ஏழாம் அறிவு இயக்ககம்
தாய்த்தந்தையர் கோயில் மற்றும் கல்வெட்டுத் திறப்பு அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்!
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு2044 கார்த்திகை 20-ம் நாள் (06.12.13) எமது கண்கண்ட தெய்வங்களான தாய்க்கு40-ம் ஆண்டு நினைவு நாளும்,எமது தந்தைக்கு 20-ம் ஆண்டு நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதால்,நான் பிறந்த மண்ணில் நான் நிறுவிய ஏழாம் அறிவு இயக்ககம்,இயக்கத்தின் சில முக்கிய குறிக்கோள்கள் அடங்கிய கல்வெட்டு திறக்கப்பட உள்ளது. அவ்வமயம் தாங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சினை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
கல்வெட்டுத் திறப்பாளர்,
முத்தமிழ் புலவரும்,இளையபல்லவன் கருணாகரத்தொண்டைமான்
என்கிற வரலாற்று காப்பிய நூலாசிரியருமான
திரு செம்மங்குடி துரையரசன் அவர்கள் இசைவு தந்துள்ளனர்
முன்னிலை: பேராசிரியர் திருமதி மங்கலம்துரையரசன்,MA.Bed,
புலவர் நாகலிங்கம், MABEd,உதவித் தலைமைப்பேராசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி,பூண்டி
புலவர் சேகர்MABEd,தலைமை ஆசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி ஏகாட்டூர்
திரு. ஆ.யுகாபதி,கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்
, மற்றும் கள்ளூர் கிராம மக்கள்
விழா நாள்: 06.12.13 காலை 11 மணி அளவில்.
இடம் : தெய்வத்திரு படைவீட்டு வன்னியர்,
தெய்வத்திருமதி கண்ணம்மா படைவீடு
இணையரின் நினைவு இல்லம் மற்றும்
ஏழாம் அறிவு இயக்ககம்
கள்ளூர் கிராமம்
ஆரணி வழி-கும்மிடிப்பூண்டி வட்டம்
தங்கள் வரவை அன்புடன் எதிர் பார்க்கும்
புதுமுறைச்சிந்தனைச் சிற்பி
படைவீடு திருவேங்கடம்
(நிறுவனர் –ஏழாம் அறிவு இயக்கம்)
ராசாத்தி திருவேங்கடம்
திரு.வினோத் (விமானப்பொறியாளர்)
திருமதி சுதாவினோத் B.Com
திரு. வசந்த் (இணைய தளப்பொறியாளர்)
கல்வெட்டில் காணலாம்,
* உலகைப்படைத்தது கடவுளாக இருக்கட்டும்
அதைப்பூட்டிவைத்து பூஜை செய்தால் உன்
பேச்சை கேட்குமா?...
* கோயிலில் உண்டியல் கூடாது…
* கடவுளைவணங்கும் உழைப்பாளிக்கும்
கடவுளுக்கும் மத இடைத்தரகர்கள் கூடாது…
இதுபோன்ற சிந்தனைகள் பல.. (visit:www.thiru-rationalism.blogspot.in)