைத்த தமிழ் சமுதாயம்,சமத்கிருதம் வந்தபின் இறைவனை படைத்து இல்லாததையும் இருப்பது போல் பாவித்து சமய இலக்கியங்கள் ஏராளமாக இயற்றப்பட்டன.அவை சைவ இலக்கியங்கள் எனவும் வைணவ இலக்கியங்கள் எனவும் பெயர் பெற்றன.சைவக் கடவுளுக்கு ஆதி சிவம் என்றும் ஒரு பெயருண்டு; ஆனால் ஆதி வைணவம் என்று ஒன்று இல்லை. காரணம் தமிழ் கண்டது சைவம் மதம் மட்டுமே ஆரியர்கள்,தமிழர்களிடையே சமத்கிருதம் திணித்தது தமிழில் வைணவ மதத்தை பரப்பினர்.
இன்றளவும் பண்பட்ட தமிழ் இலக்கிய சமுதாயம் பிளவு படவே இல்லை.ஆனால் முரண்பட்ட முரட்டு தமிழ் சமுதாயம் பிளவு பட்டு பல மத மற்றும் சாதிகளுக்கு வித்திட்டது.அந்த முரண்பட்ட சமுதாயத்துக்கு வீர பரம்பரை எனவும் கங்கை கொண்டான் கடாரம் வென்றான் எனவும் புகழ் பாடி இலக்கியங்கள் தோன்றின.முரட்டு மன்னர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன.அன்று மயங்கிய முரட்டு தமிழ் சமுதாயம் இன்னும் தெளியவில்லை.
மனிதர்களை ஆளவேண்டும் என ஆசைப்பட்டவர்கள்,இவர்களுக்கு கல்வி அறிவே இல்லாமல் பார்துக்கொண்டார்கள். இதன் காரணமாக வெய்யில் தமிழ் சமுதாயம் எனவும்,மற்றொன்று நிழல் தமிழ் சமுதாயம் எனவும் உருவாயிற்று. இதைத்தான் நாகரிக மற்றும் அநாகரிக தமிழ் சமுதாயம் என ஆரம்பத்தில் கூறினேன்.
நிழல் தமிழ் சமுதாயம் மானம் காக்கும் தொழிலான ஆடைத்தயாரிப்பு மற்றும் மொழி மானம் காக்கும் இலக்கண இலக்கியத் தயாரிப்பு தொழிலை பார்துக்கொண்டது.
வெய்யில் தமிழ் சமுதாயம் உயிர்காக்கும் விவசாயக்கூலிகளாக,வீடுகட்டும் கூலிகளாக,வாழ்ந்தனர்; இன்றளவும் வாழ்கின்றனர்.
அந்த இரண்டு வகையான சமுதாயத்தை சார்ந்தவர்களும் இங்கே கூடியிருக்கின்றனர்.நான் சாதியம் பேசவில்லை. தமிழில் இறைவழிபாட்டு இலக்கியங்கள் தோன்றியபின்தான் சாதியம் தோன்ற காரணமாயிற்று.
கம்பனுக்குப்பின் ஒரு இலக்கிய காவியம் தோன்றவில்லை என தமிழ் சமுதாயம் ஏங்கிய நேரத்தில் இன்று நம்காலத்து கம்பன் என வருணிக்கப்படும் இங்கே இந்த விழாவுக்கு தலைமை ஏற்க இசைவு தந்திருக்கும் முத்தமிழ் புலவர்,
இளய பல்லவன் கருணாகரத் தொண்டைமான் எனும் காபியத்தை இயற்றியவருமான திரு செம்மங்குடி துரையரசன் முரட்டு தமிழ் சமுதாயத்தின் வழித்தோன்றல்.பரணி பாடப்பட்ட கருணாகரனின் வாரிசு.
பண்பட்ட தமிழ் சமுதாயத்தின் 19-ம் நூற்றாண்டின் தன்னிகரற்ற புலவரும் மனோன்மணியம் இயற்றிய சுந்தரம் பிள்ளை மற்றும் 20-ம் நூற்றாண்டின் பகுத்தறிவு சிந்தனைக் கவியின் வழித்தோன்றல்கள்,ஏகலைவன் வம்சா வழியினராக வந்துள்ள தமிழ்மகனைப் பாராட்ட இங்கே வீற்றிருப்பது இந்த விழாவுக்கு இன்னொரு சிறப்பு.
அப்படி அந்த முரட்டு சமுதாயத்துக்கு சொந்தக்காரரான திரு தமிழ் மகன் எம் சொந்தம் என்பதில் எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன் .பண்பட்ட தமிழ் இலக்கியத்தின் குஞ்சுகாளன சிறுகதை மற்றும் நெடுங்கதைகளை இயற்றி வருகிறார்.சிறு மற்றும் நெடுங்கதைகளை பாமர இலக்கியம் என்றே கூறலாம்.
எழுத்தாளர் தமிழ் மகன் வெய்யில் தமிழ் சமுதாயத்தின் வெளிப்பாடு,சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் புகழ்பெற்ற தமிழ் வார இதழில் எழுதி வருகின்றார்.
சிறந்த பொழுது போக்கு தன்மைகளை கொண்ட சுவை மிக்க கதைகளை படைத்துள்ளார்.இவர் மண்ணின் மைந்தர்களின் மாண்புகளை வெளிப்படுத்துகிறார். அவற்றுள் சிறப்பானது வெட்டுப்புலி,மற்றும் தற்போது ஆனந்த விகடனில் வெளி வரும் ஆபரேசன் நோவா .
இது ஒரு சிறந்த அறிவியலைச் சார்ந்த கற்பனைத்தொடர்-ஒரு நெடுந்தொடர். புகழ் பெற்ற அறிவியலாளரும் அறிவியல் தொடர் கதைக்கு முன்னோடியுமான எழுத்தாளர் சுஜாதாவின் சாயல் இவர் கதையில் காணமுடிகிறது.எழுதுவது இவர் குலத்தொழிலல்ல.இக்கால மாற்றம் இவரை கதை எழுத தூண்டியது.
இங்கே வீற்றிருக்கும் இருவேறு தமிழ் சமுக சான்றோர்கள் இவருக்கு வழி காட்ட வேண்டும் வாழ்த்த வேண்டும். தமிழ் சமுதாயத்திற்கு மட்டுமல்ல அனைத்து சமுக மக்களுக்கும் பயன் படும் வகையில் இவர் எழுதும் கதைகளில் அறிவியல் சார்ந்த மற்றும் பகுத்தறிவாத சிந்தனைகளை வெளிப்படுத்தவேண்டும் என இத்தருணத்தில் இவருக்கு விண்ணப்பிக்கிறேன்.இவர் மேலும் பல்லாண்டு வாழ்ந்து அதுவும் நோயில்லாமல் வாழ்ந்து பல சிறந்த பகுத்தறிவு சிந்தனை வளர்க்கும் கதைகளை வெளியிடவேண்டும் என வாழ்த்துகிறேன்.
Thursday, February 20, 2014
Subscribe to:
Comments (Atom)